search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோரிக்கை"

    • ஏ.டி.எம். மையத்தின் முகப்பில் வாறுகால் அமைக்க பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
    • வயதானவர்கள் செல்லும்போது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரத்தில் கீழப்பாவூர் யூனியன் அலுவலகத்தின் கீழ் புறத்தில் நெல்லை-தென்காசி நான்கு வழிச்சாலை ஓரம் இயங்கி வரும் எஸ்.பி.ஐ. வங்கியின் சார்பில் அதன் அருகே ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டுள்ளது.

    தற்போது 4 வழிச்சாலை பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஏ.டி.எம். மையத்தின் முகப்பு பகுதியில் வாறுகால் அமைப்பதற்கு பள்ளம் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று முடிவு பெறாமல் இருக்கும் நிலையில் ஏ.டி.எம். மையத்திற்கு வாடிக்கை யாளர்கள் செல்வதற்காக மரத்தால் ஆன நடைமேடை அமைக்கப்ப ட்டுள்ளது. நடைமேடையும் தற்போது உடைந்து ஆபத்தான நிலையில் வாடிக்கையாளர்களை அச்சுறுத்தும் காட்சியளிக்கிறது. வயதானவர்கள் அதன் வழியே ஏறி செல்லும் பொழுது கால் தவறி கீழே விழும் நிலை நீடித்து வருகிறது. எனவே வாடிக்கை யாளரின் நலன் கருதி தரமான நடை மேடை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
    • சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படுகிறது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள வட்டாலூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சின்டெக்ஸ் தொட்டி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வந்த நிலையில் சின்டெக்ஸ் தொட்டிக்கு நீரேற்றும் மின் மோட்டார் பழுதாகியதாக கூறப்படு கிறது. இதனால் கடந்த 10 நாட்க ளுக்கு மேலாக தண்ணீர் சரி வர கிடைக்காததால் இதனை சரி செய்து முறையான தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி வட்டாலூர் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் கீழப்பாவூர் பேரூ ராட்சியின் தலைவர் பி.எம்.எஸ். ராஜன் மற்றும் செயல் அலுவலர் மாணிக்க ராஜாவை சந்தித்து மனு வழங்கினர். அப்போது உடனடியாக சம்பந்தப்பட்ட ஊழியர்களை அழைத்து மின் மோட்டாரை சரி செய்து மீண்டும் வழக்கம் போல் தண்ணீர் வழங்கப் படும் என உறுதி அளித்தனர்.

    • பயணிகள் நலச்சங்கம் கோரிக்கை
    • நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்த புரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு

    நாகர்கோவில் :

    ஒடிசா ரெயில் விபத்துக்கு பிறகு ரெயில்வே வாரியம், காரி டார் பிளாக் பணிக்கான கால அளவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக தெற்கு ரெயில்வே, பல்வேறு ரெயில்களின் கால அட்டவணையை மாற்றம் செய்துள்ளது. அதன்படி நாகர்கோவில்-மங்களூர் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரெயிலை திருவனந்த புரத்துடன் நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்யப்பட்டு அதற்கானஉத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ரெயிலை திருவனந்தபுரத்துடன் நிறுத்தம் செய்யும் போது அதற்கு மாற்று ஏற்பாடாக திருவனந்த புரம் - மங்களூர் (16347/16348) ரெயிலை நாகர்கோ வில் வரை நீட்டிப்பு செய்ய வேண்டும் என்று பயணிகள் நலச்சங்கம் வலியுறுத்தி உள்ளது.

    இவ்வாறு நீட்டிப்பு செய்தால் மட்டுமே, ஏரநாடு ரெயிலை திருவனந்த புரத்துடன் நிறுத்தம் செய்ய வேண்டும். இது குறித்து குமரி மாவட்ட மக்கள் பிரதிநிதிகள் குரல் கொடுக்க வேண்டும்.

    இதே போல் குமரி மாவட்டத்திலிருந்து வருவாய் குறைவாக இயங்கும் ரெயில்களாக கன்னியா குமரி-திப்ருகார், நாகர்கோ வில்-ஷாலிமார், கன்னியாகுமரி-கத்ரா, திரு நெல்வேலி- பிலாஸ்பூர், கன்னியாகுமரி-புனே போன்ற ரெயில்கள் உள்ளன.

