search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாபஸ்"

    • பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

    சென்னை:

    பழைய ஓய்வு ஊதியம் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் வருகிற 26-ந்தேதி முதல் காலவரையற்ற போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்து இருந்தனர்.

    இதுதொடர்பாக பேச்சுவார்த்தை அமைச்சர் எ.வ.வேலு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் 26-ந்தேதி முதல் திட்டமிட்டபடி காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அடையாள வேலைநிறுத்தம் நாளை (பிப்.15) நடைபெறும் என்றும் ஜாக்டோ ஜியோ அறிவித்து இருந்தது.

    இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை நடத்த இருந்த ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கருணாகரன் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
    • நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வாக்கூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்தவர் ஆசிரியர் கருணாகரன் (வயது 32). இவர் பள்ளி மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக கடந்த 28-ந் தேதி போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். இதையடுத்து பள்ளி முன்பு திரண்ட பெற்றோர்கள், மாணவர்கள் சக ஆசிரியர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பொய்யான புகார் தெரிவித்துள்ளனர். இதனால் கைது செய்யப்பட்ட ஆசிரியரை விடுவிக்க கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட கல்வி அலுவலர் கவுசர், போலீஸ் இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன் ஆகியோர் உறுதியளித்தனர். தொடர்ந்து பள்ளியில் பயிலும் மாணவர்கள், அவர்களின் பெற்றோர் மாவட்ட கலெக்டரை சந்தித்து ஆசிரியரை விடுவிக்க கோரி மனு கொடுக்க விழுப்புரம் சென்றனர். அங்கிருந்த மாவட்ட வருவாய் அலுவலர் மனுவை பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுப்பதாக கூறி அனுப்பிவிட்டார். மேலும், ஆசிரியரை விடுவிக்கும் வரை எங்கள் பிள்ளைகளை பள்ளி க்கு அனுப்பமாட்டோமென பெற்றோர்கள் கூறிவிட்டு அங்கிருந்து வந்தனர்.

    இது தொடர்பாக வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் நேற்று முன்தினம் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியைகள், ஆசிரியர், பள்ளி மாணவிகளிடம் தனித்தனியே ரகசிய விசாரணை நடத்தினார். இது குறித்து தகவலறிந்த பொதுமக்கள் பள்ளி முன்பு திரண்டனர். தவறான புகார் கொடுத்த பள்ளி ஆசிரியைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வெளியே கூடியிருந்த பொதுமக்கள் கோஷமிட்டனர். இந்த சம்பவம் குறித்து முன்கூட்டியே கல்வி துறைக்கு ஏன் தகவல் தெரிவிக்கபடவில்லை என முறையான விளக்கம் கேட்டு தலைமை ஆசிரியர் புஷ்பராணி மற்றும் வட்டார கல்வி அலுவலர் ஜெய்சங்கர் ஆகியோருக்கு மாவட்ட கல்வி அலுவலர் விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருந்தார். பள்ளிக்கு செல்லாமல் புறக்கணித்த நிலையில் நேற்றும் தொடர்ந்து 3-வது நாளாக மாணவர்கள் வகுப்பிற்கு செல்லாமல் புறக்கணித்தனர். இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட 13 குழந்தைகளின் பெற்றோர் மற்றும் கிராம முக்கிய பிரமுகர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டை சந்தித்து, வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்வதாக எழுதி கொடுக்க சென்றனர். அவர்களிடம் கலெக்டர் பழனி, போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் ஆகியோர் கூறியதாவது:-

    போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். இனிமேல் இந்த வழக்கு குறித்து நீதிமன்ற விசாரணையில் தான் முடிவு தெரியும். நாங்கள் யாரும் அது பற்றி முடிவு செய்ய முடியாது. கிராம பொதுமக்கள் பள்ளி மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு அனைவரையும் பள்ளிக்கு அனுப்பி வைத்து கல்வி கற்க செய்யுங்கள் என கூறி அவர்களை அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கிராமத்திற்கு வந்த அவர்கள், கிராம பஞ்சாயத்தார் மற்றும் மற்ற பெற்றோர்களுடன் கலந்தாலோசித்தனர். இதில் வரும் 4-ந் தேதி திங்கட்கிழமையில் இருந்து மாணவர்களை பள்ளிக்கு அனுப்பி வைப்பதென முடிவு செய்தனர். மேலும், நீதிமன்ற விசாரணையின் போது பா ர்த்துக் கொள்ளலாமெனவும் முடிவெடுத்தனர். இந்த முடிவினை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, கல்வித் துறை அதிகாரிகளுக்கு வாக்கூர் கிராம மக்கள் அனுப்பி வைத்தனர். இதனால் கடந்த ஒரு வாரமாக நடந்த பிரச்சினை முடிவுக்கு வந்துள்ளது.

    • ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர்.
    • மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

    ராமேசுவரம்:

    ராமநாதபுரம் மாவட்டத் தின் பிரதான தொழிலாக மீன்பிடி தொழில் இருந்து வருகிறது. நாள் ஒன்றுக்கு 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளிலும், 500-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு செல்கிறார்கள்.

    அவர்கள் இந்திய கடல் எல்லையில் மீன்பிடித்த போதும், சிங்கள கடற்படையினர் எல்லை தாண்டி வந்ததாக கூறி மீனவர்களையும், அவர்களது விசைப்படகுகளையும் சிறைப்பிடித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.

    சில வாரங்களில் அவர்கள் விடுதலை செய்யப்பட்டபோதிலும், படகுகளை இலங்கை அரசு அந்த நாட்டுடமையாக்கி விடுகிறது. இதனால் படகுகளை பறிகொடுக்கும் மீனவர்கள் வேறு வழியின்றி மாற்று தொழிலுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில் ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற ஒரு படகுடன் 8 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறைப் பிடித்தனர். பறிமுதல் செய்யப்பட்ட படகு மற்றும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரண்டு நாட்கள் வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டனர்.

    இதனால் நாள் ஒன்றுக்கு ரூ.5 கோடி வரை மீன் ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டது. மேலும் 5 ஆயி ரம் மீனவர்கள் உள்ளிட்ட 25 ஆயிரம் தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையிழந்து பாதிப்புக்குள்ளாகினர். மீனவர்களின் தங்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு வேலை நிறுத்த போராட்டத்தை இன்று வாபஸ் பெற்றனர்.

    இதனைதொடர்ந்து, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை அனுமதி பெற்று இன்று காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர்.

