search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சாம்பியன்"

    • மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நாலுமாவடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற எஸ்.எம்.வி.கே.சி. அணிக்கு ரூ.50 ஆயிரமும், சுழற்கோப்பையும், வழங்கப்பட்டது.

    குரும்பூர்:

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறையும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகமும் இணைந்து 7-ம் ஆண்டு 'ரெடீமர்ஸ்' கோப்பைக்கான மாநில அளவிலான பொங்கல் பண்டிகை மின்னொளி கபடி போட்டி யை நடத்தினர்.

    போட்டிகள் நாலுமாவடி காமராஜ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர்.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நாலுமாவடி ஜெ.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-ம் இடத்தைப் பிடித்த அனத்தங்கரை அணிக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம், நான்காம் பரிசாக தூத்துக்குடி கரிகாலன், என்.எப்.சி. அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-வது இடத்தைப் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாங்காபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயிரமும், திண்டுக்கல் சக்தி கல்லூரி நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் 3-ம், நான்காம் பரிசை பெற்று தலாரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர்.

    விழா நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கினார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். ரொக்கப் பரிசையும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர், கபடி கழகச் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்வாரிய விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமையாசிரியர் திரு நீலகண்டன், அ.தி.மு.க. பிரமுகர்கள் திருப்பாற்கடல், விஜயகுமார், ராஜ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பணிக்க நாடார் குடியிருப்பு பிரபாகரன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி தலைவர் அழகேசன், அங்கமங்கலம் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளரும், அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்சார வாரியம் விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார், ஊழிய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • பெண்கள் கையுந்து பந்து போட்டியில் ஜமால் முகமது கல்லூரி அணி சாம்பியன் பட்டம் பெற்றது
    • கையுந்து பந்து போட்டியில் 18 கல்லூரி அணிகள் கலந்துகொண்டது

    திருச்சி:

    திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரிகளுக்கு இடையேயான பெண்கள் கையுந்து பந்து போட்டி திருச்சி, அண்ணா விளையாட்டரங்கில் கடந்த 17, 18 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியினை புதுக்கோட்டை மேலசிவபுரி கணேசர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி நடத்தியது.இதில் திருச்சி, திருவாரூர், நாகை, தஞ்சை, புதுகை, பெரம்பலூர், அரியலூர், கரூர், மயிலாடுதுறை ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு இடையான கல்லூரி அணிகள் பங்கேற்றன.18 கல்லூரி அணிகள் கலந்துகொண்ட கையுந்து பந்து போட்டியில் திருச்சி, ஜமால் முகமது கல்லூரி, கரூர் அரசு கல்லூரியை 25-13, 25-14 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று முதலிடம் பிடித்தது. இதன் மூலம் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவிகளுக்கான வாலிபால் போட்டியில் சாம்பியன் பட்டத்தை பெற்றது.மூன்றாவது இடத்திற்கு நடைபெற்ற போட்டியில் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி, கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியை 25-13, 22-25, 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று மூன்றாவது இடம் பிடித்தது.வெற்றி பெற்ற வீராங்கனைகளை ஜமால் முகமது கல்லூரியின் செயலரும், தாளாளருமான ஏ.கே.காஜா நஜீமுதீன், பொருளாளர் எம்.ஜே.ஜமால் முஹம்மது, உதவிச்செயலர் கே.அப்துஸ் சமது, கௌரவ உறுப்பினர் முனைவர் கே.என்.அப்துல்காதர் நிஹால் முதல்வர் முனைவர் கே.என்.முகமது பாசில் மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் பி.எஸ்.ஷாஇன்ஷா ஆகியோர் பாராட்டி வாழ்த்தினர்.

    • அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.
    • தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    காங்கயம்:

    2022-2023-ம் ஆண்டிற்கான தாராபுரம் குறுமைய அளவிலான குழு விளையாட்டு போட்டிகள் முத்தூர் அரசு மேல்நிலைப்பள்ளியின் சார்பாக பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இதில் தாராபுரம், வெள்ளகோவில், முத்தூர், மூலனூர், காங்கயம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். இதில் காங்கயம் சிவன்மலை ஜேசீஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் குழு போட்டிகளில் 205 புள்ளிகள் பெற்று தாராபுரம் குறுமைய அளவில் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டம் பெற்றனர்.