    திருநெல்வேலியிருந்து நாகர்கோவில் டவுண், திருவனந்தபுரம் வழியாக பிலாஸ்பூருக்கு செல்லும் ரெயில் நடு இரவு நேரத்தில் மிகவும் வருவாய் குறைந்து நஷ்டத்தில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் இயங்கும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் புதன் கிழமைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் காரிடார் பிளாக் பணியும் பாதிப்படைகிறது. ஆனால் இந்த ரெயில் நிறுத்தம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடாதது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

    நாகர்கோ வில்-மங்களூர் ஏரநாடு ரெயிலை திருவனந்த புரத்துடன் நிறுத்தியது போல, திருநெல்வேலி-பிலாஸ்பூர் ரெயிலை கொச்சு வேலியுடன் நிறுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு செய்வதால் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் 2 நாட்கள் காரிடார் பிளாக் பாதிப்படை யாது.

    இந்த ரெயிலை கொச்சுவே லியுடன் நிறுத்தம் செய்வதற்கு பதிலாக கொச்சுவேலியில் இருந்து கொல்லம், எர்ணாகுளம், மங்களூர், கோவா, மும்பை வழியாக கொங்கன் பாதையில் செல்லும் கொச்சுவேலி – போர்பந்தர் அல்லது கொச்சுவேலி-இந்தூர் ஆகியரெயில்களில் ஏதேனும் ஒரு வாராந்திர ரெயிலை திருநெல்வேலி வரை நீட்டிப்பு செய்து இயக்க வேண்டும்.

    இந்த ரெயில்கள் திருநெ ல்வேலி-–ஜாம்நகர் செல்லும் கால அட்டவணை யில் தான் இயக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு இயக்கும் போது குமரி மற்றும் நெல்லை மாவட்ட பயணிகள் மும்பை செல்ல கூடுதல் ரெயில் சேவை கிடைக்கும். ெரயில்வே துறைக்கும் அதிக வருவாய் கிடைக்கும் என்று பயணிகள் நலச் சங்கம் தெரிவித்துள்ளது.

    • கல்லூத்து ஏ.டி.காலனியில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து ஏ.டி.காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

    நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் வி.கே.கணபதி, எஸ்.ராதா, பஞ்சாயத்து தலைவர் ஆ.செல்லப்பா, துணைத்தலைவர் ஒளிவுலெட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனை மரங்கள் காணப்படுகிறது.
    • ஆதிச்சநல்லூர் போன்ற இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.

    செய்துங்கநல்லூர்:

    பனைமரம் தமிழ்நாட்டின் மாநில மரம். இந்த பனைமரம் இந்தியாவில் 8 கோடிக்கும் அதிகமாக உள்ளது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 5 கோடிக்கும் அதிகமாக இந்த பனை மரங்கள் காணப்படுகிறது. குறிப்பாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற தென்மாவட் டங்களில் தான் அதிகமாக பனைமரங்கள் காணப்படு கிறது.

    வெகுவாக குறைந்தது

    ஒருக்காலத்தில் தாமிரபரணி இருகரையிலும கோடிகணக்கில் பனை மரங்கள் இருந்தன. இங்கு ஒவ்வொரு ஊரிலும் பனைத்தொழில் அதிகமாக நடந்தது. பனைத்தொழிலாளிகளும் அதிகமாக வாழ்ந்து வந்தனர். கடந்த 25 வருடத்தில் பனைத் தொழில் வெகுவாக குறைந்தது. இங்கிருந்த பனை மரங்கள் சுமார் 80 சதவிகிதம் குறைந்துவிட்டது.

    இதில் தப்பி தவறி ஆதிச்சநல்லூர் போன்ற ஒரு சில இடங்களில் ஆற்றுப்படுகையில் 20 சதவீதம் பனை மரங்கள் காணப்பட்டன.

