search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
    X

    வாழப்பாடியில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட வக்கீல்கள்.

    வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    • சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    • சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    சேலம் மாவட்டம் வாழப்பாடி நீதிமன்றத்தின் முன், இந்திய சட்டங்களுக்கு பெயர் மாற்றம் செய்ததை கண்டித்து, வக்கீல்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சிய சட்டம் ஆகியவற்றின் பெயர்களை இந்தி மொழியில் மாற்றி அமைத்து, மத்திய அரசு புதிதாக தோற்றுவித்த புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும், இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வாழப்பாடியிலுள்ள மாவட்ட குற்றவியல் மற்றும் உரிமையில் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், வாழப்பாடி வழக்கறிஞர் சங்கத் தலைவர் திரவியம், செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சீனிவாசன் மற்றும் வக்கீல்கள், மத்திய அரசின் புதிய சட்ட வரையறைகளை கண்டித்தும் எதிர்த்தும் கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×