    இலங்கை கடற்படையின் அச்சமின்றி மீன்பிடிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • அதிகாரிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு
    • கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி அருகே கோவளம் கடற்கரை கிராமம் உள்ளது. இந்த கிராமம் அரபிக்கடல் ஓரம் அமைந்துள்ளது. இங்கு மீனவர்கள் அதிக அளவில் வசித்து வருகிறார்கள். இவர்களது முக்கிய தொழில் மீன் பிடித்தொழில் ஆகும். இங்கு 1000-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களில் மீனவர்கள் கடலுக்கு சென்று மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த கடற்கரை பகுதியில் அடிக்கடி கடல் சீற்றமாகவும், கொந்தளிப்பாகவும் காணப்படுகிறது. இந்த கடல்சீற்றத்தின் போது ஏற்படும் ராட்சத அலையில் நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்கள் சிக்கி கவிழ்ந்து விடுகின்றன. இதனால் மீனவர்களுக்கு காயம் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் பலியாகும் ஆபத்தான நிலையும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை நீடிக்கிறது. இந்த சீற்றத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஏற்கனவே போடப்பட்டிருந்த தூண்டில் வளைவு பாலம் ராட்சத அலையினால் உடைந்து சேதம்அடைந்து விட்டன. இதனால் சேதம் அடைந்த இந்த தூண்டில் வளைவு பாலத்தை சீர மைக்க வேண்டும் என்று இந்த பகுதி மீனவர்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    மீனவர்களின் இந்த கோரிக்கையை ஏற்று தற்போது இந்த தூண்டில் வளைவு பாலம் நீட்டிக்கப் பட்டு சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த தூண்டில் வளைவு பாலத்தில் பெரிய பெரிய பாறாங்கற்களை போடாமல் சிறிய கற்களை போட்டு தூண்டில் வளைவு பாலத்தை கடலுக்குள் நேராக அமைக்காமல் வளைவாக அமைத்து வருவதால் மீனவர்களுக்கு மீண்டும் பாதுகாப்பாக மீன்பிடி தொழில் செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. இதனால் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும் மீ னவர்களின் நாட்டுப்படகு கள் மற்றும் வள்ளங்கள் ராட்சத அலையில் சிக்கி அடிக்கடி கவிழ்ந்து மீனவர்களுக்கு காயங்கள் ஏற்படுவதோடு மட்டுமின்றி உயிர் சேதம் ஏற்படும் அபாயமும் இருந்து வருகிறது. இதனால் கோவளம் பகுதி மீனவர்கள் கன்னியா குமரி, சின்னமுட்டம் போன்ற பகுதிகளுக்கு தங்களது நாட்டுப்படகுகள் மற்றும் வள்ளங்களை கொண்டு சென்று மீன்பிடி தொழில் செய்து வரும் அவல நிலை இருந்து வருகிறது. எனவே கோவளம் கடற்கரையில் அமைக்கப்படும் தூண்டி வளைவு பாலத்தை தரமாகவும், நீளமாகவும் அமைத்து தர வேண்டும் என்ற கோரிக்கை யை வலியுறுத்தி கோவளம் பகுதியை சேர்ந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதைத்தொடர்ந்து நேற்று பொதுப்பணித் துறை கடல் அரிப்பு தடுப்பு கோட்ட பொறியாளர்கள் கோவளம் மீனவர் பிரதிகளுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதில் கோவளம் கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவு பாலத்தை கூடுதலாக 20 மீட்டர் நீளம் நீட்டித்து தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து சமரச பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன் பயனாக கோவளம் மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் கைவிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வழக்கம்போல் கோவளம் மீனவர்கள் இன்று காலை கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

    • மலைவாழ்மக்கள் உடுமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் கடந்த 12ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா்.
    • 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மலைவாழ் மக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இருந்து சுமாா் 25 கிலோ மீட்டா் தொலைவில் தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதி. இங்குள்ள அடா்ந்த வனப் பகுதியில் 15க்கும் மேற்பட்ட மலைக் கிராமங்களில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வாழ்ந்து வருகின்றனா்.

    மலைவாழ்மக்கள் குழந்தைகளுக்கு கல்வி, மருத்துவம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனா்.

    இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மலைவாழ்மக்கள் உடுமலையில் உள்ள வனத்துறை அலுவலகம் முன் கடந்த 12ந் தேதி காத்திருப்பு போராட்டத்தை தொடங்கினா். இதில் 300க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.

    போராட்டத்தின்போது மலைவாழ் மக்கள் தங்களுக்கான உணவை அங்கேயே சமைத்தும், பாரம்பரிய நடனங்களை ஆடியும் கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தனா். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் பெ.சண்முகம் தலைமையிலும், மாநில மலைவாழ் மக்கள் சங்கத் துணைத் தலைவா் செல்வம், எஸ்.ஆா்.மதுசூதனன் ஆகியோா் முன்னிலையிலும் இந்தப் போராட்டம் நடைபெற்று வந்தது. இதையடுத்து போராட்டக்காரா்களுடன் வனத்துறையினா் 4 கட்ட பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டும் முடிவு எட்டப்படவில்லை.

    இதைத் தொடா்ந்து, திருப்பூா் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் வனத்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் போராட்டக் குழுவோடு பேச்சுவாா்த்தை நடத்தினா்.

