search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாலைமறியல்"

    • 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.
    • திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    மதுரை:

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட தலைநகரங்களில் இன்று ஜாக்டோ-ஜியோ சார்பில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

    அதன்படி மதுரை பெரியார் பஸ் நிலையம் பகுதியில் உள்ள கட்ட பொம்மன் சிலை சந்திப்பில் இன்று காலை ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செல்வம் தலைமையில் பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோர் திரண்டனர். பின்னர் அவர்கள் மெயின் ரோட்டில் அமர்ந்து திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர்.

    தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் புதிய ஓய்வு திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும். அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலுள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகை அரசு பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டதை உடனடியாக வழங்க வேண்டும்.

    உள்ளாட்சி அமைப்பு களில் பல்வேறு அரசு துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்கள் நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் போலீசாருக்கும், அவர்களுக்கும் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் மறியல் செய்த பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் செல்வம் கூறுகையில், தேர்தல் கால வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும். அரசு இது தொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி 5-ந் தேதி முதல் 9-ந் தேதி வரை கட்சித் தலைவர்களை சந்தித்து ஆதரவு கேட்க உள்ளோம். பிப்ரவரி 10-ந் தேதி மாவட்ட அளவில் வேலை நிறுத்த போராட்டம் தொடர்பாக ஆயத்த மாநாடு நடத்தப்படும். தொடர்ந்து பிப்ரவரி 15-ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய உள்ளோம். 26-ந் தேதி முதல் கால வரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார். 

    • 87 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.
    • திறந்த வெளியில் மாணவ, மாணவிகள் இயற்கை உபாதைகளை கழிக்க வேண்டியுள்ளது.

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டை உலிமங்கலம் கிராமம். இங்கு அரசு நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது.இந்த பள்ளியில் 87 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள கழிப்ப றைகள் சுகாதாரமற்ற நிலை யில் உள்ளதால் அவற்றை பயன்படுத்த முடியாமல் கடந்த 2 ஆண்டுகளாக மூடி வைக்கப்பட்டுள்ளது.

    பள்ளியில் உள்ள பழைய கழிவறைகளை இடித்து விட்டு புதிதாக கட்ட வேண்டும் என பெற் றோர்கள் பள்ளி தலைமை யாசிரியரிடம் பல மாதங்க ளாக கோரிக்கை விடுத்து வந்துள்ளனர். ஆனால் கெலமங்கலம் ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் கல்வித்துறை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதனால் பள் ளிக்கு வெளியே திறந்த வெளியில் மாணவ, மாண விகள் இயற்கை உபாதை களை கழிக்க வேண்டி யுள்ளது. அப்படி சென்ற போது மாணவி ஒருவரது காலில் கண்ணாடி துண்டு குத்தியதில் காயமடைந்தார். இந்த அவல நிலையினை மாணவ-மாணவிகள் வீட்டிற்கு சென்று தங்கள் பெற்றேர்களிடம் கூறியுள்ள னர்.

    இதனால் ஆத்திரம டைந்த பெற்றோர்கள் தங்க ளது பிள்ளைகளுடன் நேற்று காலை பள்ளி முன் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். இது குறித்து தகவல் அறிந்த தேன்கனிக்கோட்டை வருவாய் ஆய்வாளர் சலீம் பாஷா, மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அடிப்படை வசதிகள் மேற் கொள்ள நடவடிக்கை எடுக் கப்படும். என உறுதியளித்த பின்னர் மாணவர்கள் பேராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து பள்ளிக்கு சென்றனர்.

