search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஓ.பி.எஸ். அணி"

    • பூபால சமுத்திரம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார்.
    • புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் மற்றும் நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 59 லட்சம் நிதி பெற்று தந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு அந்தந்த பள்ளி களின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

    விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. சங்கர், அய்யனார்குளம் பஞ்சாயத்து தலைவர் நீதி ராஜன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். ஆசிரியர் அப்துல் காதர் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வுக்கு தங்கள் ஊர் பள்ளிக்கு கூடுதலாக 20 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 2 லட்சம் நிதி பெற்று தந்ததற்கு நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றியும், பாராட்டு தல்களை தெரிவிக்கப் பட்டது.

    விழாவில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணிசெயலாளர் சேர்ம துரை உட்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜாஸ்மின் ஹெலன் நன்றி கூறினார்.

    முன்னதாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பூலாங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 20 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ. 1.57 கோடி நிதியை தமிழக அரசிட மிருந்து பெற்று தந்ததற்கு பூலாங்குளம் பள்ளியின் சார்பாகவும் ஊர் பொது மக்கள் சார்பாகவும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றி யம் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபால சமுத்திரம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் புதிய கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார். தொடர்ந்து ஆலங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கு அடிக்கல் நாட்டி னார்.

    விழாவில் ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, அண்ணா தொழிற்சங்க மாநில அமைப்பு செயலா ளர் சேர்மதுரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் பாலையா பாண்டியன், ஆலங்குளம் நகர செய லாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர் செல்லத் துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஆலங்காயம்:

    திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த சென்னம்பேட்டை பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் ஓ.பி.எஸ். தரப்பு நகர செயலாளர் கோபி சங்கர் தலைமையில் உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக ஓ.பி.எஸ். தரப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ்பாபு கலந்துகொண்டனர். இதில் பல்வேறு மாற்று கட்சிகளில் இருந்து விலகி 100 பேர் ஓ.பி.எஸ். அணியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

    இதில் நகர அவை தலைவர் சாஜாத் உசேன், சிறுபான்மை நகர செயலாளர் ஆதில் அஹமத், சிறுபான்மை அவைத் தலைவர் அத்தாவுல்லா, சிறுபான்மை துணை செயலாளர் நாசிர் அஹமத், மாவட்ட பிரதிநிதி சலீம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

    • சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது.
    • தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது.

    விழுப்புரம், மே.18–-

    விழுப்புரம் மாவ ட்டம்,மரக்காணம் அடுத்த எக்கியார் குப்பத்தில் கள்ளச் சாராயம் குடித்தவ ர்கள் முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்து வ மனையில் சிகிச்சை பெற்று வருகி ன்றனர். அவர்களை நேற்று ஓ.பி.எஸ் அணி மாவட்ட செயலாள ர்ஜே.சி.டி. பிரபாகரன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.பின்னர்அவர் கூறியதாவது:-

    மரக்காணம்,எக்கியார் குப்பம் சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கும், பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவர்களுக்கும் ஆறுதல் தெரிவிக்க ஓ.பி.எஸ்., கூறியதின் பேரில் இங்கு வந்துள்ளோம். .செங்கல்பட்டு மாவட்டத்தில் இதேபோல் நடந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து அ.தி.மு.க.ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ஓபிஎஸ் அறிக்கை கொடுத்துள்ளார்.அரசினுடைய மெத்த னப்போக்கு காரணமாகவும் மதுவிலக்கு கொள்கையில் இன்னும் சரியான அக்கறை காட்டாத தன்மையும் எடுத்துக்காட்டும் விதத்தில் தான் இந்த சம்பவங்கள் நிகழ்துள்ளது. அரசு முறையான, சீரான ஒரு மதுவிலக்கு கொள்கை யை உடனடி நடவடிக்கை எடுத்து சீர்படுத்த வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் நாங்கள் முதல்வருக்கு கோரிக்கை வைக்கிறோம். அரசு தனது அலட்சியப் போக்கை விட்டு விட்டு சரி செய்ய வேண்டும். உளவு, காவல்,அமலாக்கம் போன்ற துறைகளில் பணிபுரி வோரை தற்காலிக பணி நீக்கம்,இடமாற்றம் செய்வதால் இந்த பிரச்ச னைகள் தீர்ந்து விடாது. மதுவிலக்கு கொள்கையில் ஒரு நிபுணர் குழுவை நியமிக்க வேண்டும். மதுவிலக்கு கொள்கையில் அரசு உடனடியாக மாற்ற ங்கள் கொண்டுவர வேண்டும் என அ.தி.மு.க.சார்பில் கோரிக்கையை வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

