search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கவுன்சிலர்"

    • மினி விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று திருப்புல்லாணி கவுன்சிலர் கோரிக்கை விடுத்தார்.
    • மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

    கீழக்கரை

    ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி யூனியன் 7-வது வார்டு கவுன்சிலர் பெரியபட்டினம் பைரோஸ்கான். இவர் ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளராக உள்ளார். இந்த வார்டில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து அவர் கூறியதாவது:-

    திருப்புல்லாணி யூனியன் 7-வது வார்டில் அதிக மக்கள் வசிக்க கூடிய பெரிய பட்டினம், குருத்த மண்குண்டு, தெற்கு புதுக்குடியிருப்பு, பிலால் நகர் உள்ளிட்ட பகுதிகள் ஆகும். மாவட்ட தி.மு.க. செயலாளரும்,

    எம்.எல்.ஏ.வுமான காதர்பாட்சா முத்துராமலிங்கம், மாவட்ட நிர்வாகம் மற்றும் யூனியன் நிர்வாகத்தினர் ஒத்துழைப்புடன் பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் அக்பர்ஜான் பீவியுடன் இணைந்து இந்த பகுதியில் பல வளர்ச்சி திட்டப்பணிகளை நிறைவேற்றி உள்ளேன்.

    யூனியன் கவுன்சிலர் பொதுநிதியில் இருந்து பெரியபட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட ஹமீதியா நகர் பகுதிக்கு புதிய பாதையில் பைப்லைன் விரிவாக்கம் செய்து குடிநீர் குழாய் இணைப்பு வழங்கப் பட்டுள்ளது. பெரியபட்டினம் பஸ் நிலையத்தில் கழிவறை கட்டப்பட்டுள்ளது. ஆலிம் நகர், அம்மன் கோவில் கிழக்கு பகுதி, வடக்குத்தெரு சிறுசிலவு கோவில் பகுதி, தெற்கு புதுக்குடியிருப்பு கிழக்கு பகுதி, ஜலால் ஜமால் ஜும்ஆ பள்ளி மையவாடி, பிலால் நகர் ஆகிய பகுகளில் பேவர் பிளாக் சாலை அமைக்கப் பட்டுள்ளது.

    நடுத்தெரு மற்றும் ஜலாலியா நகர் பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை பூமிக்குள் செலுத்தும் விதமாக உறிஞ்சு குழி அமைக்கப் பட்டுள்ளது. தாமரை குண்டு ஊரணியில் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மற்றும் தெற்கு புதுகுடியிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டிடங்களுக்கு வர்ணம் அடிக்கும் வேலை நடை பெற்று வருகிறது.

    எனது தொடர் கோரிக்கையை ஏற்று தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பல பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி கப்பலாறு, மொர வாய்க்கால் பகுதிகளில் தடுப்பணை கட்டப்பட்டு ளது. அரசு மேல்நிலைப் பள்ளிக்கு சுற்று சுவர் கட்டப்பட்டுள்ளது.

    மாவட்ட கலெக்டரிடம் வலியுறுத்தியதை தொடர்ந்து கலெக்டர் பரிந்துரை யின்பேரில் 70 ஆண்டுகளாக சாலை வசதி இல்லாமல் இருந்த குருத்த மண்குண்டு கிராமத்திற்கு இடம் தேர்வு செய்து புதிய தார்சாலை அமைக்க அரசு அனுமதி அளித்து தற்போது சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    மங்கம்மாபுரம் சாலையில் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. கிழக்குத்தெருவில் புதிய கிராவல் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    பஸ் நிலையம் அருகே இருந்த அங்கன்வாடி இடமாற்றம் செய்யப்பட்டு அரசு மேல்நிலைப்பள்ளி அருகே புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது.பெரிய பட்டினம் பஸ் நிலையத்தில் இருந்து களிமண்குண்டு வழியாக குத்துக்கல்வலசை வரை உள்ள சாலையை பிரதமர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தில் இணைத்து சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவிகள் அதிகமாக இருப்பதால் 15-வது மானிய நிதியில் புதிய கழிவறை கட்டப்பட உள்ளது. எனது வேண்டுகோளினை ஏற்று கீழ்க்கண்ட பணிகளை நிறைவேற்றித்தர காதர்பாட்சா முத்துராம லிங்கம் எம்.எல்.ஏ. அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். அதன் அடிப்படையில் பெரியபட்டினம் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளியில் இருந்து முத்துப் பேட்டை கடற்கரை வரை தார்சாலை அமைக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    சேகு ஜலாலுதீன் அம்பலம் நினைவு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2 வகுப்பறைகள் கொண்ட 2 கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. காயிதேமில்லத் நகர் கிழக்கு மற்றும் மேற்கு, ஆலிம் நகர், பிலால் நகர் பகுதி மற்றும் கரிச்சான்குண்டு பகுதிகளை உள்ளடக்கிய காயிதே மில்லத் நகர் பகுதியில் புதிய பகுதி நேர ரேசன் கடை அமைக்கப் பட்டுள்ளது.

