search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்
    X

    சாலை பணியாளர்கள் போராட்டம் வாபஸ்

    • சாலை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் திடீர் வாபஸ் பெறப்பட்டது
    • பேச்சு வார்த்தையில் சுமூக தீர்வு

    திருச்சி,

    சாலை பணியாளர்களை தகாத வார்த்தையால் திட்டிய அதிகாரிகளை கண்டித்தும், சாலை பணிகள் மேற்கொள்வதற்குரிய கருவி, தளவாடங்கள், காலணி, மழைக்கோட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க கோரியும்தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தினர் திருச்சி துறையூரில் உள்ள நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர். இதையடுத்து தாசில்தார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. இதில் நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர், தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைபணியாளர் சங்க மாநில துணைத்தலைவர் மகேந்திரன், மாவட்ட தலைவர் ஜீவானந்தம், மாவட்ட செயலாளர் இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர் மணிமாறன் ஆகியோர் கலந்து கொண்டனர். பேச்சுவார்த்தையில் சாலை பணியாளர்களை திட்டிய சாலை ஆய்வாளர் உள்ளிட்டவர்களிடம் கோட்டப்பொறியாளர் தலைமையில் விசாரணை மேற்கொள்ள உதவி கோட்ட பொறியாளர் வாயிலாக பரிந்துரை செய்வது என உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து காத்திருப்பு போராட்டம் கைவிடப்பட்டது.

    Next Story
    ×