search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாதன தர்மம்"

    • உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.
    • மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா?

    புதுடெல்லி:

    சென்னையை சேர்ந்த வக்கீல் பி.ஜெகநாத் என்பவர் சார்பில் வக்கீல் ஜி.பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் ஒரு ரிட் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

    சென்னையில் கடந்த 2-ந்தேதி சனாதன ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. இந்து மதம், சனாதன தர்மத்தை குறி வைத்து, தகாத முறையில் பேசி அவமானப்படுத்தும் வகையில் நடத்தப்பட்டு உள்ளது. சனாதனத்தை டெங்கு, மலேரியாவை போல ஒழிக்க வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டில் தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே. சேகர்பாபு பங்கேற்றது அரசமைப்பு சாசனத்தின் 25, 26 பிரிவுகள் மீறப்பட்டது, முரணானது என அறிவிக்க வேண்டும்.

    சனாதன ஒழிப்பு மாநாட்டுக்கு தமிழீழ விடுதலைப்புலிகள் போன்ற பயங்கரவாத அமைப்பு நிதி வழங்கியதா என்பதை சி.பி.ஐ. விசாரிக்கும் வகையில் மத்திய உள்துறை அமைச்சகத்துக்கும், சி.பி.ஐ.க்கும் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனிருதா போஸ், பேலா எம்.திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    வழக்கு விசாரணைக்கு வந்ததும் நீதிபதிகள், "இந்த வழக்கை நாங்கள் ஏன் விசாரிக்க வேண்டும். இந்த விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு ஏன் தலையிட வேண்டும்" என்று கேட்டனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், "நீங்கள்தான் முதன்மையான கோர்ட்டாக இருக்கிறீர்கள். நீங்கள்தான் விசாரிக்க வேண்டும்" என்றார்.

    அதற்கு நீதிபதிகள், 'இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஐகோர்ட்டுகள் உள்ளன. நீங்கள் எந்த ஐகோர்ட்டில் வேண்டுமானாலும் இந்த விவகாரத்துக்காக அணுகலாம்.

    இந்த விவகாரத்தில் நாங்கள் தலையிட விரும்பவில்லை. உங்களுக்கு எங்கு வேண்டுமோ அங்கு போய் மனுதாக்கல் செய்து கொள்ளுங்கள் என்று கூறி நீதிபதிகள் இந்த வழக்கை விசாரிக்க திட்டவட்டமாக மறுத்தனர்.

    அதற்கு மனுதாரர் தரப்பு வக்கீல், உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்துக்கள், குறிப்பாக சனாதனத்தை வேரறுப்போம், சனாதனத்தை ஒழித்து விடுவோம் என்று கொசுவோடு சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது, கிருமிகளுடன் சனாதனத்தை ஒப்பிட்டு பேசியது ஆகிய விஷயங்களை சொல்லிக்கொண்டே இருந்தார்.

    அதன்பிறகு வழக்கு மனுவை மீண்டும் ஒருமுறை பார்த்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நாங்கள் நோட்டீசு அனுப்புகிறோம். அவர்கள் பதில் அளிக்கட்டும் என்று கூறினார்கள். அதன்பிறகு சனாதனம் பற்றிய பேச்சுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் அளிக்குமாறு நோட்டீசு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    மேலும் அமைச்சர் சேகர் பாபு, சனாதன எதிர்ப்பு மாநாடு நடத்திய திராவிடர் கழகம் ஆகியோருக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர்.

    இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசியது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தி உள்ளதா? என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது? என்றும், சனாதன எதிர்ப்பு மாநாட்டில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், பி.கே.சேகர்பாபு பங்கேற்றது தொடர்பாகவும் தமிழக அரசு விளக்கம் அளிக்குமாறு நோட்டீசு அனுப்பவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    • தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டத்தில் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி மஸ்தான் பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் திருவுருவச்சிலை திறப்பு விழா, தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் விழா மற்றும் இளைஞரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

    2 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.

    விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மத்திய அரசு பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்துள்ளது. ஆனால் அந்த இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதுபோல் தெரியவில்லை. இதனை அமல்படுத்த வேண்டுமென்றால் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தவேண்டும் என்றும், தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும் என்றும் சொல்கிறார்கள்.

    பெண்களுக்கான இடஒதுக்கீடு குறித்து நாங்கள் கடந்த 10 ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம். அதை எப்போது செய்யப்போகிறார்கள் என்ற தெளிவு இல்லை. மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டத்தை எதிர்த்து வருகிறோம்.