    விழுப்புரம் மாவட்ட செயலா ளர் ஏழுமலை, துணைச் செயலாளர் டாக்டர் கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் வேலு, விழுப்புரம் நகர செயலாளர் கமருதீன், மாநில மீனவர் அணி செயலாளர் ஜெயரா மன், தொகுதி பொறுப்பாளர் சுப்பிரமணி, நகர செயலா ளர் சங்கரலி ங்கம், அண்ணா தொழி ற்சங்க நிர்வாகிகள் ஏழும லை ,துரை, மாவட்ட ஜெயல லிதா பேரவை தனுசு ஜெயரா மன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர்உ டனிருந்தனர்.

    • மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஒ.பி.எஸ். அணி சார்பில் மொழிப்போர் தியாகிகளுக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
    • தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    மதுரை

    இந்தி திணிப்புக்கு எதிராக 1960 ஆண்டு தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டம் அடைந்த நிலை யில் பேரறிஞர் அண்ணா தலைமையில் தமிழக முழுவதும் மாணவர்கள், இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் இந்தி எதிர்ப்பு போராட்ட த்தில் ஈடுபட்டனர். இதில் பலர் உயிரிழந்தனர். தமிழகத்தில் ஆண்டுதோறும் ஜனவரி 25-ந் தேதி மொழிப்போர் தியாகிகள் தினம் கடைபிடிக்கப்படுகிறது.

    அதன்படி இன்று மதுரை அருகே உள்ள ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ் அணி சார்பில் மாணவர் அணி மாநில இணைச்செயலாளர் ஒத்தக்கடை பாண்டியன் தலைமையில் மதுரை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் முருகேசன் முன்னிலையில் தியாகி களின் திரு உருவப் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மாணவராணி மாவட்ட செயலாளர் கமல், ஒன்றிய செய லாளர்கள் யோகராஜ், சன்மார்க்கம், ஜோதி முருகன், இளைஞராணி ராஜமாணிக்கம், பேரவை பாலமுருகன், பொதுக்குழு உறுப்பினர் சிதம்பரம், ஒன்றிய துணை செயலாளர் ராஜமாணிக்கம், மாணவராணி ரகு தேவன், பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

    • காரைக்குடியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவித்தனர்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த தின விழா சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க ஓ.பன்னீர் செல்வம் அணியினர் மாவட்ட செயலாளர் கே.ஆர்.அசோகன் தலைமையில் காரைக்குடி ஐந்து விளக்கு பகுதியில் உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி கொண்டாடினர். இதில் நகர செயலாளர் பாலா, மாநில இளைஞரணி இணை செயலாளர் திருஞானம், சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் மாத்தூர் பாண்டி, வடக்கு ஒன்றிய செயலாளர் அழகப்பன், மாநில எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் சித்தார்த்தன், தொகுதி செயலாளர் சக்கந்தி பழனி, மாவட்ட பாசறை செயலாளர் அங்குராஜ், தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், மாணவரணி செயலாளர் கண்ணதாசன், குணா பாண்டியன், மகளிரணி நிர்வாகி ராமாமிர்தம், முன்னாள் கவுன்சிலர் ரவி உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

    • ஓ.பி.எஸ். அணி சார்பில் எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
    • பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    ராமநாதபுரம்

    முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆணைக்கிணங்க ராமநாதபுரம் மாவட்ட செயலாளர்-மாநிலங்களவை உறுப்பினர் தர்மர் அறிவுறுத்தலின்படி எம்.ஜி.ஆர். பிறந்தநாள் விழா நடந்தது. ராமநாதபுரம் தெற்கு ஒன்றிய செயலாளர்-வழக்கறிஞர் முத்துமுருகன் ஏற்பாட்டில் மாவட்ட அவைத்தலைவர் ராஜேந்திரன், மாவட்ட பேரவை செயலாளர் கவிஞர் ராமநாதன், ராமநாதபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் கோட்டைசாமி, ராமநாதபுரம் நகர் செயலாளர் பாலசுப்பிரமணியன் முன்னிலை வகித்தனர். பாரதி நகரில் அலங்கரிக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

    இதில் நாரல் ஊராட்சி செயலாளர் நாரல் சுரேஷ், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி செயலாளர் முத்துப்பாண்டியன், சத்துணவு பாஸ்கர், கழுகூரணி முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பூபதி, புத்தேந்தல் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கல்யாணி, தெற்குதரவை கிளை செயலாளர் திருமுருகன், சண்முகநாதன், சக்கரைக்கோட்டை ஊராட்சி மன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஆர்.எஸ்.மடை யுவராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் நகர் சார்பில் செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமையில் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வினோபாஜி தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வினோபாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் அருகே பண்ணைத் தோட்டம் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இதில் இளைஞர் அணி இணைச் செயலாளர் கருப்பூர் சீனி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, நகர செயலாளர் வெள்ளத்துரை, மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், நகர செயலாளர் பிரபாகரன், கடம்பூர் நகர செயலாளர் மருதுபாண்டி, புதூர் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், எட்டயபுரம் நகர செயலாளர் முத்து முருகன், பொதுக்குழு உறுப்பினர் வருமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், இளைஞர் அணி செயலாளர் தியாகராஜன், நிர்வாகிகள் பாலமுருகன், செந்தில் முருகன், மலை மாரியப்பன், கந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • தேவகோட்டையில் எடப்பாடி அணியைச் சேர்ந்தவர்கள் 500-க்கும் மேற்பட்டோர் ஓ.பி.எஸ். அணியில் இணைந்தனர்.
    • சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.

    தேவகோட்டை

    அ.தி.மு.க. ஒருங்கி ணைப்பாளர், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையை ஏற்று சிவகங்கை மாவட்ட செயலாளர் ஆவின் சேர்மன் அசோகன் தலைமையில் அவரது ஆதரவாளர்கள் இணையும் நிகழ்ச்சி நடந்தது.சாக்கோட்டை கிழக்கு ஒன்றியக் செயலாளர் பாண்டி, மற்றும் சாக்கோட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் சரவணன், காரைக்குடி பெருநகர செயலாளர் பாலா, தேவகோட்டை நகர செயலாளர் ரவிக்குமார், காரைக்குடி தொகுதி செயலாளர் பழனி, கன்னங்குடி தெற்கு ஒன்றிய செயலாளர் பாண்டி, தேவகோட்டை வடக்கு ஒன்றிய செயலாளர் வினோத், தெற்கு ஒன்றிய செயலாளர் பாவாசி கருப்பையா, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் கணேஷ் பாபு, முன்னிலை வகித்தனர்.

    எடப்பாடி பழனிசாமி அணியில் இருந்து விலகி சாக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த ஒன்றிய துணைச் செயலாளர் ஊரவயல் முத்து மாணிக்கம், அரியக்குடி கிளைச் செயலாளர் ஆறுமுகம், கலாவதி வார்டு கவுன்சிலர் சேகர், எம்.ஜி.ஆர். மன்றம் ராகப்பன், எம்.ஜி.சின்னக்கருப்பன், முத்தரையர் சங்கத் தலைவர் கணேசன், ஒன்றிய பாசறை செயலாளர் ராமராஜன் கண்மாய்க்குடியிருப்பு சுப்பிரமணியன், மா சின்னத்தம்பி, மகளிர் அணியினர் உட்பட 500 நபர்கள் இணைந்தனர்.