    இதில், முதல்கட்டமாக மலைவாழ் மக்களின் 200 ஆண்டு கோரிக்கையான திருமூா்த்தி மலை முதல் குருமலை செட்டில்மென்ட் வரை 5 கிலோ மீட்டா் தொலைவுக்கு சாலை அமைத்து கொள்ள அதிகாரிகள் ஒப்புதல் அளித்தனா்.

    தளி பேரூராட்சி மூலமாக இதற்காக விரைவில் நிதி ஒதுக்கி டெண்டா் விடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் எனவும், இதர கோரிக்கைகள் பரிசீலிக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா். இதைத் தொடா்ந்து 3 நாட்களாக நடத்தி வந்த போராட்டத்தை மலைவாழ் மக்கள் வாபஸ் பெற்றுக் கொண்டனா்.

    • எம்.எல்.ஏ. தலைமையில் நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது
    • சமாதான பேச்சு வார்த்தையில் உடன்பாடு

    கறம்பக்குடி,

    கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் போதிய டாக்டர்கள், செவிலியர்கள் நியமனம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை தலைமையில் சாலை மறியல் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் முருகேசன் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆலங்குடி டி.எஸ்.பி. தீபக் ரஜினி, கறம்பக்குடி இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியன், வருவாய் வட்டாட்சியர் ராமசாமி, வர்த்தக சங்கத் தலைவர் ஜெகநாதன், மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்ட செயலாளர் முகமது ஜான், தமிழ்நாடு விவசாய சங்க செயலாளர் பொன்னுசாமி சத்தியமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் வீரமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    பேச்சுவார்த்தையில் மருத்துவமனையில் நியமனம் செய்யப்பட்டுள்ள 3 டாக்டர்களில் ஒருவர் மகப்பேறு விடுதியில் இருக்கிறார். மற்ற டாக்டர்களை உடனடியாக பணியில் சேர அறிவுறுத்துவது, மாற்றுப் பணிகளில் கூடுதல் டாக்டர்களை நியமிப்பது, வருகிற 23-ம் தேதி முதல் அரசு மருத்துவமனையை 24 மணி நேரமும் இயங்க செய்வது, மேலும் 2 டாக்டர்களை நியமிக்க கோரி அரசுக்கு கருத்துரு அனுப்புவது, டயாலிசிஸ் எக்ஸ்ரே போன்ற அத்தியாவசிய மருத்துவ உபகரணங்களை மீண்டும் இயங்க செய்ய நடவடிக்கை எடுப்பது, வாரம் ஒரு முறை மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சுகாதாரப் பணிகள் இணை இயக்குனர் ராமு உறுதியளித்தார். இதனையடுத்து போராட்டத்தை வாபஸ் பெருவதாக எம்.எல்.ஏ. சின்னத்துரை தெரிவித்துள்ளார்.

    • தண்ணீர் நிரப்பும் நிலையங்கள் தொடர்பான பிரச்சினையால் வேலைநிறுத்தம் போராட்டம் அறிவிப்பு.
    • கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் தண்ணீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அறிவிப்பு.

    சென்னையில் தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்த போராட்டம் நடத்த இருந்த நிலையில், அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    வள்ளுவர் கோட்டத்தில் உள்ள தண்ணீர் நிரப்பும் நிலையங்கள் தொடர்பான பிரச்சினையால் நாளை தண்ணீர் லாரிகள் இயங்காது என தண்ணீர் லாரிகள் உரிமையாளர்கள் அறிவித்திருந்தனர்.

    கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் தண்ணீர் லாரிகள் நாளை வழக்கம் போல் இயங்கும் என அதன் உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

    மேலும், செயல்படாமல் இருந்த தண்ணீர் நிரப்பும் நிலையத்தை அதிகாரிகள் ஆய்வு செய்து சரி செய்ததால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    • நில ஒருங்கிணைப்பு சட்டத்தை திரும்ப பெறாவிட்டால் போராட்டம் நடத்தப்படும்.
    • தமிழக அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று விவசாயிகள் அறிவித்தனர்.