    தமிழகத்தில் தீண்டாமை அதிகமாக இருப்பதாக கவர்னர் கூறுகிறார். எனவேதான் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று நாங்கள் சொல்கிறோம். சாதிய வேறுபாடுகள் எப்போதும் இருக்கக்கூடாது. சனாதனத்தை ஒழித்தால் தீண்டாமை ஒழிந்துவிடும் என்று நான் நம்புகிறேன். நீங்கள் நம்பவில்லையா, நம்புங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    முன்னதான விமான நிலையத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்டச் செயலாளர்கள் மணிமாறன், கோ.தளபதி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    • சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.
    • சனாதனம் பற்றிய புரிதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது.

    இந்தியா கூட்டணி உருவானதில் இருந்து மோடி பதற்றத்தில் இருக்கிறார். சனாதனத்தின் மீதான தாக்குதல் என்பது இந்துக்களுக்கு எதிரானது அல்ல.

    சனாதனம் பற்றிய புரிதலில் ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு கருத்து இருக்கிறது. தமிழகத்தில் புரிந்து கொள்வதற்கும், வட இந்தியாவில் புரிந்து கொள்வதற்கும் வேறுபாடு தெரிகிறது.

    • கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது.
    • உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது.

    பழனி:

    என் மண் என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டம் பழனியில் பல்வேறு இடங்களில் பாதயாத்திரை மேற்கொண்டார். மாரியம்மன் கோவில் தேரடி வீதியில் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

    கடந்த 20 ஆண்டுகளில் பா.ஜ.க. அதிக வளர்ச்சி அடைந்துள்ளது. ஆனால் காங்கிரஸ் தேய்ந்துகொண்டே வருகிறது. தமிழகத்திலும் இதே நிலை ஏற்படும். 2014க்கு முன்பு 60 ஆண்டுகள் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தது. பா.ஜ.க. 15 ஆண்டுகள்தான் ஆட்சி செய்திருக்கிறது. ஆனால் இந்த 15 ஆண்டுகளில் 200 வருடங்கள் கழித்து எப்படி இருக்க வேண்டுமோ? அதுபோன்ற வளர்ச்சியை கண்டுள்ளது.

    இந்தியாவில் மட்டும் 47 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. உலக அளவில் பெரிய பொருளாதார நாடாக இந்தியா 5வது இடத்தில் உள்ளது. தனி மனித வருமானம் உயர்ந்திருக்கிறது. உள்நாட்டு பிரச்சினைகள் அனைத்தையும் பா.ஜ.க. அரசு சரி செய்து உள்ளது. 3-வது முறையாக மோடி 2024-ம் ஆண்டு பிரதமராக அமரும்போது இந்தியா பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக உருவெடுக்கும்.

    தற்போது அரசியலில் இருப்பவர்கள் எல்லாம் பேமிலி கோட்டாவில் உள்ளனர். குடும்ப கோட்டாவில் சீட் வாங்கி ஜெயிப்பதுதான் தி.மு.க.வின் பார்முலா.

    முன்னாள் முதல்வர் அண்ணாத்துரை வாரிசு அரசியல் கூடாது என்றார். அவரது கொள்கையை கடைபிடிக்கும் ஒரே கட்சி பா.ஜ.க. மட்டும்தான். தி.மு.க. அரசியலில் இருந்து ஒதுக்கப்பட வேண்டிய ஒரு கட்சி. ஏழை மக்களின் வலி அவர்களுக்கு தெரியாது.

    காங்கிரசை எதிர்த்து அரசியலுக்கு வந்தவர்கள் மம்தாவும், கெஜ்ரிவாலும்.

    தற்போது இவர்கள் அனைவரும் ஒரே கூட்டணியில் உள்ளனர். இதை மக்கள் எவ்வாறு ஏற்பார்கள். சனாதனத்தை ஒழிப்பேன் என்று தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. சனாதனத்தை ஒழிப்பதும், இந்து தர்மத்தை ஒழிப்பதும்தான் இந்தியா கூட்டணியின் கொள்கை. இந்த கூட்டணி வருகிற பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெறாது. 400 எம்.பி.க்களோடு மோடியை மீண்டும் பிரதமராக அமர வைக்க வேண்டும். தமிழகத்தில் இந்து கோவிலுக்கு சொந்தமான சொத்துக்கள் களவு போகிறது. இதே நிலை தொடர்ந்தால் இந்து சமய அறநிலையத்துறை தேவையில்லை என்ற நிலை ஏற்படும். பழனி கோவில் சொத்துக்களும் தொடர்ந்து மாயமாகி வருகின்றன. எனவே அரசு இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இந்தியாவில் அடுத்த 20 ஆண்டுகால எதிர்காலத்தை யோசித்து பா.ஜ.க. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை.