    • அய்யன்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் பூமலூர் ஊராட்சிக்குட்பட்ட பள்ளிபாளையம் பஸ்நிறுத்தம் பகுதியில் இருந்து கிடாதுறைபுதூர் பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள தார்சாலையில் நேற்று இரவு பெய்த மழையால் மழைநீரானது குளம் போல் தேங்கி நின்றது.இதனால் இரு சக்கர ,நான்கு சக்கர வாகனங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

    இதனால் ஆத்திரமடைந்த பள்ளிபாளையம் மற்றும் கிடாதுறைபுதூர் கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் இன்று (வியாழன்) காலை 9 மணிக்கு பள்ளிபாளையம் பகுதியில் இருந்து அய்யன்கோவில் செல்லும் சாலையின் குறுக்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்து வந்த மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் பூமலூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.பின்னர் உடனடியாக பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு மழைநீர் தேங்கி நிற்காத வகையில் அப்பகுதியில் உள்ள கழிவுநீர் கால்வாய்க்குள் மழைநீர் செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இதைத்தொடர்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • குன்னூர்-ஊட்டி சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
    • பெண்கள் உள்பட 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அருவங்காடு,

    நீலகிரிக்கு வரும் சுற்றுலா வாகனங்கள் குன்னூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக ஊட்டி செல்வது வழக்கம்.

    ஆனால் இந்த ரோடு தற்போது வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு குண்டும் குழியுமாக காட்சி அளிக்கிறது.

    இதனால் வாகனங்கள் பழுது அடைவதுடன் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது.

    குன்னூர்-ஊட்டி சாலையை சீரமைப்பது குறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் அமைப்பாளர் சுதாகர் தலைமையில், குன்னூர் லெவல்கிளாஸ் பகுதியில் சாலை மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

    அப்போது சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை அதிகாரிகள் மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்ட பெண்கள் உள்பட வி.சி.க நிர்வாகிகள் 32 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.

    • போலீசார் பேனர்களை அகற்றி வாகனங்களை பறிமுதல் செய்ததால் ஆவேசம்
    • போலீசாருடன் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டதால் பரபரப்பு

    கருமத்தம்பட்டி,

    பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை இன்று பல்லடம் சட்டமன்ற தொகுதி மற்றும் சூலூர் சட்டமன்ற தொகுதியில் இன்று மாலை நடைபயணம் மேற்கொள்ள உள்ளார்.

    சூலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கருமத்தம்பட்டி பகுதியில் அவரது நடைபயணம் நடக்கிறது. இதையடுத்து அவரை வரவேற்கும் விதமாக கருமத்தம்பட்டி நகர பா.ஜ.க.வினர் பல்வேறு இடங்களில் பிரம்மாண்ட விளம்பர பேனர்கள் வைத்தனர்.

    இந்த நிலையில் முறை யான அனுமதி பெறாமலும், நகராட்சி அனுமதியின்றியும் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாக கூறி போலீசார் பேனர்களை அகற்றியதுடன், பேனர் ஏற்றி வந்த வாகனங்களையும் பறிமுதல் செய்தனர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் 100-க்கும் மேற்பட்ட பா.ஜ.கவினர் கரும த்தம்பட்டி நால்ரோட்டில் குவிந்தனர். அவர்கள் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை விடுவிக்க கோரி சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர்.

    இதுபற்றிய தகவல் அறிந்ததும் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு தையல்நாயகி, கரும த்தம்பட்டி இன்ஸ்பெக்டர் அன்னம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

    அவர்கள், போராட்ட த்தில் ஈடுபட்ட பா.ஜ.க வினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள் அங்கிருந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட னர். இதையடுத்து போரா ட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய முயன்றனர். இதனால் போலீசாருக்கும், பா.ஜ.க வினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    போலீசார் தொடர்ந்து போராட்ட த்தில் ஈடுபட்டால் கைது செய்யப்படு வீர்கள் என எச்சரிக்கை விடுத்ததை அடுத்து பா.ஜ.கவினர் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

    இந்த சாலைமறியல் காரணமாக அந்த சாலையில் சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    • 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டணம்-நாயக்கம்பாளையம் சாலையில் திரண்டனர்
    • சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிப்பு

    சூலூர்,

    கோவை சூலூர் அடுத்த பட்டணம் ஊராட்சியில் மசநாயக்கன் கோவில் பகுதி உள்ளது.

