search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை
    X

    எம்.ஜி.ஆர். சிலைக்கு மரியாதை செலுத்திய ஓ.பி.எஸ். அணியினர்.

    கோவில்பட்டியில் எம்.ஜி.ஆர். சிலைக்கு ஓ.பி.எஸ். அணியினர் மரியாதை

    • எம்.ஜி.ஆரின் சிலைக்கு ஓ.பி.எஸ். அணி சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
    • அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை மாவட்ட செயலாளர் வினோபாஜி தொடங்கி வைத்தார்.

    கோவில்பட்டி:

    எம்.ஜி.ஆரின் 106-வது பிறந்த நாளை முன்னிட்டு, கோவில்பட்டி புதுரோட்டில் உள்ள அவரது சிலைக்கு ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வினோபாஜி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து மார்க்கெட் அருகே பண்ணைத் தோட்டம் தெருவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார். பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைத்தார்.

    இதில் இளைஞர் அணி இணைச் செயலாளர் கருப்பூர் சீனி, கோவில்பட்டி மேற்கு ஒன்றிய செயலாளர் மகேஷ்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, நகர செயலாளர் வெள்ளத்துரை, மத்திய ஒன்றிய செயலாளர் கண்ணன், கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் சுந்தர்ராஜ், நகர செயலாளர் பிரபாகரன், கடம்பூர் நகர செயலாளர் மருதுபாண்டி, புதூர் ஒன்றிய செயலாளர் ஜெகதீசன், எட்டயபுரம் நகர செயலாளர் முத்து முருகன், பொதுக்குழு உறுப்பினர் வருமூர்த்தி, மாவட்ட இணைச்செயலாளர் ஜெயசீலன், மாவட்ட துணை செயலாளர் நடராஜன், இளைஞர் அணி செயலாளர் தியாகராஜன், நிர்வாகிகள் பாலமுருகன், செந்தில் முருகன், மலை மாரியப்பன், கந்தசாமி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×