    காயிதே மில்லத் நகர் பகுதிக்கு புதிய டிரான்ஸ் பார்மர் அமைக்கப்பட்டுள்ளது. பிலால் நகர், தெற்குதெரு பகுதிகளில் குறைந்தழுத்த மின்சார் கிடைப்பதால் புதிய டிரான்ஸ்பார்மர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பெரியபட்டினம் ஊராட்சி பகுதியில் மினி விளையாட்டு அரங்கம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., விளையாட்டு மேம்பாட்டுதுறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தங்கையா நகர் பகுதியில் அமைந்துள்ள மோசமான அங்கன்வாடி மையத்தை அகற்றி புதிய அங்கன்வாடி மையம் கட்டிடம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பப்பட்டு வருகிறது. இவை தவிர எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து பெரியபட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கலையரங்கம் கட்டி முடிக்கப் பட்டுள்ளது.

    தெற்கு புதுக்குடியிருப்பு பகுதியில் புதிய ரேசன்கடை கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. நவாஸ்கனி எம்.பி.நிதியில் ஜலால் ஜமால் ஜூம்மா பள்ளி அருகில் ஹைமாஸ் விளக்கு, பஸ் நிலையத்தில் புதிய நிழற்குடை ஆகியவை அமைக்கப்பட உள்ளது. எம்.எல்.ஏ. பரிந்து ரையின்பேரில் பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் புதிய வெளி நோயாளிகள் பிரிவு கட்டிடம் கட்டப்பட உள்ளது.

    மாவட்ட கவுன்சிலர் ஆதித்தன் நிதியில் பொது மயானத்திற்கு பகுதி அளவு சுற்றுசுவர் கட்டப்பட்டது. பெரியபட்டினம் ஊராட்சியில் 77 ஏக்கர் பரப்பளவில் உள்ள கப்பலாறு பகுதி மற்றும் 2,200 மீட்டர் தூரமுள்ள மொரவாய்கால் ஒடை ஆகிய 2 நீர்பிடிப்பு பகுதிகளையும் தூர்வாரி மழைநீரை சேமித்து இப்பகுதி நிலத்தடி நீரை உயர்த்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பெரியபட்டினம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 24 மணி நேரமும் பணியில் இருக்கும் வகையில் கூடுத லாக டாக்டர் நியமிக்க வேண்டும்.

    பெரியபட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொதுதேர்வு மையம் அமைக்க வேண்டும், குருத்தமண்குண்டு மற்றும் தெற்கு புதுகுடியிருப்பு பகுதி பொது மயானத்திற்கு மழை காலங்களில் இடுப்பளவு தண்ணீருக்குள் செல்ல வேண்டியதாக இருப்பதால் அங்கு பாலத்துடன் கூடிய கிராவல் சாலை அமைத்து தரவேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • அனைவரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் தம்பதியரின் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரி யேந்தல் டி. கண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த திருமண விழா சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது. திருமண விழாவை தி.மு.க. மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும்-அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வெங்க டேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான மு.பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்கின்ற னர்.ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, சோழவந் தான் ஒன்றிய கவுன்சிலர் பேரூர் செயலாளர் எஸ்.என். சத்யபிரகாஷ் ஆகியோர் நன்றி கூறுகின்றனர். இதில் உற்றார்-உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
    • மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவும் கவுன்சிலருமான கண்ணப்பன் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட44 வது வார்டு பகுதியில் குருநாதர்வீதி , அர்த்தனாரிவீதி , செளண்டம்மன் கோவில் வீதி , கோவிந்தர்வீதி , எம்.என்.ஆர். லைன் , சின்னத்தோட்டம் ,செல்லப்பபுரம் , குப்புசாமிபுரம் , எல்.ஐ.சி.ரோடு ,காமாட்சி அம்மன் கோவில்வீதி பகுதிகளில் இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.