    சிவகங்கை

    தமிழக அரசால் கடந்த பட்ஜெட் கூட்ட தொடரில் தமிழ்நாடு அரசு நில ஒருங்கிணைப்பு சட்டம் 2023 நிறைவேற்றப்பட்டது. இச்சட்டத்தினை திரும்ப பெறக் கோரி சிவகங்கை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கி ணைப்புக்குழு சார்பில் மாவட்ட கவுரவத்தலைவர் ஆதிமூலம் தலைமையில், விவசாயிகள் மனு அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

    நில ஒருங்கிணைப்பு சட்டத்தின் மூலம் கார்ப்பரேட் நிறுவனங்க ளுக்கு 100 ஏக்கர் தொடர்ச்சி யாக பெற வழிவகை ஏற்பட்டுள்ளது. இதனால் மக்களின் பொது பயன் பாட்டில் உள்ள நிலங்கள், குளம், கண்மாய், நீர்வழிப் பாதைகள், வழிபாடு தலங்கள் பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்படுவதுடன், விவசாயமும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு இச்சட்டத்தை வாபஸ் பெற வேண்டும், இல்லை என்றால் தமிழகத்தில் உள்ள அனைத்து விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தவுள்ளதாகவும், மேலும் தமிழக ஆளுநரை சந்தித்து முறையிட உள்ளோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினார்.

    • ஜல்லிக்கட்டு போராட்ட வழக்குகளை வாபஸ் பெற கோரிக்கை மனு ஐ.ஜி.யிடம் வழங்கப்பட்டது.
    • வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    மதுரை

    கடந்த 2017-ம் ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த வேண்டும் என வலியுறுத்தி தமிழக முழு வதும் மாணவர்கள், பெண்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர் போராட்டங்களை நடத்தி னர்.

    இந்த போராட்டத்தின் காரணமாக தமிழக அரசு அவசர சட்டம் இயற்றி குடியரசு தலைவர் ஒப்புதல் பெற்று ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.

    ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் மீது போலீசார் வழக்குகள் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் ஜல்லிக்கட்டு உரிமைக்கான போராட்டத்தில் ஈடுபட்ட வர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி இன்று ஜல்லிக்கட்டு வழக்கு முறி யடிப்பு குழுவினர் மதுரை யில் உள்ள தென் மண்டல ஐ.ஜி. அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர். அதில்

    ஜல்லிக்கட்டு போராட்டத் தில் ஈடுபட்டவர்கள் மாணவர்கள் மற்றும் சாமா னியர்கள். அவர்களால் தொடர்ந்து வழக்கை எதிர்கொள்ள முடியாத பொருளாதார நிலை இருப்பதால் அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு களை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிடப் பட்டுள்ளது.

    • சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் திடீர் வாபஸ் பெறப்பட்டது
    • பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு

    திருச்சி,

    சாலை பணியாளர்களை தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரிகளை கண்டித்தும், சாலை பணிகள் மேற்கொள்வதற்குரிய கருவி, தளவாடங்கள், காலணி, மழைக்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரியும்தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் திருச்சி துறையூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சாலை பணியாளர்களை திட்டிய சாலை ஆய்வாளர் உள்ளிட்டவர்களிடம் கோட்டப்பொறியாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உதவி கோட்ட பொறியாளர் வாயிலாக பரிந்துரை செய்வது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    • கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது.

    சேலம்:

    தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் ஜெயச்சந்திரன் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட் டத்தில் ஈடுபட போவதாக் தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர் சங்கம் அறிவித்திருந்தது.

    இதன் அடிப்படையில் அந்தந்த மாவட்ட தலைந கரங்களில் போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனிடையே மாநிலத் தலைவர் ஜெயசந்திரனை தாக்கியவர்களை போலீசார் அதிரடியாக கைது செய்த னர். இதையடுத்து நியாய விலைக்கடை பணியா ளர்கள் தங்கள் போராட் டத்தை வாபஸ் பெற்றனர்.

