search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கும்பகோணத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்
    X

    கும்பகோணத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    கும்பகோணத்தில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்

    • இ-பைலிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் முறையை திரும்ப பெற வேண்டும்.
    • விசாரணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன.

    கும்பகோணம்:

    கோர்ட்டுகளில் இ-பை லிங் முறையில் வழக்குகளை தாக்கல் செய்யும் முறையை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி கும்பகோணத்தில் வக்கீல்கள் கோர்ட்டை புறக்க ணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல்கள் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.

    செயலாளர் செல்வம், மூத்த வக்கீல் சுகுமாறன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் மூத்த வக்கீல்கள் சக்கரபாணி, வைத்திய நாதன், முன்னாள் சங்க தலைவர் ராஜசேகர், துணைத்தலைவர் ரவிச்சந்தி ரன், பொருளாளர் ராஜசீனி வாசன், சசிகலா, பானுமதி, அனுராதா உள்பட ஏராள மான வக்கீல்கள் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த போராட்டத்தால் நேற்று கோர்ட்டில் விசார ணைக்கு வந்த வழக்குகள் அனைத்தும் வேறு தேதிக்கு மாற்றி வைக்கப்பட்டன.

    Next Story
    ×