    ஆகவே , மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்துவதோடு தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ள வேண்டும். 44-வது வார்டு பகுதி மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.மேலும் காணாமல் போன இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 

    • பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமையில் நடந்தது.
    • அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.

    பண்ருட்டி ஊராட்சி ஒன்றியகுழு கூட்டம் சேர்மன் சபா.பாலமுருகன் தலைமை யில் நடந்தது.துணை சேர்மன் தேவகி ஆடல் அரசன், வட்டார வளர்ச்சி அலுவலர் மீரா கோமதி, மேலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத் தீர்மானங்கண அலுவலக உதவியாளர் ராமநாதன் வாசித்தார்.

    கூட்டத்தில் கவுன்சிலர்களி டையே நடந்த விவாதம் வருமாறு:-

    அருள்முருகன் (தி.மு.க): நடுக்குப்பம் பகுதியில் தமிழக முதல்வரின் அறிவுரைப்படி இளைஞர்களின் நலன் கருதி விளையாட்டு மைதானம் அமைக்கப்பட வேண்டும்.

    ராமகிருஷ்ணன் (த.வா.க.): வேகா கொல்லை ஊராட்சி குள்ளஞ்சாவடி சாலை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும். பொதுமக்களோடு இணைந்து அந்த டாஸ்மாக்கை அடித்து நொறுக்குவேன். காட்டுவேகாக்கொல்லை - வேகாக்கொல்லை செல்லும் சாலை, சிவன் கோவில் செல்லும் தார் சாலை அமைத்து தரவேண்டும். ஓடையில் உள்ள ஆக்கிரமிப்பு களை அகற்ற வேண்டும்.

    விஜயதேவி தேவராசு (த.வா.க): அங்குசெட்டி பாளையம் - சிறுவத்தூர் செல்லும் பகுதியில் மாணவர்களின் நலன் கருதி மின்விளக்கு அமைத்துக் கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    சேர்மன் சபா.பாலமுரு கன்: ஒன்றிய கவுன்சிலர்களின் அனைத்து குறைகளும் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்திலேயே நம்பர் 1 ஊராட்சி ஒன்றியமாக மாற அனைத்து துறை அலுவலர்கள், தலைவர்கள், கவுன்சிலர்கள் ஒத்துழைக்க வேண்டும் என பேசினார். 

    • குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை.
    • குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும்.

    அவினாசி :

    அவினாசி பேரூராட்சி மன்ற கூட்டம் தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி தலைமையில் நடந்தது.துணைத்தலைவர் மோகன், செயல் அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வார்டு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் மன்ற பொருள்படிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து வார்டு உறுப்பினர்கள் விவாதத்தில் ஈடுபட்டனர்.

    கோபாலகிருஷ்ணன் (16-வது வார்டு):- கடந்த ஒரு ஆண்டாக சந்தை வசூல் யார் செய்கிறார்கள். இதுவரை எவ்வளவு தொகை உள்ளது. அவினாசி நகரில் புது பஸ் நிலையம் முதல் செங்காடு திடல் வரை ரோட்டோர கடைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. மேலும் கடந்த 3 மாதத்தில் 25 விபத்துகள் ஏற்பட்டு 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் கை கால்கள் ஊனமடைகின்றனர். இதற்கு பேரூராட்சி நிர்வாகத்துடன் வருவாய்துறை, காவல்துறை, நெடுஞ்சாலைதுறை ஆகியவை இணைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    தலைவர்:- ரோட்டோர கடைக்காரர்களிடம் சொன்னால் எங்களுக்கு வாழ்வாதாரம் பாதிக்கிறது.நாங்கள் இதை வைத்துதான் ஜீவனம் செய்கிறோம் என்கின்றனர்.

