search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு விழா -நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு  ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவிப்பு
    X

    அ.தி.மு.க. 51-வது ஆண்டு விழா -நெல்லையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மாலை அணிவிப்பு

    • எம்.ஜி.ஆர். சிலைக்கு நெல்லை புறநகர் மாவட்டசெயலாளர் சிவலிங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    • முத்துக்குமார், சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நெல்லை:

    அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணியின் சார்பில் அ.தி.மு.க. 51-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நெல்லை புறநகர் மாவட்டம், நெல்லை மாநகர் மாவட்ட கழகத்தின் சார்பில் நெல்லை கொக்கிரகுளத்தில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர். உருவ சிலைக்கு நெல்லை புறநகர் மாவட்டசெயலாளர் முன்னாள் அரசு வக்கீல் சிவலிங்கமுத்து தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பொதுமக்களுக்கு இனிப்புகளையும் வெடி வெடித்து மகிழ்ச்சியும் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு மாநில ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் முத்துக்குமார், நெல்லை மாநகர் சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் புறநகர் மாவட்ட அவைத் தலைவர் பரமசிவம், மாவட்டபொருளாளர் இசக்கியப்பன், ஈகில் ஜெயராஜ், கூடங்குளம் சாமுவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் நாங்குநேரி குபேந்திரா மணி, களக்காடு ஒன்றியம் சாமி, சிவந்திபட்டி மாடசாமி, கோபிநாத், ரவி, கீழநத்தம் பரந்தாமன், மானூர் கந்தசாமி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் தமிழ்செல்வி, பாளைதெற்கு ஒன்றியம் வள்ளல் வைகுண்டம், ராதாபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆவுடைபாலன், ஏர்வாடி பீர்முகமது, ராதாபுரம் சாந்தி, ஓடக்கரை ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கணபதி, முத்துக்குமார், தினகரன், கந்தன் , ஞான பொன்ராஜ், மகளிர் அணி பால்கனி, சுப்பையா, அபிராமி, இசக்கிமுத்து, பசீர்மீரான், குன்னத்தூர் ராமகுரு, மீனவன்குளம் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×