search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மகளிர் திட்டம்"

    • விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.
    • 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    2024- 25ம் ஆண்டிற்கான தமிழ்நாட்டு பட்ஜெட்டில் மலைப் பிரதேசங்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் மகளிர் கட்டணம் இல்லாமல் பயணிக்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி, இந்த திட்டம் இன்று முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டி அளித்திருந்தார்.

    இந்நிலையில், இந்த திட்டம் முதற்கட்டமாக உதகையில் இன்று தொடங்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டத்தை அமைச்சர்கள் சிவசங்கர், ராமச்சந்திரன், ஆ.ராசா எம்.பி., ஆகியோர் விரிவாக்கப்பட்ட திட்டத்தில் புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தனர்.

    மேலும், நீலகிரி மாவட்டத்தில் மகளிருக்கான இலவச பயணத் திட்டத்தில் இயக்கப்பட்ட 11 அரசுப் பேருந்துகள் 99ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    இனி, இத்திட்டத்தின் மூலம் 35 கி.மீ தூரம் வரை கட்டணம் இன்றி மகளிர் பயணம் செய்ய முடியும்.

    • தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது.
    • திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை.

    வேடசந்தூர்:

    என் மண், என் மக்கள் நடைபயணம் மேற்கொண்டு வரும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். வேடசந்தூர், எரியோடு, வெல்லணம்பட்டி, ஆர்.டி.ஓ.அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் நடைபயணம் சென்ற அண்ணாமலைக்கு தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    அப்போது அவர் பேசியதாவது, தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் தி.மு.க.வினரின் வருமானத்திற்காகத்தான் நடத்தப்படுகின்றன. இதனால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தி.மு.க இருக்கும்வரை தமிழகத்தில் டாஸ்மாக், கள்ளச்சாராயம் அழியாது. மக்களின் வருமானம் கல்விக்குதான் செல்ல வேண்டும்.

    பா.ஜ.க.வை எதிர்ப்பதற்காகவே பிறந்த கட்சி கம்யூனிஸ்டு, அவர்களுக்கு வேறு எந்த கொள்கையும் கிடையாது. தி.மு.க தொண்டர்கள் கருணாநிதி, மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோரை கடந்து தற்போது இன்பநிதிக்கு போஸ்டர் ஒட்டி கொண்டிருக்கின்றனர். தி.மு.க.வின் வளர்ச்சியே இதுதான். அவர்கள் குடும்பம் வளர்ச்சி அடைந்து கொண்டே இருக்கும். தொண்டர்கள் அந்த குடும்பத்திற்கு போஸ்டர் ஒட்டிக்கொண்டே இருக்க வேண்டும்.

    தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த மகளிர் உரிமைத்தொகைத்திட்டம் செப்டம்பர் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் தொடங்கி வைக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளான 14-ந்தேதியே பலருக்கு செல்போனில் பணம் அனுப்பியதாக குறுஞ்செய்தி வந்தது. இதுகுறித்து தி.மு.க நிர்வாகிகளிடம் கேட்டபோது முழுஅமாவாசை நாளில் தொடங்கினால் திட்டம் சிறப்பாக இருக்கும் என்று கூறுகின்றனர்.

    சனாதனத்தை எதிர்க்கும் தி.மு.க அமாவாசை நாளில் திட்டம் தொடங்க நாள் பார்க்கலாமா? திண்டுக்கல் மாவட்டத்தில் 2 அமைச்சர்கள் இருந்தபோதும் எந்தவித வளர்ச்சியும் ஏற்படவில்லை. மக்கள் மிகவும் பின்தங்கி உள்ளனர். தற்போது பெரும்பாலான அமைச்சர்களுக்கு அமலாக்கத்துறை சோதனை பீதியை ஏற்படுத்தி வருகிறது. இலாகா இல்லாத தி.மு.க அமைச்சர் இன்னும் சிறையில் இருக்கிறார். மேலும் சில அமைச்சர்களுக்கு சோதனை விரைவில் வரும்.

    செந்தில்பாலாஜி சேராத ஒரே கட்சி பா.ஜ.க மட்டும்தான். அவரை தி.மு.க அரசு தொடர்ந்து பாதுகாத்து வருவதை மக்கள் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் பேசினார். திண்டுக்கல் மாவட்டத்தில் தனது நிறைவு நடைபயணத்தை பழனியில் அண்ணாமலை இன்று நிறைவு செய்கிறார்.