    • திருப்பத்தூரில் ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் பேரணி நடந்தது.
    • அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    திருப்பத்தூர்

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நகரில் அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் புதிய மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பேரூர் மற்றும் சார்பு அணிக்கு நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தும் வகையில் பேரணி நடந்தது. காந்தி சிலையில் இருந்து நடை பயணமாக புறப்பட்டு அண்ணா சாலை வரை ஊர்வலம் சென்றது. அண்ணா சிலைக்கும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். இதில் கொள்கை பரப்புச் செயலாளர் மருது அழகுராஜ் பங்கேற்று பேசினார்.

    மாவட்டச் செயலாளர் கே.ஆர். அசோகன், தொகுதி செயலாளர் பத்மநாபன், பொதுக்குழு உறுப்பினர் செந்தில்வேல், மாவட்ட துணை செயலாளர் தமிழரசி, ஒன்றிய செயலாளர்கள் சிவசுப்பிரமணியன், எஸ்.வி. நாகராஜன், தேவேந்திரன், கணேசன், உதயகுமார், விஜயராஜ், சித்திரை செல்வம், செந்தில்குமார், கண்ணன், முத்துக்குமார், முருகேசன், சுப்பிரமணியன், பாண்டி, பேரூர் செயலாளர்கள் ஜெயராமன், கருப்பையா, ராஜு, ராமகிருஷ்ணன், திருஞானம், ஆனந்தராஜ், விஜயமணி, பவானி, சரவணன், மோகன், கணேசன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை திருப்பத்தூர் நகர செயலாளர் எம்.முருகேசன் செய்திருந்தார்.

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு நெல்லை புறநகர் மாவட்டசெயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முத்துக்குமார், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் சார்பில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்டம், நெல்லை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு நெல்லை புறநகர் மாவட்டசெயலாளர் முன்னாள் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வெடி வெடித்து மகிழ்ச்சியும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் முத்துக்குமார், நெல்லை மாநகர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட அவைத் தலைவர் பரமசிவம், மாவட்டபொருளாளர் இசக்கியப்பன், ஈகில் ஜெயராஜ், கூடங்குளம் சாமுவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நாங்குநேரி குபேந்திரா மணி, களக்காடு ஒன்றியம் சாமி, சிவந்திபட்டி மாடசாமி, கோபிநாத், ரவி, கீழநத்தம் பரந்தாமன், மானூர் கந்தசாமி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, பாளைதெற்கு ஒன்றியம் வள்ளல் வைகுண்டம், ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடைபாலன், ஏர்வாடி பீர்முகமது, ராதாபுரம் சாந்தி, ஓடக்கரை ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கணபதி, முத்துக்குமார், தினகரன், கந்தன் , ஞான பொன்ராஜ், மகளிர் அணி பால்கனி, சுப்பையா, அபிராமி, இசக்கிமுத்து, பசீர்மீரான், குன்னத்தூர் ராமகுரு, மீனவன்குளம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சிவகிரி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • ஆலோசனை கூட்டத்திற்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகேயுள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாவீரர் பூலித்தேவன் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பி.எஸ். வருகைதர இருப்பதால் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து சிவகிரி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்திப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகிரி நகர செயலாளர் காசிராஜன் செய்திருந்தார்.

    • அ.தி.மு.க. ஓ.பி.எஸ்.அணி மாவட்ட செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • மருது அழகுராஜ் ஆகியோர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள கே.ஆர்.அசோகனுக்கு திருப்பத்தூரில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    இதில் திருப்பத்தூர் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்று வரவேற்பு கொடுத்தனர்.

    முன்னதாக கே.ஆர்.அசோகன், செய்தி தொடர்பாளர் மருது அழகுராஜ் ஆகியோர் அண்ணாசிலைக்கு மாலை அணிவித்து கொடியேற்றினர்.

    ×