    திருமுருகநாதன்(11-வது வார்டு):- காமராஜ் வீதியில் குடிநீர் பிரச்சனையை சரிசெய்ய 6 மாதமாக கோரிக்கை வைத்தும் நடவடிக்கை இல்லை. கடந்த 2 வாரத்திற்குள் மட்டும்அவினாசியில் 20 ரோட்டோர கடைகள் அதிகரித்துள்ளது. ரோட்டோர கடைகளால் போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. ரோட்டோர ஆக்ரமிப்பு கடைகள்குறித்து ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எனவே இதை ஒழுங்குபடுத்த வேண்டும். துப்புரவு பணியாளர்கள் குப்பை எடுக்கும் நேரம் என்ன ? வார்டு முழுவதும் சுத்தம் செய்வதில்லை. குப்பை எடுப்பவர்களை அந்த பணியைவிட்டு வேறு வேலைக்கு அனுப்புவதை தவிர்க்க வேண்டும் என்றார்.

    கருணாம்பாள்( 8-வது வார்டு):- வள்ளுவர் வீதியில் குடியிருப்புகள் நிறைந்த பகுதியில் குடிமகன்களால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுகிறது. எனவே அங்கு மது அருந்தாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    ஸ்ரீதேவி( 18 -வது வார்டு):- அவினாசி சந்தைபேட்டை பகுதியில் குடியிருப்புகள் நிறைந்துள்ளது. இங்கு மத்தியில் உள்ள குப்பை கிடங்கில் இருந்து துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே அதற்கு உரிய நடவடி க்கை எடுக்க வேண்டும். அவினாசிலிங்கம்பாளையம் செல்லும் ரோட்டில் 2, 3, 4, 5- வது வீதிகளில் சாக்கடை கால்வாய் மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் சாக்கடை நீர் குட்டை போல் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே அங்கு சாக்கடை கால்வாயை சீரமைக்க வேண்டும் என்றார்

    தலைவர் தனலட்சுமி பொன்னுசாமி:- நான் பேரூராட்சி தலைவராகிய நாள் முதல் தூய்மை இந்தியா திட்டம் 2.0,கலைஞர் நகர் புற சாலைகள் மேம்படுத்த திட்டம், நமக்கு நாமே திட்டம், இலங்கை தமிழர் வாழ்க்கை தர மேம்பாட்டு நிதி, நபார்டு மூலதன மானிய திட்டம், நாடாளுமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி,சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதி ,மாநில கட்டமைப்புவளர்ச்சி நிதி, சிறுகனிம வருவாய் மானியம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், தேசியநகர்ப்புற வாழ்வாதார திட்டம் மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் கட்டமைப்பு திட்டம் ஆகிய திட்டங்களின் வாயிலாக 13 கோடியே 23 லட்சத்திற்கும், பேரூராட்சி பகுதியில் ஒரு கோடியே 45 லட்சத்திற்கும் என மொத்தம் 14 கோடியே 68 லட்சத்தில் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் பேரூராட்சியின் 13.3.2023பொது நிதி இருப்பு விவரம் 3 கோடியே 54 லட்சத்து 18 ஆயிரத்து 342 ரூபாயாக இருந்ததை தற்போது நாளது தேதியில் 48 லட்சத்து 61 ஆயிரத்து 509 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. பேரூராட்சியில் தேவையற்ற செலவுகளை குறைத்து பேரூராட்சி நிதி நிலையை பெருக்கியுள்ளோம். பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்தும் பட்டியலில் தமிழகத்திலேயே அவினாசி பேரூராட்சி முதல் இடத்தில் உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவிக்கிறேன் என்றார்.

    • 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகராட்சி தொடங்கப்பட்டு சுமார் 106 ஆண்டுகள் கடந்து நகராட்சி நிர்வாகம் சார்பில் சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் தாராபுரம் நகராட்சி பகுதியில் தற்போதைய மக்கள் தொகை சுமார் 1½ லட்சத்தை கடந்துள்ளது. இதனால் தாராபுரம் நகராட்சி பகுதியில் உள்கட்டமைப்பு வசதிகள், சாலை வசதிகள், குடிநீர் வசதிகள் உள்ளிட்ட வசதிகள் அமைய போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாமல் திணறி வருகிறது. இந்த நிலையில் தாராபுரம் நகராட்சியை தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தக்கோரி நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை வைத்து இருந்தனர்.