    • மகளிர் சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும்
    • ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடங்கள், கால்நடை தீவனம் தயாரிப்பு எந்திரம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    அவினாசி :

    மகளிர் திட்டத்தின் சார்பில் பொருளாதார விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த வாழ்வாதார நடவடிக்கை குறித்து அவினாசி ஒன்றியம் தெக்கலூர், வேலாயுத ம்பாளையம், மற்றும் புதுப்பாளையம் ஆகிய ஊராட்சிகளில் மாவட்ட கலெக்டர் எஸ் .வினீத் ஆய்வு மேற்கொண்டார்.

    தெக்கலூர் ஊராட்சியில் வணிகவளாக கட்டிடம், சுய உதவிக் குழு உற்பத்தி மற்றும் அங்காடிகள் ஆயத்த ஆடை தயாரிப்பு நடவடி க்கைகள் ஆகியவற்றையும் வேலாயுதம்பாளையம் ஊராட்சியில் ஹாலோ பிளாக் தயாரிக்கும் மையம்,மரச்செக்கு எண்ணெய் தயாரிப்பு, இ சேவை மற்றும் வாடகை பாத்திரங்கள் மையம், மாவரைக்கும் எந்திரம் மற்றும் விற்பனை அங்காடி ஆயத்த ஆடை தயாரிப்பு கட்டிடங்கள் ஆகியவற்றை யும், புதுப்பாளையம் ஊராட்சியில் கால்நடை தீவனம் தயாரிப்பு எந்திரம் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறுகையில், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாழ்வாதார நடவடிக்கை களை மேம்படுத்தி பொருளாதாரத்தை அதிகரித்து தங்களது வாழ்க்கையை உயர்த்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

    ஆய்வின் போது இணை இயக்குனர் (மகளிர் திட்டம்)வரலட்சுமி, மேலாளர் (டி .எஸ் .எம் .எஸ்.) நிதியா, மாவட்ட வள பயிற்றுனர் எஸ்.முனிராஜ் ,வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மனோகரன், விஜயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • பெண் விவசாயிகள் குழுவாக இணைந்து, வேளாண் உற்பத்தியாளர் குழு அமைக்கலாம்.
    • குழுவுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, வேளாண் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.

    திருப்பூர் :

    நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு திட்டம், ஊரக வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் மூலம் நகரம் மற்றும் கிராமப்புற பெண்களின் வாழ்வாதார மேம்பாட்டுக்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.இதன்மூலம் சிறு, குறு பெண் விவசாயிகள் 20 பேர் குழுவாக இணைந்து, வேளாண் உற்பத்தியாளர் குழு அமைக்கலாம். குழுவுக்கு தலாஇரண்டு லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து, வேளாண் மேம்பாட்டு பணிகளை செய்ய வழிகாட்டுதல், பயிற்சி அளிக்கப்படும்.

    இது குறித்து திருப்பூர் மகளிர் திட்ட அலுவலர்கள் கூறியதாவது:- மகளிர் குழுவாக செயல்படும் பெண் விவசாயிகள் இணைந்து வேளாண் உற்பத்தியாளர் குழுவாக பதிவு செய்யலாம். வேளாண் பணிகளை மேம்படுத்த தலா, 2 லட்சம் ரூபாய் வட்டியில்லா கடன் வழங்கப்படும். இத்தொகையை திருப்பி செலுத்தியதும் அதனை முதலீடாக கொண்டு உற்பத்தியாளர் குழு இயங்கலாம்.பெண் விவசாயிகள் மட்டுமல்ல விவசாய பெண் தொழிலாளர்களும் குழுவாக இணைந்து வட்டியில்லா கடன் பெற்று ஆடு, மாடு வளர்ப்பை மேம்படுத்தலாம். இதேபோல் பண்ணை சாரா உற்பத்தி குழுக்களை அமைத்து வட்டியில்லாத 2.50 லட்சம் ரூபாய் கடன் பெற்று சார்ந்துள்ள தொழில்களை மேம்படுத்தலாம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×