search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கார் மோதி வக்கீல் படுகாயம்
    X

    கார் மோதி வக்கீல் படுகாயம்

    • கார் மோதி வக்கீல் படுகாயம் அடைந்தார்
    • பெட்ரோல் இல்லாமல் நின்ற போது சம்பவம்

    அரியலூர்

    அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே கோடாலி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிங்காரவேலன் (வயது 56). இவர் ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் அரியலூர் செல்வதற்காக தனது இரு சக்கர வாகனத்தில் ஜெயங்கொண்டத்தில் இருந்து திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது மணகெதி அருகே பெட்ரோல் இல்லாமல் நின்றது. அப்போது அந்த வழியாக தருமபுரி மாவட்டம் கத்திரிப்பெட்டி கிராமத்தை சேர்ந்த சக்தி வேல் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக சிங்காரவேலன் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிங்காரவேலனை அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் மீட்டு ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த விபத்து தொடர்பாக சக்தி மீது உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×