    அதனை ஏற்று நேற்று சட்டசபை மானிய கோரிக்கையின் போது தாராபுரம் நகராட்சி தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு,செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி 4-வது மண்டலக்குழு தலைவரும், தி.மு.க.திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளருமான இல.பத்மநாபன் ஆகியோருக்கு தாராபுரம் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன், நகர செயலாளர் டி.எஸ்.முருகானந்தம், நகராட்சி கவுன்சிலர்கள், தாராபுரம் பகுதி பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    • இளைய தலைமுறையினர் பால் கறப்பதையே விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.
    • சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளுக்கும் புளியந்தோப்பில் ஒரே ஒரு இறைச்சி வெட்டும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது இது போதுமானது அல்ல.

    திருவொற்றியூர்:

    சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் பட்ஜெட் அறிக்கை மீது அ.தி.மு.க. மாமன்ற குழு செயலாளர் டாக்டர் கே. கார்த்திக் பேசியதாவது:-

    இந்த பட்ஜெட்டில் மாமன்ற உறுப்பினர் நிதியை 30 லட்சத்திலிருந்து 40 லட்சமாக உயர்த்தி உள்ளீர்கள் பாராட்டுக்கள். ஆனால் இந்த 40 லட்சத்தையும் நாங்கள் முழுவதாக செலவு செய்ய முடிவதில்லை.

    ஏனென்றால் இதில் ஜிஎஸ்டி 7 லட்சம் போய் விடுகிறது மேலும் டெண்டர் விட்டு நாம் பணிகளை ஒதுக்குவதால் அதிலும் குறைந்து விடுகிறது. அதனால் அந்த ஜிஎஸ்டி தொகைக்கு ஈடாக தொகையை அதிகப்படுத்தி தர வேண்டும். அப்படி கொடுத்தால் நாங்கள் முழுமையாக 40 லட்சத்தையும் பயன்படுத்த முடியும். சுகாதாரத்தை பேணும் வகையில் பல்வேறு நட வடிக்கைகள் எடுத்து உள்ளீர்கள். தெருவில் திரியும் நாய் மற்றும் மாடுகள் பிடிக்க கூடுதலாக வாகனங்களை வாங்க அனுமதி கொடுத்துள்ளீர்கள்.

    நாம் சீர்மிகு சிங்காரச் சென்னை என கூறிக் கொள்கிறோம். அதனால் முக்கிய சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருப்பதை பிடிப்பதை குறை சொல்ல முடியாது அதை செய்ய வேண்டியது தான். ஆனால் நாங்கள் விரிவாக்கப்பட்ட பகுதியிலிருந்து வந்துள்ளோம்.

    திருவொற்றியூர் பகுதியில் மாட்டு மந்தை என்ற ஒரு பகுதியே இருக்கிறது. அவர்கள் மாடுகளை வளர்க்கிறார்கள். உட்புற தெருவில் வளர்க்கிறார்கள். நீங்கள் இப்போது அங்கேயும் மாட்டை பிடித்தால் அவர்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படும். இளைய தலைமுறையினர் பால் கறப்பதையே விட்டு விட்டு வேறு தொழிலுக்கு சென்றுவிட்டனர்.

    ஆனால் இப்போது இருக்கும் மூத்தவர்கள் பால் கறந்து விற்பனை செய்கிறார்கள். இது அவர்களுக்கு ஒரு வாழ்வாதாரமாக உள்ளது. சென்னை மக்களுக்கும் நல்ல பால் கிடைக்கிறது. இதை நாம் தடுக்கும் வகையில் ஏதும் செய்யக்கூடாது. அவர்களுக்கு தொழில் செய்ய ஏதுவாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் அல்லது அவர்களுக்கு மாற்று இடம் ஏதாவது வழங்க முடியுமா என பார்க்க வேண்டும்.