    இந்த பகுதிக்கு சாலை ஒன்று செல்கிறது. இந்த சாலை பல ஆண்டுகளாகவே குண்டும், குழியுமாக காணப்பட்டது. இதனால் இந்த சாலையில் வாகனங்கள்செல்வதே சிரமமாக இருந்து வந்தது. இந்த சாலையை சீர் செய்ய கோரி பொதுமக்கள் பல முறை தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

    தற்போது கோவை மாவட்டத்தில் மழை பெய்து வருகிறது. இந்த மழைக்கு, இந்த சாலையானது சுத்தமாக சேதமாகி விட்டது. இதனால் சாலை பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.

    இந்த நிலையில் சாலையை சீரமைத்து தரக்கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பட்டணம்-நாயக்கம்பாளையம் சாலையில் திரண்டனர்.

    பின்னர் சாலையில் அமர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சூலூர் போலீசார் , பட்டணம் ஊராட்சி தலைவர் கோமதி செல்வராஜ் பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது பொதுமக்கள் தங்களது கோரிக்கை நீண்ட நாட்களாக நிறைவேற்றப்படாமல் உள்ளது. உடனடியாக சாலையை சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    விரைவில் சாலை செப்பனிடப்படும் என பட்டணம் ஊராட்சி தலைவர் கூறியதை அடுத்து, அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அங்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    • ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சினை
    • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்
    • 100 பேர் கைது


    திருச்சி,

    திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் பல ஆண்டு காலமாக அடிமனை பிரச்சனை இருந்து வருகிறது. இந்நிலையில் ஸ்ரீரங்கம் வட்டம் வெள்ளி திருமுத்தம் கிராமத்தில் புதிய பெயரில் பத்திரங்கள் பதிய கூடாது என ஸ்ரீரங்கம் சார்பதிவாளார் அலுவ லகத்திலும், மேற்கண்ட பகுதியில் புதிய கட்டிடங்கள் கட்டுவதற்கு கட்டிட அனுமதி, திட்ட அனுமதி, வரைபட அனுமதி, கட்டிட நிறைவு சான்று போன்ற எந்த அனுமதி சான்றுகளும் கொடுக்கக் கூடாது என திருச்சி மாநகராட்சி ஸ்ரீரங்கம் கோட்ட அலுவலகத்திலும், புதிய பெயரில் இந்த பகுதிகளில் யாருக்கும் பட்டா வழங்கக்கூடாது என ஸ்ரீரங்கம் தாசில்தார் அலுவலகத்திலும் ஸ்ரீரங்கம் கோவில் நிர்வாகம் தலையிட்டு மேற்கண்ட பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.


    இதனால் ஸ்ரீரங்கம் பகுதியில் பல ஆண்டு காலமாக வாழ்ந்து வரும் பொதுமக்கள் இடங்களை விற்பதற்கும், வங்கியில் வைத்து கடன் வாங்கு வதற்கு, உயில் எழுத, பழைய வீடுகளை இடித்து புனரமைப்பு செய்ய முடி யாமல் தவித்து வருகின்ற னர். எனவே ஸ்ரீரங்கம் பகுதி பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான அடிமனை பிரச்சனையில் தமிழக அரசும், இந்து சமய அறநிலைத்துறையும் தலையிட்டு ஸ்ரீரங்கம் அடிமனை பிரச்சனைக்கு உரிய தீர்வு காண வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொது மக்களுடன் இணைந்து நேற்று ஸ்ரீரங்கத்தில் உண்ணாவிரத போராட்ட த்தில் ஈடுபட முயன்றனர்.


    அப்போது அங்கு வந்த போலீசார் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி இல்லை என தெரிவித்தனர்.


