search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சனாதன விவகாரம்.. மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்
    X

    சனாதன விவகாரம்.. மத்திய அமைச்சர் கருத்துக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கண்டனம்

    • அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும்.
    • சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் நிலையான அரசியல் செய்ய முடியாது.

    தமிழ்நாடு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியதற்கு நாடு முழுவதிலும் கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. நாடு முழுக்க அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு கண்டக்குரல் ஓங்கி ஒலித்தது.

    இதனிடையே ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திர சிங் ஷெகாவத் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தனது கருத்துக்களை தெரிவித்தார். இது குறித்து அவர் பேசியதாவது..,

    "உயிரை தியாகம் செய்து நமது முன்னோர்கள் கட்டி காத்து வந்த சனாதன தர்மத்தை சிலர் அழிக்க நினைக்கின்றனர். அவர்களை இனியும் சகித்து கொள்ள முடியாது. சனாதன தர்மத்திற்கு எதிராக பேசுபவர்களுக்கு நான் ஒன்று சொல்லி கொள்ள விரும்புகிறேன். நீங்கள் இவ்வாறு பேசினால் உங்கள் நாக்கை பிடுங்கி விடுவோம். எங்களை கீழ்த்தரமாக, அவமரியாதையுடன் பார்ப்பவர்கள் அனைவரின் கண்களும் பிடுங்கப்படும். சனாதனத்திற்கு எதிராக பேசும் எவரும் இந்தியாவில் ஒரு நிலையான அரசியல் செய்து விட முடியாது," என்று தெரிவித்தார்.

    இவரது கருத்துக்கு பா.ஜ.க. தமிழ்நாடு தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அண்ணாமலை கூறியதாவது..,

    "சனாதன தர்மத்தில் இருப்பவர்கள் பொதுவாக ஹிம்சையை எதிர்த்து, அஹிம்சையின் பக்கம் இருப்பவர்கள். யாரும் அப்படி பேசுவதற்கு உரிமை இல்லை, யாராவது உணர்ச்சியில் அப்படி பேசினால் அதை திருத்திக் கொள்ள வேண்டும். யாரும் பேசக் கூடாது."

    "இந்த மதம் அடிப்படையில் இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் அனைவரையும் அரவணைத்ததால், தான் இந்தியா இன்று இப்படிப்பட்ட நாடாக இருக்கிறது. யார் சொல்லி இருந்தாலும், எந்த பொறுப்பில் இருந்து அப்படி சொல்லி இருந்தாலும் கூட கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தும் போது அது தவறான அர்த்தத்தை கொடுக்கும். யார் சொல்லி இருந்தாலும், இது போன்ற கருத்துக்களை தவிர்ப்பது மிக மிக நல்லது," என்று தெரிவித்து உள்ளார்.

    Next Story
    ×