search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ."

    • பூபால சமுத்திரம் கிராமத்தில் புதிய பள்ளி கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார்.
    • புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் மற்றும் நெட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கு ரூ.3 கோடியே 59 லட்சம் நிதி பெற்று தந்த மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு அந்தந்த பள்ளி களின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

    விழாவுக்கு பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, ஓய்வுபெற்ற எஸ்.ஐ. சங்கர், அய்யனார்குளம் பஞ்சாயத்து தலைவர் நீதி ராஜன் ஆகியோர் முன்னி லை வகித்தனர். ஆசிரியர் அப்துல் காதர் வரவேற்றார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. வுக்கு தங்கள் ஊர் பள்ளிக்கு கூடுதலாக 20 வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ.2 கோடியே 2 லட்சம் நிதி பெற்று தந்ததற்கு நெட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் நன்றியும், பாராட்டு தல்களை தெரிவிக்கப் பட்டது.

    விழாவில் மாநில அமைப்பு சாரா ஓட்டுனர் அணிசெயலாளர் சேர்ம துரை உட்பட ஏராளமான வர்கள் கலந்து கொண்டனர். முடிவில் உதவி தலைமை ஆசிரியர் ஜாஸ்மின் ஹெலன் நன்றி கூறினார்.

    முன்னதாக ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி பூலாங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 20 கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் கட்டுவதற்கு ரூ. 1.57 கோடி நிதியை தமிழக அரசிட மிருந்து பெற்று தந்ததற்கு பூலாங்குளம் பள்ளியின் சார்பாகவும் ஊர் பொது மக்கள் சார்பாகவும் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ.வுக்கு நன்றி தெரிவிக் கப்பட்டது. தொடர்ந்து ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றி யம் பெத்தநாடார்பட்டி பஞ்சாயத்து பூபால சமுத்திரம் கிராமத்தில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் பள்ளி கட்டிடம் கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து அதன் புதிய கட்டிடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்தார். தொடர்ந்து ஆலங் குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிய கட்டி டத்திற்கு முன்பாக நுழைவு வாயில் கட்டுவதற்கு ரூ.7 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து அதற்கு அடிக்கல் நாட்டி னார்.

    விழாவில் ஓ.பி.எஸ். அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, அண்ணா தொழிற்சங்க மாநில அமைப்பு செயலா ளர் சேர்மதுரை, கீழப்பாவூர் ஒன்றிய செயலாளர் பாலையா பாண்டியன், ஆலங்குளம் நகர செய லாளர் சுபாஷ் சந்திரபோஸ், ஒன்றிய செயலாளர் செல்லத் துரை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
    • நெல்லையப்பபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்பு செயலாளர் எஸ்.ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து சின்னக்குமார்பட்டி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய சமுதாய நலக்கூடமும், நெல்லையப்பபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவி சாருகலா ரவி தலைமையில் நடை பெற்றது.

    விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • கல்லூத்து ஏ.டி.காலனியில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.
    • பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்த பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., அதனை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஒன்றியம் கழுநீர்குளம் ஊராட்சி கல்லூத்து ஏ.டி.காலனியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நடைபெற்றது.

    விழாவில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் கலந்து கொண்டு திறந்து வைத்தார். மேலும் பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்து நிறைவேற்ற நடவடிக்கை எடுத்தார்.

    நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் வி.கே.கணபதி, எஸ்.ராதா, பஞ்சாயத்து தலைவர் ஆ.செல்லப்பா, துணைத்தலைவர் ஒளிவுலெட்சுமி மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • மந்தியூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது.
    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மந்தியூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் நூருல் ஹமீர், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராகவேந்திரன், ஊர் நாட்டாமைகள் சுந்தர், சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • பாப்பான்குளம் கிராமத்தில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட ரூ. 20 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • கட்டிடம் கட்டும் இடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கடையம்:

    கடையம் யூனியன் பாப்பான்குளம் கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய பல்நோக்கு கட்டிடம் கட்ட மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. நிதி ஒதுக்கி உள்ளார். இதையடுத்து பாப்பான்குளம் கிராமத்தில் பல்நோக்கு கட்டிடம் கட்டும் இடத்தை மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது, அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி மற்றும் கட்சி நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் பலர் உடன் சென்றனர்.

    • ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
    • 3-ந் தேதி சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே மேட்டூர் பரி.திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. கடந்த 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மாலையில் ஆயத்த ஆராதனை நடைபெற்றது. இதில் செங்கோட்டை சேகர தலைவர் கலந்து கொண்டு செய்தி அளித்தார். பின்னர் ஞாயிறு பாடசாலை மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. 3-ந் தேதி (சனிக்கிழமை) காலையில் சேகர அளவிலான பெண்கள் பண்டிகை நடைபெற்றது. இதில் அருள் சோபா குழுவினர் கலந்து கொண்டு பண்டிகையை நடத்தினர். இதையடுத்து நேற்று காலையில் நடை பெற்ற பண்டிகை ஆராதனையில் இந்திய மிஷனெரி சங்க தேசிய பணித்தள ஒருங்கிணைப்பாளர் குரு இம்மானுவேல் பால் செய்தி அளித்தார். தொடர்ந்து ஐக்கிய விருந்து நடை பெற்றது. பண்டிகை ஆரா தனையில் சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, குரு வானவர்கள் சில்வா ன்ஸ், ராபர்ட் ,ஜெயமணி மேட்டூர் சேகர குரு ஜோயல் ஷாம் மெர்வின்,ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டிமுடிக்கப்பட்டது.
    • புதிய கடையை பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

    ஆலங்குளம்:

    ஆலங்குளம் யூனியன் காவலாகுறிச்சி பஞ்சாயத்து காவலாகுறிச்சியில் பொது மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்பில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டி அதன் திறப்பு விழா நேற்று மாலை நடைபெற்றது.

    பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்புச் செயலாளர் சௌ.ராதா, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மத்துரை, ஒன்றிய செயலாளர் அருண் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×