search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம்- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்
    X

    கீழப்பாவூரில் ரூ.12 லட்சத்தில் புதிய அங்கன்வாடி கட்டிடம்- மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்

    • அங்கன்வாடி கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.
    • நெல்லையப்பபுரம் பகுதியில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது.

    தென்காசி:

    கீழப்பாவூர் தேர்வு நிலை பேரூராட்சியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.12 லட்சம் மதிப்பில் புதிய அங்கன்வாடி கட்டிடம் கட்டப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பி.எச்.மனோஜ் பாண்டியன் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் ஓ.பி.எஸ். அணி மாவட்ட செயலாளர் வி.கே.கணபதி, அமைப்பு செயலாளர் எஸ்.ராதா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம் யூனியன் வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து சின்னக்குமார்பட்டி கிராமத்தில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் பொது நிதியின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பிலான புதிய சமுதாய நலக்கூடமும், நெல்லையப்பபுரம் பகுதியில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய ரேஷன் கடை கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் தொடங்க உள்ளது. அதற்கான அடிக்கல் நாட்டு விழா வெங்கடாம்பட்டி பஞ்சாயத்து தலைவி சாருகலா ரவி தலைமையில் நடை பெற்றது.

    விழாவில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×