search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவகிரியில்  ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனை கூட்டம்
    X

    ஆலோசனை கூட்டத்தில் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

    சிவகிரியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனை கூட்டம்

    • சிவகிரி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
    • ஆலோசனை கூட்டத்திற்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    சிவகிரி:

    சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூர் அருகேயுள்ள நெற்கட்டும்செவல் கிராமத்தில் மாவீரர் பூலித்தேவன் ஜெயந்தி விழாவில் கலந்து கொள்ள அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் முதல்–அமைச்சருமான ஓ.பி.எஸ். வருகைதர இருப்பதால் அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிப்பது குறித்து சிவகிரி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து அ.தி.மு.க. ஓ.பி.எஸ். அணி சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் மூர்த்திப்பாண்டியன், முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிவகிரி நகர செயலாளர் காசிராஜன் செய்திருந்தார்.

    Next Story
    ×