    தடகள போட்டியில் இந்த பள்ளி 12-ம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி 1,500, 800 மீட்டர் போட்டியில் முதலிடமும், 3 ஆயிரம் மீட்டர் போட்டியில் 2-ம் இடமும் பெற்று தனி நபர் சாம்பியன் பட்டம் பெற்றார். மேலும் 19 வயதுக்குட்பட்ட மாணவர் பிரிவில் ஹரிஸ் குண்டெறிதல், வட்டு எறிதல் போட்டிகளில் முதலிடமும், கோகுல் ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடமும், வட்டு எறிதல் போட்டியில் 2-ம் இடமும், ஹெர்மன் 200 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் 9-ம் வகுப்பு மாணவன் விங்கேஷ்வரன் வட்டு எறிதல் போட்டியில் முதலிடமும் பெற்று மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளையும், பயிற்                சி அளித்த பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள் ஜீவகுமார், ராம்கி ஆகியோரையும், பள்ளி தலைவர் கோபால், தாளாளர் பழனிசாமி, பொருளாளர் மோகனசுந்தரம், அகாடமி டைரக்டர் சாவித்திரி சுப்பிரமணியம், முதல்வர் சுப்ரமணி ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

    • பல்வேறு போட்டிகளில் கலந்துகொண்டு சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.
    • பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் குறுவட்ட அளவில் நடைப்பெற்ற விளை யாட்டுப் போட்டிகளில் தருமை ஆதீனம் மயிலாடுதுறை குருஞானசம்பந்தர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் சுமார் 307 மாணவ-மாணவிகள் கலந்துக் கொண்டு 217 மாணவ-மாணவிகள் அதிகப் போட்டிகளில் வெற்றிப்பெற்று ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை பெற்று பள்ளிக்குப் பெருமைச் சேர்த்துள்ளனர்.

    வெற்றிப்பெற்ற மாணவர்களையும் சாரண-சாரணியர் அமைப்பின் நீண்டக் கால சேவைக்கான மாநில விருதினை பள்ளி கல்வித்துறை அமைச்சரிடம் இருந்து பெற்று வந்துள்ள பள்ளியின் உடற்கல்வி ஆசிரியரும் சாரண-சாரணிய ஆசிரியர் சுந்தர் மற்றும் பயிற்றுவித்த ஆசிரியர்களையும், நிர்வாகக் குழுத் தலைவர் ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள், நிர்வாகச் செயலர் பாஸ்கரன் மற்றும் பள்ளி முதல்வர் சரவணன் ஆகியோரை பள்ளியின் புரவலரும் தருமையாதீனம் 27-வது குருமகாசந்நிதானம் பாராட்டி அருளாசி வழங்கினார்.

    • தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று ஏ.வி.பி., பள்ளி வெற்றி பெற்றனர்.
    • வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளி நிர்வாகம் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    குறுமைய அளவில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் திருப்பூர் திருமுருகன்பூண்டி ஏ.வி.பி. பள்ளி மாணவர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்துள்ளனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்து பந்து போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.

    மேலும் ஆக்கி போட்டியில் மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். கையுந்துபந்து போட்டியில் இளையோர் மற்றும் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், பீச் கையுந்துபந்து போட்டியில் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும், கைப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், வளையப்பந்து போட்டியில் மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும் பெற்று வெற்றி பெற்றனர். உள்ளரங்க விளையாட்டுகளான டேபிள் டென்னிஸ் இளையோர் மற்றும் மூத்தோர் ஆண்கள் பிரிவில் முதல் இடத்தையும், பூப்பந்து இளையோர் ஆண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர். டேபிள் டென்னிஸ் இளையோர், மூத்தோர் மற்றும் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் முதல் இடத்தையும், கேரம் மிக மூத்தோர் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தையும் பெற்றனர்.

    குறுமைய அளவில் நடைபெற்ற தடகளப்போட்டிகளிலும் மூன்றாம் இடத்தை பெற்று வெற்றி பெற்றனர்.அனைத்து பிரிவு விளையாட்டுப் போட்டிகளிலும் வென்று அவிநாசி குறுமைய அளவில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளையும், உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் தாளாளர் கார்த்திகேயன் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பள்ளியின் முதல்வர் பிரியாராஜா , பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் ஆபிதாபானு , ஆசிரியர்கள் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    • 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ எடைப்பிரிவில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.
    • 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடைப்பிரிவில் வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    தஞ்சாவூர்:

    சிஐஎஸ்சிஇ நியூ டெல்லி சார்பில் நடைபெற்ற மாநில கராத்தே போட்டி சென்னை வேல்ஸ் பன்னாட்டு பள்ளி பள்ளியில் நடைபெற்றது.

