search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நயினார்குளம்"

    • நயினார்குளத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.
    • நயினார்குளம் சாலை பகுதியில் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    நெல்லை:

    நெல்லை டவுன் தொன்டர் சன்னதி கோவிலில் இருந்து ஆர்ச் பகுதியை இணைக்கும் சாலையில் நயினார்குளம் உள்ளது. டவுன் பகுதியில் முக்கிய நிலத்தடி நீர் ஆதாரமாக விளங்கும் இந்த குளத்தின் மூலமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    தச்சநல்லூர் மண்ட லத்திற்குட்பட்ட நயினார்கு ளமானது 2007-ம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. ஆனால் முறையான பராமாரிப்பு இல்லாததால் டவுன் நயினார்குளம், குப்பைகளின் கூடாரமாகவே இருந்தது. இதனால் கடந்த 2020-ம் ஆண்டு ரூ.14.68 கோடி செலவில் நயினார்குளம் கரைப்பகுதிகளை, மேம்படுத்தி கண்கவரும் அழகிய நடைபாதை அமைக்கும் பணிகள் மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.

    அதன்பின்னர் பணிகள் தொடங்கி தற்போது குளக்கரை பகுதியில் பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி கம்பி வேலிகளும், எதிர்புறம் தடுப்பு சுவர் அமைத்தும், நடுவில் அழகிய நடைபாதைகளும் அமைக்கப்பட்டு வருகிறது. மார்க்கெட் சாலையில் ஓரளவு பணிகள் முடிந்த நிலையில், நயினார்குளம் சாலை பகுதியில் பணிகள் மந்தமாகவே நடைபெற்று வருகிறது.

    இந்த நடைபாதையின் நடுவில் குடிநீர் வசதி, உணவு அறை, கழிப்பிட வசதி, பாதுகாப்பு அறை மற்றும் குழந்தைகளுக்கான கேளிக்கை வசதிகளும் ஏற்படுத்தப்பட உள்ளது. முறையான பராமரிப்பின்மையால் 12 அடி வரை ஆழம் இருந்த இந்த குளம் தூர்வாராததால் 4 அடிக்கும் குறைவான ஆழம் கொண்ட குட்டையாக மாறிவிட்டதாக அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர்.

    இதன் காரணமாகவே நயினார்குளத்தில் படகு குழாம் அமைக்க முடியாத நிலை உள்ளது. தற்போது இருக்கும் குறைந்த அளவு தண்ணீரையும் அமலைச்செடிகள் ஆக்கிரமித்து உள்ளன. பாபநாசம் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் சுத்தமல்லி அணைக்கட்டு சென்றடைந்து, அங்கிருந்து கால்வாய் மூலம் நயினார் குளத்திற்கு தண்ணீர் வரும். ஆனால் தூர்வாரப்படாததால் தேவையான அளவு தண்ணீரை சேமிக்கும் திறனை குளம் இழந்துள்ளது. இதனால் இந்த குளத்தில் மூலம் பாசனம் பெறும் விவசாய நிலங்களும் வெகுவாக குறைந்துள்ளன.

    குளத்தின் அருகே உள்ள அரசு மதுபானக்கடையில் மது வாங்கும் பலரும் நயினார் குளத்தை பார் ஆக மாற்றி வருகின்றனர். அங்கு வைத்து குடித்துவிட்டு மதுபாட்டில்களை குளத்திற்குள் வீசிவதோடு, சாலைகளிலும் போதையில் தடுமாறி வருகின்றனர். சில நேரங்களில் போதையில் நயினார்குளம் சாலையில் சிலர் படுத்துவிடு கின்றனர் என்றும் அப்பகுதியினர் புகார் கூறுகின்றனர். எனவே நயினார் குளம் சாலையில் குடிமகன்கள் மது அருந்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குளத்தை முறையாக பராமரித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


    நயினார்குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்.

    நயினார்குளத்தில் அமலைச்செடிகள் ஆக்கிரமித்துள்ளதை படத்தில் காணலாம்.


     


    ×