    வேடசந்தூர்:

    என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தி.மு.க.வினரின் வருமானத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது. மக்களின் வருமானம் கல்விக்குதான் செல்ல வேண்டும்.

    பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகவே பிறந்த கட்சி கம்யூனிஸ்டு, அவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது. தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கடந்து தற்போது இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கின்றனர். தி.மு.க.வின் வளர்ச்சியே இதுதான். அவர்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தொண்டர்கள் அந்த குடும்பத்திற்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

    தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதியே பலருக்கு செல்போனில் பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது முழுஅமாவாசை நாளில் தொடங்கினால் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

    சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க அமாவாசை நாளில் திட்டம் தொடங்க நாள் பார்க்கலாமா? திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். தற்போது பெரும்பாலான அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை சோதனை பீதியை ஏற்படுத்தி வருகிறது. இலாகா இல்லாத தி.மு.க அமைச்சர் இன்னும் சிறையில் இருக்கிறார். மேலும் சில அமைச்சர்களுக்கு சோதனை விரைவில் வரும்.

    செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான். அவரை தி.மு.க அரசு தொடர்ந்து பாதுகாத்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனது நிறைவு நடைபயணத்தை பழனியில் அண்ணாமலை இன்று நிறைவு செய்கிறார்.

    • சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது அரசமைப்பு சாதனத்திற்கு முரணானது
    • சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்- மனுதாரர்

    சென்னையில் நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் திமுக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் பேசிய கருத்து மிகப்பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்த நிலையில் சனாதன ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொண்ட உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சென்னையை சேர்ந்த ஜெகன்நாதன் என்பவர் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழக அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர் பாபு ஆகியோர் சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்றது அரசமைப்பு சாசனத்திற்கு முரணானது என அறிவிக்க வேண்டும். சனாதன ஒழிப்பு மாநாட்டின் பின்னணியை கண்டறிய சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வேதத்திற்கும், பூர்வீக குடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
    • பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது சனாதன தர்மம்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே கொட்டாம் பட்டியில் நடந்த கட்சி பிரமுகரின் திருமணத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக அரசின் மகளிர் உரிமை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதனை விடுதலை சிறுத்தைகள் கட்சி மனதார பாராட்டி வரவேற்கின்றது. சாதி அடிப்படையில் மோதல்களை உருவாக்குவது சங் பரிவார் அமைப்புகள் தான்.

    தமிழகத்தில் ஜெய் ஸ்ரீராம் முழக்கம் எழுப்பி ராமர் பெயரை சொல்லி சிறுபான்மையினருக்கு எதிராக வெறுப்பு அரசியலை விதைத்து ஆதயாயம் தேட முடியாது. எனவே அவர்களுக்கு இருக்கிற ஒரே வாய்ப்பு சாதியின் பெயரால் வன்முறையை தூண்டுவது தான்.

    சாதிப்பெருமையை பேசுவது சங்பரிவார் அமைப்புகள் தான். அம்பேத்கர், பெரியாரை பிடித்தவர்கள் சாதி அரசியலை பேச மாட்டார்கள். சட்டம், ஒழுங்கை பாதிக்கும் வகையில் பேசிய ஆன்மீக சொற்பொழிவாளர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

    இதேபோல் பா.ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா போன்றோர் வன்முறையை தூண்டக்கூடிய வகையில் பேசி வருகிறார்கள். எனவே இவர்கள் எல்லாம் காவல் துறை கட்டுப்படுத்த வேண்டும்.

    சனாதன தர்மம் என்பது பிராமணர், ஆரியர்கள் சொல்லும் பெயர். நமது வாழ்வியல் எப்போது தோன்றியது? என யாராலும் சொல்ல முடியாது. வேதத்திற்கும், பூர்வீக குடிகளுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மனு சட்டம் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. பிறப்பு அடிப்படையில் உயர்வு, தாழ்வை நிலைப்படுத்துவது சனாதன தர்மம். வருகிற பாராளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி சனாதனத்தை வீழ்த்தும்.