    இதில் 200க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு சிஐஎஸ்சிஇ பள்ளிகளில் இருந்து கலந்து கொண்டனர்.

    தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளியில் இருந்து 14 வயது மற்றும் 17 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 15 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

    14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் விஷாலினி 42 கிலோ பெண்கள் எடைப்பிரிவில் தங்கப்பதக்கம், சம்ரிதா 26 கிலோ பெண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், தர்ஷன் 60 கிலோ ஆண்கள் எடை பிரிவில் தங்கப்பதக்கம், பக்கா லோகேஸ்வர் ரெட்டி 60 கிலோ மேற்பட்ட எடைப்பிரிவில் தங்கப் பதக்கமும் பெற்றுள்ளனர்.

    14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் விஷ்ணு ராம் 55 கிலோ எடை பிரிவு, ராகினி 50 கிலோ எடை பிரிவில் வெள்ளி பதக்கம் பெற்றுள்ளனர். ஆசிரா 46 கிலோ எடைப்பிரிவு, வருனேஷ் 45 கிலோ எடை பிரிவு,

    சந்தோஷ் 40 கிலோ எடை பிரிவு, கமலேஷ் 50 கிலோ எடைபிரிவு, பிரணவ் 35 கிலோ எடைப் பிரிவிலும் வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    மற்றும் 17 வயதுக்குட்பட்ட ஆண்கள் பிரிவில் சஞ்சய் 58 கிலோ எடை பிரிவிலும் ,ஏகநாதன் 45 கிலோ எடை பிரிவிலும், நவ்ஷத் 66 கிலோ எடை பிரிவிலும், வெண்கல பதக்கம் பெற்றுள்ளனர்.

    லீனா ஸ்ரீ 14 வயது உட்பட்ட பெண்கள் பிரிவில் 50 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டார்.

    கலந்து கொண்ட பதினைந்து பேர்களில் 14 பேர்கள் 4 தங்கம், 2 வெள்ளி, 8 வெண்கல, பதக்கங்கள் பெற்று சாதனை படைத்த தோடு 14 வயதுக்கு உட்பட்ட ஆண்கள் பிரிவில் ஓவரால் சாம்பியன்ஷிப்பும், 14 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவில் ஓவரால் சாம்பிய ன்ஷிப்பும், பெற்று தஞ்சை கிறிஸ்து பன்னாட்டு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    மாணவர்கள் அனை வரும் ஹயாஷிகா கராத்தே கழகத்தின் தஞ்சை செயலாளர் மற்றும் பள்ளியின் தலைமை கராத்தே பயிற்சியாளர் ராஜேஷ் கண்ணா தலைமையில் கலந்து கொண்டு பதக்கங்களை தட்டிச் சென்று சாதனை படைத்துள்ளனர்.

    வெற்றி பெற்ற மாணவர்கள் அனைவ ருக்கும் மற்றும் கராத்தே பயிற்சியாளர்களுக்கும் பள்ளியின் தாளாளர் திரு ஜெரால்ட் பிங்னோரா ராஜ் மற்றும் பள்ளியின் இயக்குனர் திருமதி ரபேக்கா , பள்ளியின் முதல்வர் திருமதி விஜயலட்சுமி' ஆகியோர் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் ஷியாம் சுந்தர் ஆகியோர் மாணவர்களுக்கு பாராட்டுகளையும் வாழ்த்து களையும் தெரிவித்துள்ளனர்.

    தங்கப்பதக்கம் வென்ற விஷாலினி, சம்ரிதா, தர்ஷன், பக்கா லோகேஸ்வர் ரெட்டி ஆகியோர் அடுத்த மாதம் பெங்களூரில் நடைபெறவுள்ள தேசிய போட்டிக்கு தேர்வா கியுள்ளனர் என்பது குறிப்பி டத்தக்கது.

    • தமிழ்நாடு சிறப்பு காவல் அணி சாம்பியன்
    • 92 ஆண்கள் அணி மற்றும் 14 பெண்கள் அணி கலந்து கொண்டன.

    நாகர்கோவில்:

    தமிழ்நாடு கூடைப்பந்து கழகம், கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்து கழகம் மற்றும் பொன் ஜெஸ்லி கல்வி குழுமம் இணைந்து மாநில அளவிலான மதுரை மண்டல கூடைப்பந்து போட்டியை 5 நாட்கள் நடத்தின. இதில் 92 ஆண்கள் அணி மற்றும் 14 பெண்கள் அணி கலந்து கொண்டன.

