search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MSM. Anandhan MLA"

    • பல்லடம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • இந்த விழாவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்

    பல்லடம் : 

    பல்லடம் அருகே, நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி ஆறாக்குளம் கிராமத்தில், மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் மனோன்மணி, அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், காங்கிரஸ் நிர்வாகி ரவி மற்றும் கோகுல், ஊராட்சி செயலாளர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பல்லடம் வடுகபாளையம், கணபதி பாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகர்,கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையம் ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.

    • திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
    • பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பல்லடம் :

    பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ.வும் அ.தி.மு.க.வின் அமைப்பு செயலாளருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன்- லட்சுமி தம்பதியரின் மகள் டாக்டர். விந்தியா மற்றும் திருப்பூர் சாய்பாபா நகர் கே.சுப்பிரமணியன்- விஜயலட்சுமி தம்பதியரின் மகன் பிரவீன் ஆகியோர் திருமணம் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெருமாநல்லூரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    இதனைத்தொடர்ந்து நேற்று பொங்கலூர் அருகே உள்ள சாந்தி திருமண மகாலில் வரவேற்பு விழா நடைபெற்றது. விழாவிற்கு அ.தி.மு.க.வின் இடைக்கால பொதுச்செயலாளரும், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வருகை தந்தார். பின்னர் மணமக்களுக்கு பூங்கொடுத்து கொடுத்து வாழ்த்தினார். பொங்கலூர் பகுதிக்கு முதன் முறையாக வருகை தந்ததால் அவரை சிறப்பான முறையில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் மற்றும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி கொறடாஎஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. அமைப்புச்செயலாளரும், திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான உடுமலை கே.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., கட்சியின் அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.அன்பழகன், திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், விஜயகுமார் எம்.எல்.ஏ., பல்லடம் வடக்கு ஒன்றிய செயலாளரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கரைப்புதூர் அ.நடராஜன், பல்லடம் நகர செயலாளர் ராமமூர்த்தி, அம்மா பேரவை துணைச்செயலாளர் முத்துவெங்கடேஸ்வரன், மாநகர் மாவட்ட அம்மா பேரவை துணை செயலாளர் நீதிராஜன், வீட்டு வசதி சங்க துணைத்தலைவர் பழனிவேல் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பரமசிவம், தனியரசு உள்பட முன்னாள் அமைச்சர்கள், இன்னாள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய நிர்வாகிகள் , தொண்டர்கள், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×