    காலை சிற்றுண்டி திட்டத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற சம்பவத்திற்கு சங்பரிவார் அமைப்புகள் தூண்டுதலாக இருக்கும் என்ற சந்தேகம் உள்ளது. இதன் மூலம் தலித் மக்களிடமிருந்து தி.மு.க. அரசை பிரிக்க நினைக்கும் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது.
    • 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    சேலம்:

    இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு இன்று சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு வந்தார். சாமி தரிசனம் செய்து கோவிலில் நடந்து வரும் திருப்பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழக முதல்வராக மு.க.ஸ்டா லின் பொறுப்பேற்றவுடன் திருப்பணிகள் நிலுவையில் உள்ள கோவில் பணிகளை விரைந்து முடித்து குடமுழுக்கு நடத்த உத்தரவிட்டார். அதன்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பா.ஜ.க.வினர் ஆட்சி மீது வேண்டும் என்றே குறை கூறுகிறார்கள். சனாதனத்தை எதிர்க்கவில்லை, சனாதன கோட்பாடுகளான உடன்கட்டை ஏறுதல், குலக்கல்வி திட்டம் உட்பட கோட்பாடுகளை எதிர்க்கிறோம்.

    என் மன் என் மக்கள் பாதயாத்திரை முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. தற்போது தமிழகத்தில் சமத்துவ ஆட்சி நடைபெற்று வருகிறது. கடமை உறுதியுடன் தற்போதைய ஆட்சி சிறப்பாக செயல்படுகிறது. பொழுதுபோக்குக்காக சிலர் எதையோ சொல்கிறார்கள். கோவில் இறைபணி தொடரும்.

    சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற காசி விசுவநாதர் கோயில் ஆயிரமாவது குடமுழுக்கு விழாவில் பக்தர்கள் உட்பட அனைவரும் பாராட்டியுள்ளனர். 20 அர்ச்சகர் பயிற்சி பள்ளிகளில் பயிற்சி முடித்த 99 பேருக்கு பயிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

    அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டப்படி 38 பேர் அர்ச்சகராகி உள்ளனர். 1959-ம் ஆண்டுக்கு பிறகு முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றபின் தான் அதிக அளவில் தமிழகத்தில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

    அனைத்து கோவில்களிலும் முறைகேடுகள் தடுக்கப்படும். மக்களாட்சி வந்தபின் இந்து கோவில்கள் இந்து அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற மத கோவில்களை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வர சட்டம் இல்லை. இறை நம்பிக்கை அவரவர் விருப்பம். சமத்துவம் அங்கம் வகிக்கும் ஆட்சி தி.மு.க. இதனால் இறை நம்பிக்கை உள்ளவர்களையும் வரவேற்கிறோம், இறை நம்பிக்கை இல்லாதவர்களையும் வரவேற்கிறோம்.

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணி கடந்து 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டுவரை 10 சதவீத பணிகள் நிறைவடைந்த நிலையில் தற்போது 90 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் அடுத்த மாதம் 27-ந் தேதி நடைபெற உள்ளது. பக்தர்கள் வேண்டுகோளுக்கிணங்க நேர்ச்சை செலுத்தும் வகையில் ரூ.4.5 லட்சம் செலவில் தங்க தேர் புனரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. இதனை கும்பாபிஷேக நாளிலேயே பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும்.
    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் நிலையான அரசியல் செய்ய முடியாது.

    தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு கண்டக்குரல் ஓங்கி ஒலித்தது.

    இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷெகாவத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..,

    "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்தார்.

     

    இவரது கருத்துக்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது..,

    "சனாதன தர்மத்தில் இருப்பவர்கள் பொதுவாக ஹிம்சையை எதிர்த்து, அஹிம்சையின் பக்கம் இருப்பவர்கள். யாரும் அப்படி பேசுவதற்கு உரிமை இல்லை, யாராவது உணர்ச்சியில் அப்படி பேசினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். யாரும் பேசக் கூடாது."

    "இந்த மதம் அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரையும் அரவணைத்ததால், தான் இந்தியா இன்று இப்படிப்பட்ட நாடாக இருக்கிறது. யார் சொல்லி இருந்தாலும், எந்த பொறுப்பில் இருந்து அப்படி சொல்லி இருந்தாலும் கூட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது தவறான அர்த்தத்தை கொடுக்கும். யார் சொல்லி இருந்தாலும், இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது," என்று தெரிவித்து உள்ளார்.

    • சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்திருந்தார்
    • INDIA என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான்- பொன்முடி

    சானதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகின்றன. பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை எதிர்க்க INDIA கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியில் திமுக உள்ளது. இதில் உள்ள மற்ற பெரும்பாலான கட்சிகள் உதயநிதி ஸ்டாலின் கருத்தை ஏற்கவில்லை.

    இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான ராகவ் சதா இதுகுறித்து கூறியதாவது:-

    நான் சனாதனத்தில் இருந்து வந்தவன். இதுபோன்ற எதிர் கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். மேலும் எதிர்க்கிறேன். இதுபோன்ற கருத்துகளை கூறக் கூடாது. எந்தவொரு மதத்திற்கு எதிராகவும், இதுபோன்ற கருத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். அனைத்து மதத்திற்கும் நாம் மரியாதை கொடுக்க வேண்டும்.

    சில கட்சிகளில் இருந்து சில தலைவர்கள் இதுபோன்று கருத்துகளை தெரிவிக்கின்றனர். இது INDIA கூட்டணியின் கருத்து என்று அர்த்தம் இல்லை. நாடு எதிர்கொள்ளும் விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பின்மை போன்றவற்றிற்கு எதிராக கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கருத்து மாநிலத்தின் மாவட்டத்தில் இருந்து சிறிய தலைவரால் உருவானது. இது கூட்டணியின் அதிகாரப்பூர்வ கருத்து கிடையாது.

    இவ்வாறு ராகவ் சதா தெரிவித்தார்.

    திமுக அமைச்சர் பொன்முடி, இந்தியா என்பது சனாதன எதிர்ப்புக்காக உருவாக்கப்பட்டிருக்கும் கூட்டணிதான் எனப் பேசிய வீடியோவை நேற்று பா.ஜனதா வெளியிட்டுள்ளது. இதுவும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    • 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு ஆதரவான தகவல்.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது.

    சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்," என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திராவிடம் இதைத் தான் கற்பிக்கிறதா என்றும் இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி.மு.க., அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பியது.

    இந்த நிலையில், 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் குறித்த தகவல் இடம்பெற்று இருப்பது குறித்து பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை கருத்து தெரிவித்து இருக்கிறார்.

    இது குறித்து எக்ஸ் பதிவில் அவர், "சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் என்று கூறிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பி.கே. சேகர் பாபு, தொடர்ச்சியாக எழுந்த கண்டனங்களை தொடர்ந்து இந்து மதமும், சனாதனமும் வெவ்வேறானது என்று தெரிவித்தனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் 12-ம் வகுப்பு பாட புத்தகத்தில் சனாதன தர்மம் மற்றும் இந்து மதம் ஒன்று தான் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த வகுப்பில் சேர்ந்து கொண்டு அறிவாளியாகும் படி நாங்கள் பி.கே. சேகர் பாபு மற்றும் உதயநிதி ஸ்டாலினை கேட்டுக் கொள்கிறோம்," என்று குறிப்பிட்டு உள்ளார்.

    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது.
    • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலிக்கிறது.

    சனாதன தர்மம் எதிர்ப்பு மாநாட்டில் தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறிய கருத்துக்கள் நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக கண்டனக்குரல் ஓங்கி ஒலித்தது. மேலும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.

    சமீபத்தில் சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுவோரின் நாக்கை பிடுங்குவோம், கண்ணை நோண்டுவோம் என்று மத்திய மந்திரி கருத்து தெரிவித்து இருந்தார். நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வின் பாராளுமன்ற உறுப்பினர், கஜேந்திர சிங் ஷெகாவத், "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது."

     

    "சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்து இருக்கிறார்.

    இந்த நிலையில், தமிழ்நாடு அரசின் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (பிளஸ் டூ) பாட புத்தகத்தில் பக்கம் 58-இல், "இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுகிறது. `சனாதன தருமம்` என்றால் `அழிவில்லாத நிலையான அறம்` எனப்படும்," என்று பாடம் இடம்பெற்று இருக்கிறது.

    இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது. மேலும் திராவிடம் இதைத் தான் கற்பிக்கிறதா என்றும் இந்து என்ற சொல்லுக்கான கதை இன்னும் பிரமாதம் என்றும் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. சனாதனத்தை ஒழிப்போம் என்று மேடையில் பேசும் தி.மு.க., அரசு பாட புத்தகத்தில் சனாதன தர்மத்திற்கு புதிய விளக்கம் கொடுத்திருப்பது பல சந்தேகங்களை எழுப்பி உள்ளது.

    ×