    ஆண்கள் அணி இறுதிப் போட்டியில் மதுரை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் அணியும் நாகர்கோவில் ஏசியன் ஸ்போர்ட்ஸ் அணியும் மோதின. இதில் மதுரை தமிழ்நாடு சிறப்பு போலீஸ் முதலிடத்தை வென்றது. இரண்டாம் இடத்தை நாகர்கோவில் ஏசியன் ஸ்போர்ட்ஸ் கிளப் வென்றது. மூன்றாம் பரிசை பிகாசா மதுரை அணி வென்றது நான்காம் இடத்தை டி.பி.ஏ. ப்ளூ அணி வென்றது.

    மகளிர் போட்டியில் மதுரை ஆயுதப்படை போலீஸ் முதலிடம் வென்ற து. இரண்டாம் இடத்தை கராஷ்யன் தூத்துக் குடி அணி வென் றது. மூன்றாம் இடத்தை பசுமை விருதுநகர் அணி வென்றது. நான்காம் இடத்தை நாகர்கோவில் எம்பரர் அணி வென்றது.

    கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்தாட்ட கழக சேர்மன் மற்றும் பொன் ஜெஸ்லி கல்வி குழுமம் சேர்மன் பொன் ராபர்ட் சிங் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினார். குமரி மாவட்ட கூடைப் பந்தாட்ட கழக புரவலர் வள்ளலார் பேரவை சுவாமி பத்மேந்திரா, பி2சி டெக்னாலஜி மேனேஜிங் டைரக்டர் சதீஷ் பிரபு மற்றும் தொழில் அதிபர்கள் சரவணன், ஆஸ்டின் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரி மாவட்ட கூடைப்பந்து கழக தலைவர் ஆஸ்டின், செயலாளர் மகேஷ், பொருளாளர் சகாய சியாமல், துணைத் தலைவர் நெல்லையப்பன், டென்னிசன், பிரேம் சந்தர், கிறிஸ்டோ சகி துணைச் செயலாளர் டாக்டர் அருண் ஆகியோர் விளை யாட்டுப் போட்டிக்கான ஏற்பாடுகளை செய்து இருந் தனர்.

    • சாம்பியன் பெற்ற மாணவர்களுக்கு வாழ்த்து பெற்றனர்.
    • பல்வேறு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.

    வாடிப்பட்டி

    மாநில அளவிலான பாராமெடிக்கல் கல்லூரிகளுக்கு இடையே நாடகம், கவிதை, ஓவியம், தனித் திறன் மற்றும் கருத்தரங்கு, ஆய்வரங்கு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் திண்டுக்கல்லில் நடந்தது.

    இதில் தமிழகத்தில் உள்ள 12 பாரா மெடிக்கல் கல்லூரிகள் கலந்து கொண்ட வாடிப்பட்டி ஈஷா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டம் பெற்றனர். அவர்களை முதல்வர் சாம்சேட் தலைமையில் பேராசிரியர் முத்துப்பாண்டி, பி.ஆர்.ஓ. சீதாராமன், மாணவர் பொறுப்பாளர் ராஜா ஆகியோர் வாழ்த்தினர்.

    • கிரிக்கெட் போட்டியில் கோவிலூர் கெமிக்கல்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

    காரைக்குடி

    காரைக்குடியில் லத்தீப் மெமோரியல் 8-ம் ஆண்டு மாவட்ட அளவிலான 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி மைதானங்களில் நடந்தது. சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. இறுதிப்போட்டியில் கோவிலூர் தமிழ்நாடு கெமிக்கல்ஸ் அணியும், காரைக்குடி மூன்லைட் அணியும் மோதியதில் கெமிக்கல்ஸ் அணி 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சுழற்கோப்பையை தட்டிச் சென்றது.

