search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரவு நேர ரோந்து பணி"

    • இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.
    • மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி எதிர்க்கட்சி கொறடாவும் கவுன்சிலருமான கண்ணப்பன் திருப்பூர் தெற்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பிச்சையாவிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட44 வது வார்டு பகுதியில் குருநாதர்வீதி , அர்த்தனாரிவீதி , செளண்டம்மன் கோவில் வீதி , கோவிந்தர்வீதி , எம்.என்.ஆர். லைன் , சின்னத்தோட்டம் ,செல்லப்பபுரம் , குப்புசாமிபுரம் , எல்.ஐ.சி.ரோடு ,காமாட்சி அம்மன் கோவில்வீதி பகுதிகளில் இரவு நேரங்களில் அந்நிய நபர்களின் நடமாட்டமும் , இருசக்கர வாகனங்கள் காணாமல் போவதும் அதிகரித்து வருகிறது.

    ஆகவே , மேற்கண்ட பகுதிகளில் இரவு நேரங்களில் பாதுகாப்பு பணியை தீவிரப் படுத்துவதோடு தீவிர ரோந்து பணியும் மேற்கொள்ள வேண்டும். 44-வது வார்டு பகுதி மக்களுக்கும் அவர்களது உடைமைகளுக்கும் உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தி தர வேண்டும்.மேலும் காணாமல் போன இருசக்கர வாகனங்களை கண்டுபிடித்து தர வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறியுள்ளார். 

    ×