search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாலுமாவடி"

    • மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நாலுமாவடியில் நடைபெற்றது.
    • வெற்றி பெற்ற எஸ்.எம்.வி.கே.சி. அணிக்கு ரூ.50 ஆயிரமும், சுழற்கோப்பையும், வழங்கப்பட்டது.

    குரும்பூர்:

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் விளையாட்டுத் துறையும், தூத்துக்குடி மாவட்ட அமெச்சூர் கபடிக் கழகமும் இணைந்து 7-ம் ஆண்டு 'ரெடீமர்ஸ்' கோப்பைக்கான மாநில அளவிலான பொங்கல் பண்டிகை மின்னொளி கபடி போட்டி யை நடத்தினர்.

    போட்டிகள் நாலுமாவடி காமராஜ் மேல் நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் கலந்து கொண்டனர்.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நாலுமாவடி ஜெ.ஆர். ஸ்போர்ட்ஸ் கிளப் ஆண்கள் அணிக்கு ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-ம் இடத்தைப் பிடித்த அனத்தங்கரை அணிக்கு ரூ.30 ஆயிரமும், மூன்றாம், நான்காம் பரிசாக தூத்துக்குடி கரிகாலன், என்.எப்.சி. அணிகளுக்கு தலா ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டது.

    பெண்கள் பிரிவில் இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற ஒட்டன்சத்திரம் எஸ்.எம்.வி.கே.சி. பெண்கள் அணிக்கு முதல் பரிசாக ரூ.50 ஆயிரமும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையும், 2-வது இடத்தைப் பிடித்த ஸ்ரீவில்லிபுத்தூர் மாங்காபுரம் ஸ்போர்ட்ஸ் கிளப் அணிக்கு ரூ.30 ஆயிரமும், திண்டுக்கல் சக்தி கல்லூரி நெல்லை பாரதி ஸ்போர்ட்ஸ் கிளப் ஆகிய அணிகள் 3-ம், நான்காம் பரிசை பெற்று தலாரூ.20 ஆயிரத்தை தட்டி சென்றனர்.

    விழா நிறைவாக பரிசளிப்பு விழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி லாசரஸ் தலைமை தாங்கினார். இயேசு விடுவிக்கிறார் ஊழிய விளையாட்டுத் துறை ஒருங்கிணைப்பாளர் எட்வின் வரவேற்று பேசினார். ரொக்கப் பரிசையும், ரெடீமர்ஸ் சுழற்கோப்பையையும் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

    விழாவில் தூத்துக்குடி மாவட்ட அமைச்சர், கபடி கழகச் செயலாளர் கிறிஸ்டோபர் ராஜன், அர்ஜுனா விருது பெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்வாரிய விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப்பள்ளி செயலாளர் நவநீதன், தலைமையாசிரியர் திரு நீலகண்டன், அ.தி.மு.க. பிரமுகர்கள் திருப்பாற்கடல், விஜயகுமார், ராஜ் நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் பணிக்க நாடார் குடியிருப்பு பிரபாகரன், நாலுமாவடி காமராஜ் மேல்நிலைப் பள்ளி தலைவர் அழகேசன், அங்கமங்கலம் பாலமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போட்டிக்கான ஏற்பாடுகளை நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் சகோ. மோகன் சி. லாசரஸ் தலைமையில் போட்டி ஒருங்கிணைப்பாளரும், அர்ஜுனா விருதுபெற்ற கபடி வீரரும், தமிழ்நாடு மின்சார வாரியம் விளையாட்டு அலுவலருமான மணத்தி கணேசன், இயேசு விடுவிக்கிறார் ஊழியப் பொதுமேலாளர் செல்வக்குமார், ஊழிய விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளர் மணத்தி எட்வின் மற்றும் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.
    • விருந்தில் நாலுமாவடி சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    குரும்பூர்:

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் தேவனுடைய கூடாரத்தில் சுற்று வட்டார கிராமத்திலுள்ள 2 ஆயிரம் பேருக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்கப்பட்டது.

    நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியத்தின் மூலம் தேவனுடைய கூடாரத்தில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாலுமாவடி சுற்று வட்டார கிராம மக்களுக்கு கிறிஸ்துமஸ் விருந்து வழங்குவது வழக்கம். அதேபோல் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்றும் கிறிஸ்துமஸ் விருந்து வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவனர் மோகன் சி.லாசரஸ் தலைமை தாங்கி விருந்து வழங்கும் நிகழ்ச்சி யை தொடங்கி வைத்தார்.

    இதில் நாலுமாவடி மற்றும் அதன் சுற்று வட்டார கிராமத்தை சேர்ந்த சுமார் 2 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறார் ஊழிய நிறுவன பொது மேலாளர் செல்வகுமார் தலைமையில் ஊழியர்கள் செய்திருந்தனர்.

    • ஸ்ரீ ஞானானந்த சம ரச சன்மார்க்க தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகள்,பைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
    • இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளிடம் உரையாடினார்.

    நாசரேத்:

    நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் ஸ்ரீ ஞானானந்த சம ரச சன்மார்க்க தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகள்,பைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை தாங்கி இலவச சீருடைகள்,புத்தக பைகளை வழங்கி மாணவ- மாணவிகளிடம் உரையாடினார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை அவ்வை வரவேற்று பேசினார். பள்ளி செயலாளர் அழகேசன், பள்ளி மேலாளர் கலைராஜன், முன்னாள் மேலாளர் சேகர், தனசேகரன், மணத்தி எட்வின், ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் மேல் நிலைப்பள்ளி முன்னாள் எழுத்தர் பொன்னு,கீழநாலு மாவடி பாபு,சுதாகர், லோக நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×