    சிறந்த பேட்ஸ்மேன் மற்றும் தொடர்நாயகனாக கெமிக்கல்ஸ் அணியின் பார்த்தசாரதியும், பந்து வீச்சாளராக ராமச்சந்திரனும், ஆல்ரவுண்டராக நைட்ஸ் அணியின் சிவசங்கரும், சிறந்த பயிற்சியாளராக அழகப்பா கலைக்கல்லூரி உடற்கல்வி இயக்குநர் அசோக்குமாரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருதுகளை வென்றனர். பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் காரைக்குடி நகர்மன்ற உறுப்பினர் ஹரிதாஸ், தொழிலதிபர் செந்தில்குமார், பள்ளத்தூர் சங்கர் ஆகியோர் பரிசுகளை வழங்கினர். மாவட்ட கிரிக்கெட் சங்க செயலாளர் சதீஷ்குமார், பொருளாளர் சங்கர், துணை தலைவர் பெஸ்ட் பாண்டியன், லத்தீப் மெமோரியல் அணி செயலாளர் சிவானந்தம், பழமலை, திருச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் செட்டிநாடு அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது.
    • இந்தியா நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்கள் ஒலிவியா சரவணன் மற்றும் நவீன், செட்டிநாடு சேம்ப்ஸ் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம், வி.எக்ஸ்போ இந்தியா இணைந்து ஜூனியர் பேட்மின்டன் லீக் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்தியது.சர்வதேச தரத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை சிட்டி கிங்ஸ்டர்ஸ், திருச்சி ராக்போர்ட் ராக்கர்ஸ், திருவள்ளுவர் வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ், செட்டிநாடு சேம்ப்ஸ், திருப்பூர் வாரியர்ஸ், காஞ்சி எஸ்பார்க்ஸ் ஏசஸ், தஞ்சை தலைவாஸ் என 8 அணிகள் பங்கேற்றன.

    13 வயதில் இருந்து 19 வயது உட்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.இறுதி போட்டிக்கு காரைக்குடி செட்டிநாடு சேம்ப்ஸ் அணியம்,திருப்பூர் வாரியர்ஸ் அணியும் தகுதி பெற்றன.விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் செட்டிநாடு சேம்ப்ஸ் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

    வெற்றி வாகை சூடிய செட்டிநாடு சேம்ப்ஸ் அணியின் உரிமையாளர் டாக்டர் லெனின் முத்துராஜ் கூறுகையில், லீக் போட்டியில் ஆரம்பம் முதலே செட்டிநாடு சேம்ப்ஸ் அணியின் வீரர்-வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதி போட்டியில் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் மாணவி சானியா சிக்கந்தர் இரட்டை யர் பிரிவில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். செட்டிநாடு சேம்ப்ஸ்சின் ஸ்பான்சர்களான செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் குமரேசனுக்கும், போட்டியை திறம்பட நடத்திய தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கம் மற்றும் வி.எக்ஸ்போ இந்தியா நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்கள் ஒலிவியா சரவணன் மற்றும் நவீன், செட்டிநாடு சேம்ப்ஸ் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவன் அஸ்வின் லெனின் காஞ்சிபுரம் ஸ்பார்க்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • புதுக்கோட்டை மாவட்ட அணி சாம்பியன்
    • இந்தப்போட்டியில் 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட குத்துச்சண்டை கழகம் சார்பில் மாநில அளவிலான இளம் பெண்களுக்கான குத்துச்சண்டை போட்டி கன்னியாகுமரி முருகன் குன்றம் அருகே உள்ள நான்கு வழிச்சாலை மைதானத்தில் 2 நாட்கள் நடைபெற்றது.

    இந்தப்போட்டியில் கன்னியாகுமரி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தஞ்சாவூர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்பட 18 மாவட்டங்களைச் சேர்ந்த 70 வீராங்கனைகள் பங்கேற்றனர். இந்த போட்டியை கன்னியாகுமரி போலீஸ் டி.எஸ்.பி. ராஜா தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை மாவட்டம் சாம்பியன் பட்டம் பெற்றது. திருவள்ளூர் மாவட்டம் 2-ம் இடம் பெற்றது.

    போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழாவுக்கு தமிழ்நாடு குத்துச்சண்டை கழக செயலர் எம்.எஸ்.நாகராஜன் தலைமை தாங்கினார். குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக தலைவர் பாக்கியமணி முன்னிலை வகித்தார். மாநில தொழில் நுட்பக் குழுத் தலைவர் டி.என்.செழியன் வரவேற்று பேசினார்.

    கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வித்யாலயா பள்ளி முதல்வர் சரிகா, புனித ஜோசப் கலாசன்ஸ் பள்ளி முதல்வர் ஜின்ஸ் ஜோசப் ஆகியோர் பரிசுகளை வழங்கினார்கள். முடிவில் குமரி மாவட்ட குத்துச்சண்டை கழக செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

    இந்தப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீராங்கனைகள் வருகிற ஜூலை 5-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை சென்னையில் நடைபெறும் அகில இந்திய குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    ×