search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் அணி"

    • இந்திய தரப்பில் வஸ்ட்ரா கர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
    • 187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது.

    இந்தியா-ஆஸ்திரேலிய பெண்கள் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 219 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது.

    இந்திய தரப்பில் வஸ்ட்ரா கர் 4 விக்கெட்டும், சினே ரானா 3 விக்கெட்டும், தீப்தி சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் விளையாடிய இந்திய அணி 406 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. மந்தனா 74 ரன்னும், ரோட்ரிக்ஸ் 73 ரன்னும், தீப்தி சர்மா 78 ரன்னும் எடுத்தனர்.

    187 ரன்கள் பின் தங்கிய நிலையில் ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சை விளையாடியது. நேற்றைய 3-ம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 90 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்து இருந்தது. சுதர்லாண்ட் 12 ரன்னுடனும், கார்ட்னெர் 7 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். நேற்று வரை அந்த அணி 46 ரன்கள் முன்னிலை பெற்று இருந்தது.

    இந்நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடந்தது. ஆஸ்திரேலியா அணி 2வது இன்னிங்சில் 261 ரன்களில் ஆல் அவுட்டானது. தஹிலா மெக்ராத் 73 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் ஸ்நே ரானா 4 விக்கெட்டும், ஹர்மன்பிரீத் கவுர், கெய்க்வாட் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 75 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்குகிறது.

    • பயிற்சி முகாமில் 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது.

    நெல்லை:

    தேசிய மாணவர் படையின் 3-வது தமிழ்நாடு பெண்கள் பட்டாலியனின் 4 மாவட்ட பள்ளி, கல்லூரி வீரர்களுக்கான பயிற்சி மற்றும் போட்டிகள் பாளையில் உள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கல்லூரியில் இன்று நடைபெற்றது.

    நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 17 பள்ளி, கல்லூரிகளில் உள்ள தேசிய மாணவர் படை மாணவிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்டனர்.

    வருகிற 14-ந்தேதி வரை நடைபெறும் இந்த முகாமில் தேசிய மாணவர் படையின் சிறந்த மாணவிகள் தேர்வு நடக்கிறது. இதில் அணிவகுப்பு, துப்பாக்கி சுடுதல், கலை, சமூக செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட வர்கள் மண்டல அளவி லான போட்டி களுக்கு தேர்வு செய்யப்பட உள்ள னர். அதில் தேர்வாகும் வீராங்கனைகள் குடியரசு தின விழா ஒத்திகைக்கு தகுதி பெறுவார்கள்.

    இன்று நடந்த போட்டியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். அவர்களுக்கு துப்பாக்கி சுடுதல் போட்டி நடத்தப்பட்டது.இதில் 150-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    20 மீட்டர் அளவில் உள்ள இலக்கை 5 ரவுண்டுகள் சுடும் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் மாணவிகள் இலக்கை நோக்கி சுட்டு அசத்தினர். அதிக முறை இலக்கில் சரியாக சுட்ட மாணவிகள் மதிப்பெண் அடிப்படையில் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுகின்றனர்.

    • பெண்கள் ‘சாம்பியன் ஷிப்’ போட்டி கடந்த 5-ந் தேதி திருப்பூர் சிட்கோவில் நடைபெற்றது.
    • கபடி போட்டியில் 12 அணிகள் பங்கேற்றன.

    திருப்பூர் :

    விழுப்புரத்தில் வருகிற 9-ந் தேதி நடைபெறும் மாநில அளவிலான கபடி போட்டியில் திருப்பூர் பெண்கள் அணி பங்கேற்க உள்ளது.

    திருப்பூர் மாவட்ட அமெச்சூர் கபடிக்கழகத்தின் சார்பில் மாவட்ட பெண்கள் 'சாம்பியன் ஷிப்' போட்டி கடந்த 5-ந் தேதி திருப்பூர் சிட்கோவில் நடைபெற்றது. இதில் 12 அணிகள் பங்கேற்றன. போட்டியை கபடி கழக கவுரவ உறுப்பினர் பிரேமா மணி தொடங்கி வைத்தார். இதில் உடுமலை வி.ஆர்.டி.ஸ்போர்ட்ஸ் கிளப் அணி முதல் இடத்தை பிடித்து பரிசாக ரூ.10 ஆயிரத்தையும், 2-ம் இடத்தை திருப்பூர் வி.போர்ட்ஸ் அணி பிடித்து ரூ.7 ஆயிரத்தையும், கொழுமம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணி 3-ம் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரத்தையும், திருப்பூர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம் ஸ்போர்ட்ஸ் அணி 4-ம் இடத்தை பிடித்து ரூ.5 ஆயிரத்தையும், கோப்பைகளையும் பரிசாக பெற்றனர்.

