search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "champions"

    • இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்
    • வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2 -வது சீசன் கடந்த பிப்ரவரி 23- ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

    இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என 5 அணிகள் இடம் பெற்று விளையாடின.டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

    இறுதி ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வெற்றி பெற்று, டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லீக் 2024 பட்டம் பெற்றது. 

    சாம்பியன் பட்டம் வென்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி அசத்தியதை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்.மேலும்சில வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்.

    அதில் ஒரு சில 'மீம்ஸ்கள்' வருமாறு:

    தூள்' படத்தில் நடிகை ரீமா சென்-ஐ கவருவதற்காக உடற்பயிற்சி செய்வது போல் விவேக் ஏமாற்றுவார். அப்போது, திடீரென பறவை முனியம்மா, அந்த காகிதத்தாலான உடற்பயிற்சி பொருட்களை எல்லாம் தூக்கி எறிவார்.

    அதுமட்டுமல்லாமல், இந்த கருமத்தைதான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தியா என்று நக்கல் செய்வார். அதேபோல் பறவை முனியம்மாவாக ஆர்சிபி மகளிர் அணியையும், விவேக்காக ஆர்சிபி ஆடவர் அணியையும் மாற்றி, 16 சீசனா இந்த கோப்பையை ஜெயிக்க தான் உருட்டிட்டு இருந்தியா என்று உருவாக்கப்பட்டு உள்ளது.




     

    சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து புறப்படுவதை எண்ணி வடிவேலு, நாசர் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போது ரஜினிகாந்த், ஒரு மாதம் இருந்து செய்ய வேண்டிய வேலையை ஒரு வாரத்தில் முடித்துவிட்டேன் என்பார்.

    அதனை ஆர்சிபி மகளிர் அணி பேசுவதாக மாற்றி, எங்களோட ஆடவர் அணி 16 வருஷமா பண்ணாததை.. நாங்கள் 2 சீசனிலேயே செய்து முடித்துவிட்டோம் என்று உருவாக்கப்பட்டு உள்ளது

    அதேபோல நடிகர் வடிவேலு அரசியல் வாதியாக வெள்ளை வேட்டி, சட்டை துண்டு அணிந்து மிரட்டலாக நடந்து வருவது போலவும் அவருக்கு அடியாளாக கம்புடன் விராட் கோலி நடந்து வருவது போலவும் " பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக 16 வருசமாக காத்திருந்த ஒரே டீம்" ..என்ற வாசகத்துடனும் மீம்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் உருவாக்கி இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

    • ஜூனியர் பேட்மிண்டன் போட்டியில் செட்டிநாடு அணிக்கு சாம்பியன் பட்டம் கிடைத்தது.
    • இந்தியா நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்கள் ஒலிவியா சரவணன் மற்றும் நவீன், செட்டிநாடு சேம்ப்ஸ் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    காரைக்குடி

    தமிழ்நாடு பேட்மின்டன் சங்கம், வி.எக்ஸ்போ இந்தியா இணைந்து ஜூனியர் பேட்மின்டன் லீக் போட்டிகளை சென்னை நேரு விளையாட்டு அரங்கில் நடத்தியது.சர்வதேச தரத்தில் நடந்த இந்த போட்டியில் சென்னை சிட்டி கிங்ஸ்டர்ஸ், திருச்சி ராக்போர்ட் ராக்கர்ஸ், திருவள்ளுவர் வீராஸ், கோவை சூப்பர் கிங்ஸ், செட்டிநாடு சேம்ப்ஸ், திருப்பூர் வாரியர்ஸ், காஞ்சி எஸ்பார்க்ஸ் ஏசஸ், தஞ்சை தலைவாஸ் என 8 அணிகள் பங்கேற்றன.

    13 வயதில் இருந்து 19 வயது உட்பட்ட சிறுவர்-சிறுமியர்களுக்கான ஒற்றையர், இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன.இறுதி போட்டிக்கு காரைக்குடி செட்டிநாடு சேம்ப்ஸ் அணியம்,திருப்பூர் வாரியர்ஸ் அணியும் தகுதி பெற்றன.விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் செட்டிநாடு சேம்ப்ஸ் அணி அபார வெற்றி பெற்று கோப்பையை தட்டிச் சென்றது.

    வெற்றி வாகை சூடிய செட்டிநாடு சேம்ப்ஸ் அணியின் உரிமையாளர் டாக்டர் லெனின் முத்துராஜ் கூறுகையில், லீக் போட்டியில் ஆரம்பம் முதலே செட்டிநாடு சேம்ப்ஸ் அணியின் வீரர்-வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இறுதி போட்டியில் கோப்பையை வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.

    செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் மாணவி சானியா சிக்கந்தர் இரட்டை யர் பிரிவில் அபாரமாக விளையாடி வெற்றி பெற்றார். செட்டிநாடு சேம்ப்ஸ்சின் ஸ்பான்சர்களான செட்டிநாடு பப்ளிக் பள்ளியின் தாளாளர் குமரேசனுக்கும், போட்டியை திறம்பட நடத்திய தமிழ்நாடு பேட்மிட்டன் சங்கம் மற்றும் வி.எக்ஸ்போ இந்தியா நிறுவனத்திற்கும் பயிற்சியாளர்கள் ஒலிவியா சரவணன் மற்றும் நவீன், செட்டிநாடு சேம்ப்ஸ் அணி வீரர், வீராங்கனைகளுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. இந்த பள்ளியின் 10-ம் வகுப்பு மாணவன் அஸ்வின் லெனின் காஞ்சிபுரம் ஸ்பார்க்ஸ் அணியில் இடம்பெற்று விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×