    சென்னை மாநகரில் உள்ள 200 வார்டுகளுக்கும் புளியந்தோப்பில் ஒரே ஒரு இறைச்சி வெட்டும் கூடம் அமைக்கப்பட்டுள்ளது இது போதுமானது அல்ல. நாம் சுகாதாரத்தை பாதுகாக்க அனைத்து பகுதிகளிலும் இறைச்சி கூடம் அமைத்து தர வேண்டும் அப்போது தான் சுத்தமான சுகாதாரமான இறைச்சிகள் பொது மக்களுக்கு கிடைக்கும். இதை நீங்கள் பரிசீலனை செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • தி.மு.க. மீனவர் அணி செயலாளர் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு
    • ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகராட்சியில் வீட்டு வரி பாக்கி வைத்தி ருப்பவர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்த நக ராட்சியின் நடவடிக்கையை கண்டித்து கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இதில் நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், ரகீம், சஜிலா, சந்திர வயோலா, பனிக் குருசு, மேரி, ஷீலா ஜெயந்தி, ரமேஷ், ஜாண் பிரிட்டோ, சுஜித்திரா, தனலட்சுமி, வினேஷ், லாரன்ஸ், திலகா ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட கவுன்சிலர்களுடன் ஆணை யர் விஜயகுமார் மாலை பேச்சு வார்த்தை நடத்த முயற்சித்தார். ஆனால் கவுன்சிலர்கள் அதை ஏற்க வில்லை.

    தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் தி.மு.க. தலைமை ஏற்பாட்டின் படி மாநில தி.மு.க. மீனவர் அணி செய லாளர் ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். காலையில் (நேற்று) ஆணை யாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதை யடுத்து நேற்று மதியம் ஆணையர் விஜயகுமார் மற்றும் மேற்கூறிய கவுன்சி லர்களுடன் தி.மு.க. மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் நகராட்சி வரி பாக்கி வைத்திருப்பவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பெயர் பட்டியலை வார்டு கவுன்சிலர்களிடம் அளித்து வசூல் செய்வது எனவும், ஒத்துழைப்பு அளிக்கா தவர்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பது எனவும், அரசின் மக்கள் நலத்திட்டங்களை அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்ச மின்றி செய்வது எனவும், நடை பாதையோரம் கடை களில் கட்டண வசூல் செய்யக்கூடாது எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொண்டு வரும் சிறப்பு திட்டங்களுக்கு மேற்கூறிய கவுன்சிலர்கள் ஆதரவு அளிப்பது எனவும், நக ராட்சி புதிய கடைகள் குத்தகை வாடகைக்கு விடும்போது நகர்மன்றத்தில் தெரியப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து குளச்சல் நகராட்சி கவுன்சிலர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    • நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது.
    • நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் நகராட்சி மன்ற கூட்டம் நகர மன்ற தலைவர் குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் முஸ்தபா. துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முதலில் தீர்மானங்கள் வாசிக்க தொடங்கும் முன்பு வார்டு குறைகளை உறுப்பினர்கள் எடுத்து கூறினர்.

    அப்போது 23-வது வார்டு தி.மு.க உறுப்பினர் வேதாச்சலம் ஒரு மஞ்சள் பையுடன் ஆணையாளர் மற்றும் தலைவர் முன்பாக வந்தார். என்னுடைய வார்டுக்கு இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை, பதிலாக நிதி இல்லை என்று கூறுகின்றீர்கள். இதனால் நகராட்சி நிதி நிலைமையை சரி செய்ய பொதுமக்களிடம் வீடு வீடாக சென்று நிதி திரட்டி வந்துள்ளேன் பெற்று கொள்ளுங்கள் என்று கூறி கடும் வாக்குவாதம் செய்தார்.

    அதனை தொடர்ந்து இதே கருத்தை வலியுறுத்தி 24-வது வார்டு தி.மு.க உறுப்பினர் மைசூர் மற்றும் 22-வது வார்டு வி.சி.க உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் அவை முன்னால் வந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    அதனை தொடர்ந்து பேசிய கவுன்சிலர் வேதாச்சலம் 13-வது வார்டு பகுதியில் உள்ள குட்டையை பராமரிப்பு பணியை மேற்கொள்ள அரசு ரூ.18 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. குட்டையை அப்பகுதியை சேர்ந்த சிலர் ஆக்கிரமிப்பு செய்து கொண்டதால் குட்டையை வருவாய் துறை மூலம் அளவீடு செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றிய பிறகு பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவேண்டும். தவறும் பட்சத்தில் பொதுமக்களை திரட்டி மீட்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

    அடுத்து பேசிய 12-வது வார்டு தி.மு.க உறுப்பினர் அனுராதா சீனிவாசன் கீழ் சின்னாகவுண்டம்பட்டியில் உள்ள மயான நிலத்தை நகராட்சி தேவைக்கு பயன்படுத்திகொள்ள முடிவு செய்து உள்ளதை நான் பொதுமக்கள் சார்பாக ஆட்சேபனை தெரிவிக்கிறேன் என்று கூறி ஆணையாளரிடம் மனு வழங்கினார். அதனை தொடர்ந்து கூட்டத்தில் 60 தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.

    • சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர்.
    • ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார்.

    பெரியகுளம்:

    தேனி மாவட்டம் பெரியகுளம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. தலைவராக தி.மு.க.வை சேர்ந்த சுமிதாசிவக்குமார் உள்ளார். இங்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டதால் நகராட்சிக்கு குடிநீர் வினியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

    இதனையடுத்து லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. எப்போதும் வறட்சியே ஏற்படாத பெரியகுளம் நகரில் வேண்டுமென்றே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதற்கு ஆணையாளரின் செயல்பாடே காரணம் என கவுன்சிலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.

    இந்நிலையில் இன்று நகராட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் 28 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கூட்டம் தொடங்கியதும் தி.மு.க, அ.தி.மு.க, பா.ம.க என அனைத்து உறுப்பினர்களும் சோத்துப்பாறை அணை நீர் பிரச்சினையில் ஆணையாளர் மெத்தனமாக செயல்பட்டது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆனால் ஆணையாளர் இதற்கு பதில் அளிக்கவில்லை. இதனால் கவுன்சிலர்கள் கோசமிட்டபடி இருந்தனர்.

    ஒருகட்டத்தில் மன்றத்தை விட்டு ஆணையாளர் வெளியேற முயன்றார். அவரை வெளியேற விடாமல் கவுன்சிலர்கள் முற்றுகையிட்டு கோசம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆணையாளருடன் சுகாதார ஆய்வாளர், மேலாளர் ஆகியோரும் மன்றத்தில் இருந்து வெளியேறினர். இந்நிலையில் ஆணையாளர் உரிய விளக்கம் அளிக்கும் வரை உறுப்பினர்கள் யாரும் வெளியே செல்ல மாட்டோம் என நகராட்சி அரங்கிலேயே அமர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து தலைவர் சுமிதா ஆணையாளருடன் பேசி மன்றத்திற்கு வந்து விளக்கம் அளித்து செல்லுமாறு கூறினார். ஆனால் அவர் தொடர்ந்து வராததால் உறுப்பினர்கள் நகராட்சி அலுவலகத்திலேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.

    • போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சியின் மிகப்பெரிய வார்டாக 42 வது வார்டு உள்ளது. தொழிலாளர்கள் அதிகம் நிறைந்த இந்த பகுதியில் திருட்டு மற்றும் சமூக விரோத செயல்களை தடுக்கும் வகையில் கவுன்சிலர் அன்பகம் திருப்பதி ஏற்பாட்டின் பேரில் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக கே.வி.ஆர்.நகர் பகுதியில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    அதன்படி முதல் கட்டமாக கேவிஆர் நகர் பகுதியில் .வி.ஆர் நகர் மைதானம், அன்னமார் கோவில், கேவிஆர் நகர் விரிவு உள்ளிட்ட பகுதிகளில் மூன்றாவது கண் எனப்படும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டது.

    இதனை மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவரும் 42வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி தொடங்கி வைத்தார். மேலும் அவர் கூறுகையில் 42 வது வார்டு முழுவதும் இது போன்ற சிசிடிவி கேமராக்கள் பொருத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    • சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
    • 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 24 வது வாா்டு மாமன்ற உறுப்பினருமான ஆா்.நாகராஜ், மேயா் என்.தினேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி 24 ஆவது வாா்டுக்குள்பட்ட சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

    இது தொடா்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 4 வது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும்போது இந்தப் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், தற்போது வரையில் எந்தவி தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சிவசக்தி நகரில் 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். அதேபோல நாகாத்தம்மன் கோயில் வீதி, சத்யா நகா் பகுதியில் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனதில் அவர் கூறியுள்ளார்.

    ×