    பரிசுகளை மாவட்ட கபடிக்கழக செயலாளரும், தமிழ்நாடு மாநில அமெச்சூர் கபடிக்கழக பொருளாளருமான ஜெயசித்ரா ஏ.சண்முகம் மற்றும் மணி மஹால் உரிமையாளர் ஆகியோர் வழங்கினர். மாவட்ட பெண்கள் அணிக்கு தேர்வுக்குழுத்தலைவர் வி.டி.ருத்ரன், ஒருங்கிணைப்பாளர் கே.வாலீசன் ஆகியோர் தலைமையில் 12 கபடி வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் மாவட்ட இணைச்செயலாளர் செல்வராஜ் கலந்துகொண்டார்.

    வருகிற 9-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை விழுப்புரம் மாவட்டத்தில் மாநில அளவிலான கபடி 'சாம்பியன் ஷிப்' போட்டி நடைபெற உள்ளது.

    திருப்பூர் மாவட்ட பெண்கள் 'சாம்பியன் ஷிப்' போட்டியில் வெற்றி பெற்ற உடுமலை வி.ஆர்.டி பெண்கள் அணியை சேர்ந்த கதிஜாபீவி, புவனேஸ்வரி, ஜீவிதா, ஸ்ரீபிரியா, காவ்யாஸ்ரீ, உடுமலை கமலம் கல்லூரியை சேர்ந்த பவித்திரா, திருப்பூர் ஏ.பி.ஜே.அப்துல்கலாம் அணியை சேர்ந்த காயத்திரி, அஸ்வதி, திருப்பூர் வி போர்ட்ஸ் அணியை சேர்ந்த ஆனந்தி, புவனேஸ்வரி, திருப்பூர் டால்பின் அணியை சேர்ந்த ரோகிணி, திருப்பூர் குமரன் கல்லூரியை சேர்ந்த ஜெயபாரதி, பயிற்சியாளர் செந்தில், மேலாளர் வெங்கடேஷ், உதவி பயிற்சியாளர் வாசு ஆகியோர் பங்கேற்க உள்ளனர். இ்த்தகவலை திருப்பூர் மாவட்ட கபடிக்கழக செயலாளர் ஜெயசித்ரா ஏ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

    • மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நாலுமாவடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற எஸ்.எம்.வி.கே.சி. அணிக்கு ரூ.50 ஆயிரமும், சுழற்கோப்பையும், வழங்கப்பட்டது.

    குரும்பூர்:

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறையும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகமும் இணைந்து 7-ம் ஆண்டு 'ரெடீமர்ஸ்' கோப்பைக்கான மாநில அளவிலான பொங்கல் பண்டிகை மின்னொளி கபடி போட்டி யை நடத்தினர்.

    போட்டிகள் நாலுமாவடி காமராஜ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர்.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நாலுமாவடி ஜெ.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-ம் இடத்தைப் பிடித்த அனத்தங்கரை அணிக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம், நான்காம் பரிசாக தூத்துக்குடி கரிகாலன், என்.எப்.சி. அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-வது இடத்தைப் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாங்காபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயிரமும், திண்டுக்கல் சக்தி கல்லூரி நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் 3-ம், நான்காம் பரிசை பெற்று தலாரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர்.

    விழா நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கினார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். ரொக்கப் பரிசையும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர், கபடி கழகச் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்வாரிய விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமையாசிரியர் திரு நீலகண்டன், அ.தி.மு.க. பிரமுகர்கள் திருப்பாற்கடல், விஜயகுமார், ராஜ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பணிக்க நாடார் குடியிருப்பு பிரபாகரன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி தலைவர் அழகேசன், அங்கமங்கலம் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளரும், அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்சார வாரியம் விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார், ஊழிய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    ×