    தற்போது பனை மரங்களை வளர்ப்பதற்காக தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

    குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள கிள்ளிகுளம் வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் பனை மரங்களை ஆய்வு மேற்கொள்வதற்காக ரூ. 1 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டு அதற்கான ஆராய்ச்சி கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    1 கோடி பனைமர விதைகள்

    இது மனதுக்கு ஆறுதலை தந்து வந்தது. இதை தவிர தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் முயற்சியில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக 1 கோடி பனைமர விதைகள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நடப்பட்டு வரு கிறது. ஆனாலும் மரங் களை அழிக்க செயற்கை யோடு இயற்கையும் போட்டிப் போடுகிறது. தூத்துக்குடி மாவட்டங்களில் ஜூன், ஜூலை மாதங்களில் அடிக்கும் காற்றில் ஆங்காங்கே வருடம் தோறும் மரங்கள் தீப்பிடித்து எரிவது வாடிக்கையாகி விட்டது.

    தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் ஏரல் சுற்று வட்டாரப்பகுதி களில் கடந்த 2 மாதங்களில் மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

    காற்றின் காரணமாக இந்த தீ விபத்துகள் அனைத்தும் பெரிய அளவில் மரங்களை பாதித்துள்ளது. குறிப்பாக பனைமரங்கள், தென்னை மரங்கள் மற்றும் வாழை மரங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டன.

    மரங்கள் கணக்கெடுப்பு

    கடந்த 1-ந் தேதி ஸ்ரீவை குண்டம் அருகே உள்ள பொன்னங்குறிச்சி தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் உள்ள கரை மற்றும் உள்பகுதியில் இருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட பனைமரங்கள் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமானது.

    இந்த விபத்தில் தனி யாருக்கு சொந்தமான 50-க்கும் மேற்பட்ட தென்னை மரங்களும் எரிந்து சேதமானது. தீ பிடித்த மறுநாள் இந்த விபத்து குறித்து வருவாய்த்துறை யினர் ஆய்வு மேற்கொண்டு தீயில் எரிந்த மரங்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தினர்.

    இந்த மரங்கள் அனைத்தும் ஸ்ரீவைகுண்டம் பொதுப்பணித் துறையினருக்கு சொந்தமானது. ஆனால் பொதுப்பணித் துறை அதிகாரிகள் தாமிர பரணி ஆற்றுப்பகுதியில் உள்ள எந்த மரங்களையும் பராமரிப் பதில்லை.

    எரிந்த பனைமரங்களை சுற்றி ஏராளமான காய்ந்த பனை ஓலைகள் கிடந்த காரணத்தி னால் தான் இந்த தீ விபத்து மிகப்பெரிய அளவில் ஏற்பட்டது.

    இந்த மரங்களை பொதுப் பணித்துறையினர் பராமரித்து வைத்திருந்தால் அதிகமான பனை மரங்கள் எரிந்து சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எனவே இந்த தாமிர பரணிக்கரையில் உள்ள பனைமரங்கள் மட்டுமல்லாமல் அனைத்து மரங்களையும் பொதுப் பணித்துறை அதிகாரிகள் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

    துளிர்விடத் தொடங்கியது

    இதற்கிடையில் 2 வாரத்திற்கும் மேல் ஆன காரணத்தினால் தீயில் எரிந்த பனைமரங்களில் பெரும்பாலான பனை மரங்கள் குருத்தோலை விடத்தொடங்கி உள்ளது. இதைக்கண்ட பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வ லர்களி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு கூறியதாவது:-

    பனை மரங்கள் ஒரு முறை தீயில் எரிந்தால் அதன்பின்னர் அதை வளர்ப்பது மிகவும் கடினம். ஆனால் தாமிரபரணிக் கரையில் நீர் படுகையில் இருந்த காரணத்தினால் தற்போது இந்த மரங்கள் அனைத்தும் துளிர் விடத்தொடங்கி உள்ளன.

    எனவே இந்த எரிந்த மரங்களில் உள்ள ஓலைகள், நுங்குகள் என அனைத்தை யும் அகற்றி அனைத்து பனை மரங்களையும் முறை யாக பராமரித்து வருடம் தோறும் இந்த பனைமரங்க ளில் உள்ள காய்ந்த ஓலைகளை அகற்றினாலே காற்றுக் காலங்களில் ஏற்படும் தீ விபத்துக்களை தவிர்க்க முடியும். எனவே பொதுப்பணித் துறையினர் இந்த வேலைகளை முறை யாக செய்ய வேண்டும்.

