search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "marriage ceremony"

    • ஒன்றிய கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர். சரவணன் இல்ல திருமண விழா நாளை நடக்கிறது.
    • அனைவரும் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தி.மு.க. கவுன்சிலர் வசந்த கோகிலா-சி.பி.ஆர்.சரவணன் தம்பதியரின் மகன் எஸ்.வி.விஷ்ணு ராமிற்கும், மாரணி வாரி யேந்தல் டி. கண்ணன்-தீபா மகள் வைஷ்ணவிக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்த திருமண விழா சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் சி.பி.ஆர். அருவுகம் மகாலில் நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10.30 மணி முதல் 12 மணிக்குள் நடக்கிறது. திருமண விழாவை தி.மு.க. மதுரை வடக்கு மாவட்ட செயலாளரும்-அமைச்சருமான பி. மூர்த்தி தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.

    வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஆ.வெங்க டேசன் எம்.எல்.ஏ., முன்னிலை வகிக்கிறார். வாடிப்பட்டி பேரூராட்சி தலைவரும், பேரூர் செயலாளருமான மு.பால்பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் பால.ராஜேந்திரன், பசும்பொன் மாறன் ஆகியோர் வரவேற்கின்ற னர்.ஆனையூர் பகுதி செயலாளர் மருதுபாண்டி, மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜி.பி. ராஜா, சோழவந் தான் ஒன்றிய கவுன்சிலர் பேரூர் செயலாளர் எஸ்.என். சத்யபிரகாஷ் ஆகியோர் நன்றி கூறுகின்றனர். இதில் உற்றார்-உறவினர்கள், நண்பர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டு மண மக்களை வாழ்த்த வேண்டும் என்று திருமண வீட்டார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • அ.தி.மு.க. பிரமுகர் எம்.ஜி. ராமச்சந்திரன் இல்ல திருமண விழா நாளை (20-ந் தேதி) நடக்கிறது.
    • இதில் முன்னாள் அமைச்சர்கள் பங்கேற்கின்றனர்.

    மதுரை

    மதுரை மத்திய 6-ம் பகுதி அ.தி.மு.க. செயலாளரும், ஆர்.கே. குரூப் ஆப் கம்பெனிஸ் மற்றும் ஸ்ரீ வெற்றி பார்மா மேனேஜிங் டைரக்டர்மான எம்.ஜி. ராமச்சந்திரன்-கொன்னலட்சுமி தம்பதியின் மகள் ராஜிக்கும், சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் -உமா மகேஸ்வரி தம்பதி மகனுமான மோகன் ராஜூக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டது.

    இவர்களது திருமணம் நாளை (20-ந் தேதி) காலை அழகர் கோவில் ரோடு சூர்யா நகரில் உள்ள விஜய் கிருஷ்ணா மஹாலில் நடக்கிறது. திருமணத்தை மதுரை மாவட்ட லாரி உரிமையாளர் சங்கத் துணைத் தலைவர் எம். கணேசன் நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்துகிறார்.

    திருமண விழாவிற்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, தலைமை தாங்குகிறார் அ.தி.மு.க. அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன், ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    மாவட்ட நிர்வாகிகள் எம்எஸ். பாண்டியன், அண்ணாதுரை, ராஜா, ஜெயபாலன், சக்தி மோகன், குமார், சோலை எம். ராஜா, சக்தி விநாயகர் பாண்டியன், தளபதி மாரியப்பன், பரவை ராஜா, திரவியம் ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

    விழாவில் அரசியல் கட்சியினர், தொழிலதி பர்கள், முக்கிய பிரமுகர்கள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகிறார்கள்.

    திருமண ஏற்பாடுகளை எம்.ஜி. ராமச்சந்திரன்- கொன்னலட்சுமி மற்றும் குடும்பத்தினர் உதயகுமார்- புனிதா, நந்தினி ஆகியோர் செய்து வருகிறார்கள்.

    • திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்- லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பொங்கலூர் அருகே உள்ள சாந்தி திருமண மகாலில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். பின்னர் மணமக்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடாஎஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், விஜயகுமார் எம்.எல்.ஏ., பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் அ.நடராஜன், பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் நீதிராஜன், வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பழனிவேல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தனியரசு உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் , தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    உத்தரப்பிரதேசத்தின் மொரதாபாத்தில் நடந்த திருமண விழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரு பெண்கள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. #CelebratoryFiring
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் மொரதாபாத் மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் நேற்று திருமண விழா நடைபெற்றது. அப்போது, மணமகன் வீட்டார் உற்சாக மிகுதியில் தங்களிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் சுட்டனர்.

    இதில், ராஷ்மி மற்றும் குசும் என்ற 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ராஜ்ராணி, ராஜ்குமாரி, ஷிவ்ராணி மற்றும் சோனம் ஆகிய 4 பெண்கள் படுகாயம் அடைந்தனர்.

    இதையடுத்து, காயமடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். துப்பாக்கிச் சூடு தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமண விழாவில் துப்பாக்கிச் சூட்டில் 2 பெண்கள் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #CelebratoryFiring
    ×