search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காண வேண்டும் - மேயரிடம் கவுன்சிலர் மனு
    X

    24 வது வாா்டு மாமன்ற உறுப்பினருமான ஆா்.நாகராஜ், மேயா் என்.தினேஷ்குமாரிடம் மனு அளித்த காட்சி.  

    குடிநீா் பிரச்சினைக்கு தீா்வு காண வேண்டும் - மேயரிடம் கவுன்சிலர் மனு

    • சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
    • 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும்.

    திருப்பூர் :

    மதிமுக மாநகா் மாவட்டச் செயலாளரும், மாநகராட்சி 24 வது வாா்டு மாமன்ற உறுப்பினருமான ஆா்.நாகராஜ், மேயா் என்.தினேஷ்குமாரிடம் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    திருப்பூா் மாநகராட்சி 24 ஆவது வாா்டுக்குள்பட்ட சிவசக்தி நகரில் குடிநீா்க் குழாய் உடைந்துள்ளதால் சீரான குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

    இது தொடா்பாக ஆய்வு நடத்திய அதிகாரிகள் 4 வது குடிநீா்த் திட்டத்தில் குடிநீா் விநியோகம் செய்யப்படும்போது இந்தப் பிரச்னைக்குத் தீா்வு கிடைக்கும் என்று தெரிவித்துள்ளதுடன், தற்போது வரையில் எந்தவி தமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே, சிவசக்தி நகரில் 4 வது குடிநீா்த் திட்ட குழாய் அமைத்து குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காண வேண்டும். அதேபோல நாகாத்தம்மன் கோயில் வீதி, சத்யா நகா் பகுதியில் குடிநீா் பிரச்னைக்குத் தீா்வு காணும் வகையில் ஆழ்துளைக் கிணறு அமைத்துக் கொடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனதில் அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×