    தாமிரபரணி ஆற்றுப்படு கையில் ஏராளமான பனை மரங்கள் உள்ளது. இந்த பனைமரங்களில் வருடம் தோறும் ஏற்படும் தீ விபத்துக்களில் பனை மரங்கள் எரிந்து சேதமாகும் நிலை தொடர்ந்து வருகிறது. வருடம்தோறும் இந்த பனை மரங்களை பராமரித்து வைத்தால் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாது.

    எனவே இந்த மரங்களை பாதுகாக்க பொதுப்பணித் துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.


    தீ விபத்தில் கருகிய பனை மரங்கள்.

    தீ விபத்தில் கருகிய பனை மரங்கள்.


     


    • நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.
    • போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் சமயநல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காமராஜ், இவர் அதே பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா(வயது49). இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணியளவில் கவிதா தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார்.

    அப்போது மர்மநபர் மோட்டார்சைக்கிளில் கவிதாவை பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென மர்மநபர் கவிதாவை மறித்து அவரை தாக்கி கழுந்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினான். இதுகுறித்து கவிதா சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.

    • தனியார் பட்டா நிலத்தில் கட்டிடத்தை இடித்து அகற்றிய மண் கொட்டப்பட்டுள்ளது.
    • மண் கொட்டப்பட்டுள்ளதால் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய முடியாத நிலை உள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நடுபூலாங்குளம் கிராமத்தில் நடுத்தெரு பகுதியில் அமைந்துள்ள முருகன் கோவிலின் முன்பாக தனியார் பட்டா நிலத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் தன்னுடைய கட்டிடத்தை இடித்து இரவில் எவ்வித அனுமதியும் பெறாமல் அகற்றிய மண் அனைத்தையும் டிராக்டர் மூலம் கொட்டி வைத்துள்ளார். முருகன் கோவிலின் வாயிலில் கொட்டியுள்ளதால் கோவிலுக்கும் வரும் பக்தர்கள் பிரகாரத்தை சுற்றி சாமி தரிசனம் செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அனுமதி இன்றி கொட்டப்பட்ட மண்ணை உடனடியாக அகற்றிட சம்பந்தப்பட்ட பூலாங்குளம் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்குவாரி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
    • கோவை மாவட்டம் முழுவதும் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது.

    கோவை

    கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடந்தது. அப்போது கோவை தெற்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் வசந்தராஜன் தலைமையில் நிர்வாகிகள், கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் புகார்மனு அளித்தனர்.

    அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கோவையில் கிரஷர் மற்றும் கல்குவாரி நிறுவ னங்கள் கடந்த 10 நாட்களாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் மாவட்டம் முழுவதும் கட்டுமான வேலைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. பல லட்சம் கூலி தொழிலாளர்கள் வேலையிழந்து உள்ளனர்.

    இதற்கிடையே கோவையில் உற்பத்தியாகும் கனிம வளங்களில் 90 சதவீதம், முறைகேடாக கேரளாவிற்கு கடத்தபட்டு விற்கப்பட்டு வருகிறது.

    இதை கண்டித்து கிரசர் மற்றும் கல்குவாரி நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு உள்ளன.

    எனவே அரசு உடனடியாக கிரசர் மற்றும் கல்குவாரி, லாரி உரிமையா ளர்களுடன் பேச்சுவா ர்த்தை நடத்தி வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மேலும் கோவையில் இருந்து கேரளாவிற்கு கனிம வளங்களை கடத்தி செல்வதை தடுக்க வேண்டும்

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    • ரெயில்வே கிராசிங் பகுதிகளில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும்
    • ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.

    மதுரை

    மீட்டர் கேஜ் பாதையாக இருந்த மதுரை- போடி ரெயில் பாதை கடந்த சில வருடங்களுக்கு முன்பு அகல ரெயில் பாதையாக மாற்றும் பணி நடந்தது. பணியின் போது அப்பகுதியில் இருந்த ரெயில்வே கேட்களை பொதுமக்களின் பாதுகாப்பு கருதி தெற்கு ரெயில்வே மூடியது.

