search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பல்லடம் அருகே குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை - எம்.எஸ்.எம்.ஆனந்தன்   எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்
    X

    எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ அவர்கள் பூமி பூஜையை தொடங்கி வைத்த காட்சி

    பல்லடம் அருகே குடிநீர் தொட்டி கட்ட பூமி பூஜை - எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.தொடங்கி வைத்தார்

    • பல்லடம் அருகே ரூ.8 லட்சம் மதிப்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது
    • இந்த விழாவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார்

    பல்லடம் :

    பல்லடம் அருகே, நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பல்லடம் அருகே உள்ள பருவாய் ஊராட்சி ஆறாக்குளம் கிராமத்தில், மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் நிலமட்ட குடிநீர் தொட்டி கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட கவுன்சிலர் ஜெயந்தி லோகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் எம்.எஸ்.எம். ஆனந்தன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு பணியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், பருவாய் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன், துணைத்தலைவர் மனோன்மணி, அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் சித்துராஜ், காங்கிரஸ் நிர்வாகி ரவி மற்றும் கோகுல், ஊராட்சி செயலாளர் சிவசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக பல்லடம் வடுகபாளையம், கணபதி பாளையம் ஊராட்சி மாதேஸ்வரன் நகர்,கரைப்புதூர் ஊராட்சி குன்னாங்கல்பாளையம் ஆகிய இடங்களில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பணிகள் செய்யப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறைகளை எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ.,துவக்கி வைத்தார்.

    Next Story
    ×