என் மலர்
உள்ளூர் செய்திகள்

நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிப்பு
- நடைபயிற்சி சென்ற பெண்ணிடம் 6 பவுன் நகை பறிக்கப்பட்டது.
- போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் மெயின்ரோட்டை சேர்ந்தவர் காமராஜ், இவர் அதே பகுதியில் உரக்கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி கவிதா(வயது49). இவர் தினமும் அதிகாலையில் நடைபயிற்சி செல்வது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று அதிகாலை 5.30 மணியளவில் கவிதா தனது வீட்டின் அருகே நடைபயிற்சி மேற்கொண்டார்.
அப்போது மர்மநபர் மோட்டார்சைக்கிளில் கவிதாவை பின் தொடர்ந்ததாக கூறப்படுகிறது. ஆள்நடமாட்டம் இல்லாத பகுதி வந்தபோது திடீரென மர்மநபர் கவிதாவை மறித்து அவரை தாக்கி கழுந்தில் கிடந்த 6 பவுன் நகையை பறித்துக்கொண்டு தப்பினான். இதுகுறித்து கவிதா சமயநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ராதாமகேஷ், சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடி வருகின்றனர்.
Next Story