    இதை தொடர்ந்து மதுரை- போடி ரெயில்வே பாதைக்கு அருகே இருந்த பெரும்பாலான கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் ரெயில்வே கேட்டை கடக்க வழி இல்லாமல் 2 கிலோ மீட்டர் தூரம் சென்று ரெயில்வே கிராசிங்கை கடக்கும் சூழல் உருவானது.

    சில இடங்களில் ரெயில்வே நிர்வாகத்தால் 500மீட்டர் தூரம் வரை மட்டுமே சர்வீஸ் ரோடு போடப்பட்டுள்ளது. மற்ற பகுதியில் பொதுமக்கள் பயணிக்க இயலாத வகையில் கரடுமுரடான சாலை உள்ளது.

    மேலும் புளியங்குளம் ஒத்தவீடு- கிண்ணிமங்கலம், மீனாட்சிபட்டி, தென்பழஞ்சி, மணப்பட்டி, வெள்ளப்பாரைபட்டி, சின்னசாக்கிலிபட்டி, அய்யனார்குளம், மீனாட்சி காலனி, கரடிப்பட்டி, ஆலம்பட்டி, கீழப்புதூர் க.புதூர் முத்துப்பட்டி, நாகமலைபுதூர், அடைக்கம்பட்டி, ஓந்திமலை, டீச்சர்ஸ் காலனி போன்ற 18 கிராம மக்கள் மதுரை- போடி ரெயில்வே லைனை கடந்து, மதுரை - தேனி மெயின் ரோட்டுக்கு தினந்தோறும் வந்து செல்கின்றனர். இந்த சாலை மிகவும் மோசமாக உள்ளது.

    இது குறித்து மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் மணிமாறன், விருதுநகர் எம்.பி. மாணிக்கம் தாகூர், ரெயில்வே கோட்ட மேலாளர் ஆகியோரிடம் மதுரை - போடி ரெயில்வே லைனில் உள்ள சர்வீஸ் ரோடுகளை நாகமலை புதுக்கோட்டையில் இருந்து செக்கானூரணி வரை தார்ச்சாலை அமைத்து தர வேண்டும் என திருப்பரங்குன்றம் ஒன்றிய துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை மனு அளித்தார்.

    • நயினார்குளத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நயினார்குளம் சாலை பகுதியில் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொன்டர் சன்னதி கோவிலில் இருந்து ஆர்ச் பகுதியை இணைக்கும் சாலையில் நயினார்குளம் உள்ளது. டவுன் பகுதியில் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    தச்சநல்லூர் மண்ட லத்திற்குட்பட்ட நயினார்கு ளமானது 2007-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமாரிப்பு இல்லாததால் டவுன் நயினார்குளம், குப்பைகளின் கூடாரமாகவே இருந்தது. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.14.68 கோடி செலவில் நயினார்குளம் கரைப்பகுதிகளை, மேம்படுத்தி கண்கவரும் அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

    அதன்பின்னர் பணிகள் தொடங்கி தற்போது குளக்கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிர்புறம் தடுப்பு சுவர் அமைத்தும், நடுவில் அழகிய நடைபாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் சாலையில் ஓரளவு பணிகள் முடிந்த நிலையில், நயினார்குளம் சாலை பகுதியில் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    இந்த நடைபாதையின் நடுவில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. முறையான பராமரிப்பின்மையால் 12 அடி வரை ஆழம் இருந்த இந்த குளம் தூர்வாராததால் 4 அடிக்கும் குறைவான ஆழம் கொண்ட குட்டையாக மாறிவிட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    இதன் காரணமாகவே நயினார்குளத்தில் படகு குழாம் அமைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இருக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுத்தமல்லி அணைக்கட்டு சென்றடைந்து, அங்கிருந்து கால்வாய் மூலம் நயினார் குளத்திற்கு தண்ணீர் வரும். ஆனால் தூர்வாரப்படாததால் தேவையான அளவு தண்ணீரை சேமிக்கும் திறனை குளம் இழந்துள்ளது. இதனால் இந்த குளத்தில் மூலம் பாசனம் பெறும் விவசாய நிலங்களும் வெகுவாக குறைந்துள்ளன.