    இதையடுத்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் தர்மா தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட மத்தியகட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் லெனின், ரெங்கராஜன், மாவட்ட க்குழு உறுப்பினர் சந்தா னம், கிளைசெயலாளர்கள், கட்சி உறுப்பினர்கள், ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், ஸ்ரீரங்கம் மக்கள் நலச்சங்க தலைவர் மோகன்ராம், ஸ்ரீரங்கம் அடிமனை ஒருங்கிணைப்புக்குழு வரதராஜன், மாருதி ராமசாமி, பன்னீர்செல்வம், சின்னகண்ணு உள்பட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்கள் உண்ணாவிரதம் இருப்பதாக அறிவித்துள்ளனர்.


    • போக்குவரத்து பாதிப்பால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்துநின்றன
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் ஊட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட உல்லத்தி ஊராட்சியில் கல்லட்டி பகுதி உள்ளது.இந்த பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இதில் மக்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஊராட்சி மூலமாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக இந்த பகுதிக்கு முறையாக தண்ணீர் வரவில்லை என தெரிகிறது.இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் காலிக்குடங்களுடன் ஊட்டி-கல்லட்டி சாலையில் குவிந்தனர்.

    பின்னர் அந்த சாலையில் அமர்ந்து சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட–வர்கள், தங்கள் பகுதிக்கு தண்ணீர் வந்து பல நாட்கள் ஆகிறது. தண்ணீர் வராததால் நாங்கள் மிகவும் சிரமப்படுகி றோம். எனவே தண்ணீர் வழங்க நடவடிக்ைக எடுக்க என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் நடத்து கிறோம் என தெரிவித்தனர்.

    பொதுமக்களின் சாலை மறியல் போராட்டம் பற்றிய தகவல் அறிந்ததும் போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் பேச்சு வர்த்தை யில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களின் சாலை மறியலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணி வகுத்து நின்றன. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவி கள், பணிக்கு செல்வோர், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்பட்டனர்.

    • குடிநீரில் கழிவுநீர் கலந்து வருவதை சரி செய்ய பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
    • பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு ஏற்பட்டது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 72-வது வார்டு பைக்காரா பகுதியில் இ.பி. காலனி, முத்துராமலிங்க புரம், திருவள்ளுவர் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதி களில் ஆங்காங்கே கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது.

    மேலும் குடிநீரோடு கழிவுநீர் சேர்ந்து வருவதால் இப்பகுதியில் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பல்வேறு தெருக்களில் குடிநீர் சரி வர வருவ தில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறபப்படுகிறது.

    இதுகுறித்து சில நாட்க ளுக்கு முன்பு நடந்த மாநகராட்சி குறைதீர்க்கும் முகாமிலும் புகார் அளித்த தாகவும், ஆனால் நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிைலயில் இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் திருப்பரங்குன்றம் மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவல் அறிந்து மேற்கு மண்டல தலைவர் சுவிதா விமல் மற்றும் அதிகாரிகள் அந்த பகுதிக்கு வந்தனர். அவர்களிடம் தங்களது குறைகளை முறையிட்டு பெண்கள் வாக்குவாதம் செய்தனர்.

    அவர்களை சமாதானப் படுத்திய சுவிதா விமல் உரிய நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தார். அதன் பின்னர் பொது மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    பிரதான சாலையில் பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் மதுரை- திருமங்கலம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு மண்ட லத்தில் மொத்தம் 21 வார்டுகள் உள்ளன. மேற்கு மண்டலத்திற்கு என தனியாக பொக்லைன், ஜே.சி.பி. உள்ளிட்ட எந்திரங்கள் மாநகராட்சி யால் வழங்கப்படவில்லை.

    இதனால் வேறு மண்ட லங்களில் உள்ள எந்திரங் களை நாட வேண்டி உள்ளது. அங்கும் பணிகள் இருக்கும்பட்சத்தில் எந்திரங்கள் கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது. இதனால் கழிவுநீர், மழைநீர் வடிகால் பாதைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • குடிநீர் வசதி கோரி பெண்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல்
    • அறந்தாங்கி அருகே நானாக்குடியில் சாலை மறியல்

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவ ட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார்கோ வில் தாலுகா நானாக்குடி கிரா மத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரு கின்றன.