    சேலம் மாவட்ட ஊராட்சி அலுவலக வளாகத்தில் இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர் கணே சன் தலைமையில் நடை பெற்ற இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர் கார்த்தி, மாநில பொருளா ளர் ராஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் நியாய விலை கடை பணியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தை தொடர்ந்து மாநில துணைத்தலைவர் கணேசன் நிருபர்களிடம் கூறும்போது, தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தின் மாநில தலைவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடராக கடந்த 20 நாட்களுக்கு மேலாக நியாய விலை கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இன்று முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்து முதற்கட்டமாக 7 பேரை கைது செய்துள்ளது. மேலும் இது சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை இன்று மாலைக்குள் கைது செய்வதாக உறுதி அளித்ததால், போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டு உள்ளது. நியாய விலைக்கடை பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றார்.

    • தி.மு.க. மீனவர் அணி செயலாளர் பேச்சுவார்த்தைக்கு பிறகு முடிவு
    • ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார்

    கன்னியாகுமரி :

    குளச்சல் நகராட்சியில் வீட்டு வரி பாக்கி வைத்தி ருப்பவர்களின் குடிநீர் இணைப்பை துண்டித்த நக ராட்சியின் நடவடிக்கையை கண்டித்து கவுன்சிலர்கள் நகராட்சி அலுவலகத்தில் நேற்று முன்தினம் தர்ணா போராட்டம் நடத்தினர்.

    இதில் நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ், கவுன்சிலர்கள் ஜாண்சன், ரகீம், சஜிலா, சந்திர வயோலா, பனிக் குருசு, மேரி, ஷீலா ஜெயந்தி, ரமேஷ், ஜாண் பிரிட்டோ, சுஜித்திரா, தனலட்சுமி, வினேஷ், லாரன்ஸ், திலகா ஆகியோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுப்பட்ட கவுன்சிலர்களுடன் ஆணை யர் விஜயகுமார் மாலை பேச்சு வார்த்தை நடத்த முயற்சித்தார். ஆனால் கவுன்சிலர்கள் அதை ஏற்க வில்லை.

    தொடர்ந்து நள்ளிரவு வரை போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் தி.மு.க. தலைமை ஏற்பாட்டின் படி மாநில தி.மு.க. மீனவர் அணி செய லாளர் ஏ.ஜே.ஸ்டாலின் குளச்சல் நகராட்சி அலுவலகம் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். காலையில் (நேற்று) ஆணை யாளரிடம் பேச்சு வார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுக்கப்படும் என கேட்டுக்கொண்டதை யடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இதை யடுத்து நேற்று மதியம் ஆணையர் விஜயகுமார் மற்றும் மேற்கூறிய கவுன்சி லர்களுடன் தி.மு.க. மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    சுமார் 2 மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டது. பேச்சுவார்த்தையில் நகராட்சி வரி பாக்கி வைத்திருப்பவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு பெயர் பட்டியலை வார்டு கவுன்சிலர்களிடம் அளித்து வசூல் செய்வது எனவும், ஒத்துழைப்பு அளிக்கா தவர்களுக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பது எனவும், அரசின் மக்கள் நலத்திட்டங்களை அனைத்து வார்டுகளுக்கும் பாரபட்ச மின்றி செய்வது எனவும், நடை பாதையோரம் கடை களில் கட்டண வசூல் செய்யக்கூடாது எனவும், மக்கள் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு கொண்டு வரும் சிறப்பு திட்டங்களுக்கு மேற்கூறிய கவுன்சிலர்கள் ஆதரவு அளிப்பது எனவும், நக ராட்சி புதிய கடைகள் குத்தகை வாடகைக்கு விடும்போது நகர்மன்றத்தில் தெரியப்படுத்துவது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதையடுத்து குளச்சல் நகராட்சி கவுன்சிலர்களின் போராட்டம் முடிவுக்கு வந்தது.

    ×