    குளத்தின் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் மது வாங்கும் பலரும் நயினார் குளத்தை பார் ஆக மாற்றி வருகின்றனர். அங்கு வைத்து குடித்துவிட்டு மதுபாட்டில்களை குளத்திற்குள் வீசிவதோடு, சாலைகளிலும் போதையில் தடுமாறி வருகின்றனர். சில நேரங்களில் போதையில் நயினார்குளம் சாலையில் சிலர் படுத்துவிடு கின்றனர் என்றும் அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். எனவே நயினார் குளம் சாலையில் குடிமகன்கள் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குளத்தை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


    நயினார்குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்.

    நயினார்குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்.


     


    • புதிய துணை சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே உள்ள கடலோர கிராமமான புதுப்பட்டிணம் கிராமத்தில் துணை சுகாதார நிலையம் மிகவும் பழுதடைந்த நிலை யில் உள்ளது. இங்கு புதுப்பட்டிணம், கண்கொள்ளான்பட்டிணம், தோப்பு முள்ளி முனை, காரங்காடு ஆகிய கடலோர கிராமங்களைச் சேர்ந்த வர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

    தற்போது கட்டிடம் மிகவும் பழுதடைந்துள்ள தால் செவிலியர்கள் அங்கு தங்கி பணியாற்ற முடியாத நிலை உள்ளது. இதனால் இப்பகுதி கடலோர மீன வர்கள் உட்பட அனைத்து பொதுமக்களும் சிகிச்சை பெறுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

    இதனால் பல கிலோ மீட்டர் பயணம் செய்து சிகிச்சை பெறும் அவல நிலை உள்ளது. மேலும் கட்டிடம் பழுது காரணமாக செவிலியர்கள் இங்கு தங்க முடியாத காரணத்தால் அவசர சிகிச்சை பெற முடியாமல் சில நேரங்களில் உயிரிழப்புகள் ஏற்படுகிறது.

    குறிப்பாக இரவு நேரங்க ளில் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், வயதான வர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே பழுதடைந்த துணை சுகாதார நிலையத்திற்கு பதிலாக புதிதாக துணை சுகாதார நிலையம் கட்ட இப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது.
    • தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது.

    விழுப்புரம், மே.18–-

    விழுப்புரம் மாவ ட்டம்,மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்தவ ர்கள் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். அவர்களை நேற்று ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாள ர்ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர்அவர் கூறியதாவது:-

    மரக்காணம்,எக்கியார் குப்பம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க ஓ.பி.எஸ்., கூறியதின் பேரில் இங்கு வந்துள்ளோம். .செங்கல்பட்டு மாவட்டத்தில் இதேபோல் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அறிக்கை கொடுத்துள்ளார்.அரசினுடைய மெத்த னப்போக்கு காரணமாகவும் மதுவிலக்கு கொள்கையில் இன்னும் சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது. அரசு முறையான, சீரான ஒரு மதுவிலக்கு கொள்கை யை உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு தனது அலட்சியப் போக்கை விட்டு விட்டு சரி செய்ய வேண்டும். உளவு, காவல்,அமலாக்கம் போன்ற துறைகளில் பணிபுரி வோரை தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது. மதுவிலக்கு கொள்கையில் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசு உடனடியாக மாற்ற ங்கள் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் கோரிக்கையை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    விழுப்புரம் மாவட்ட செயலா ளர் ஏழுமலை, துணைச் செயலாளர் டாக்டர் கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் வேலு, விழுப்புரம் நகர செயலாளர் கமருதீன், மாநில மீனவர் அணி செயலாளர் ஜெயரா மன், தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணி, நகர செயலா ளர் சங்கரலி ங்கம், அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள் ஏழும லை ,துரை, மாவட்ட ஜெயல லிதா பேரவை தனுசு ஜெயரா மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்உ டனிருந்தனர்.

    ×