    இந்நிலையில் இங்கு கடந்த ஓராண்டுக்கும் மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருவதாகக் கூறப்படு கிறது. இதனை வலியுறுத்தி ஊராட்சி நிர்வாகம் மற்றும் வட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    ஆனால் இதுவரை எந்த வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததை யடுத்து ஆத்திரமடைந்த பொதுமக்கள் காலிக்குட ங்களுடன் அறந்தாங்கி ஆவுடையார்கோவில் சாலையிலுள்ள நானாகுடி முக்கத்தில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தினை தொடர்ந்து சம்பவ இட த்திற்கு விரைந்த ஆவு டையார்கோவில் காவல்த்துறையினர் மறி யவில் ஈடுபட்டவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதி அளித்தனர்.

    அதிகாரிகளின் உறுதி யளிப்பை தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது. மறியல் போராட்டத்தால் அறந்தா ங்கி ஆவுடையார்கோவில் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சாலை மறியலில் ஈடுபட்ட போது எடுத்தப்படம்.

    • ஆசிரியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    விருதுநகர்

    தமிழகம் முழுவதும் பள்ளி ஆசிரியர்களுக்கு எண்ணும் எழுத்தும் பயிற்சி முகாம் இன்று நடைபெறும் என தமிழக பள்ளி கல்வித் துறை அறிவித்தி ருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் எண்ணும் எழுத்தும் பயிற்சி இன்று நடந்தது.

    இந்த நிலையில் விருது நகர் மாவட்ட பள்ளி ஆசிரி யர்களுக்கு விருது நகர்-அருப்புக்கோட்டை சாலையில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. இன்று காலை பயிற்சி நடைபெறும் கல்லூரிக்கு வந்த

    200-க்கும் மேற்பட்ட ஆசிரி யர்கள் அங்கு போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் இருந்ததால் அதிருப்தியடைந்தனர். அவர்கள் பயிற்சியை புறக்கணித்து திடீரென சாலை மறியலில் ஈடுபட்ட னர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ஆசிரியர்களுடன் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். போதிய அடிப்படை வசதிகள், போக்குவரத்து வசதிகள் இல்லாத கல்லூரியில் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த மையத்திற்கு வந்து செல்வது மற்றும் பயிற்சியில் பங்கேற்பது சிரமமாக உள்ளதாகவும், இதனால் பயிற்சியை வேறு மையத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்போது அவர்கள் கூறினர்.

    போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆசிரியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் அங்கிருந்த கலைந்து செல்ல மறுத்த ஆசிரியர்கள் தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சாலையில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டுள் ளது. இதுகுறித்து உயர் அதிகாரிகளுக்கு போலீசார் தகவல் கொடுத்தனர். இதையடுத்து கல்வித்துறை அதிகாரிகள் அங்கு விரைந்துள்ளனர்.

    • 100 நாள் வேலையில் நிலுவை சம்பளம் வழங்கவில்லை
    • பொதுமக்கள் சாலை மறியல்


    துறையூர், திருச்சி மாவட்டம் துறையூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொட்டையூர் ஊராட்சி சங்கம்பட்டி கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாய தொழிலாளர்கள் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பயனடைந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 1 வார காலமாக ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வேலை வழங்கப்படாமலும், ஏற்கனவே செய்யப்பட்ட வேலைக்கு சம்பள பணம் பட்டுவாடா செய்யப்படாமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்டித்து சங்கம்பட்டி கிராம பொதுமக்கள் சங்கம்பட்டி - எரகுடி சாலையில் திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனை அறிந்த துறையூர் போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது தற்சமயம் ஏற்கனவே தேர்வு செய்யப்பட்ட இடம் மழையின் காரணமாக சேறாக இருப்பதால், புதிய இடம் தேர்வு செய்யப்பட்டு பணி வழங்கப்படும் எனவும், சம்பள பணம் இந்த வாரத்தில் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் சங்கம்பட்டி- எரகுடி சாலையில் ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    ×