search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி"

    • அருள் ஆனந்தர் கல்லூரியில் ரத்ததானம்-உறுப்புதான முகாம் நடந்தது.
    • ரத்ததான சேவைக்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் ரத்ததான சேவை இயக்கத்தின் பொன் விழாவை (1973- 2023) முன்னிட்டு 50 ஆண்டு கால ரத்ததான சேவையை நினைவுகூறும் வகையில், மெகா ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் கல்லூரியில் நடைபெற்றது.

    நிகழ்வில், கல்லூரி முதல்வர் அன்பரசு வர வேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமர குருபரன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் செல்வ ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக ஜெர்ரி ரொசாரியோ கலந்து கொண்டு ரத்ததானத்தின் முக்கியத்துவம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரத்ததானம் செய்த கல்லூரி மாண வர்கள், கிராம மக்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. என்.எஸ். எஸ். திட்ட ஒருங்கி ணைப்பாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.

    அருள் ஆனந்தர் கல்லூரியின் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 151 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. ஜெரி ரொசாரியோவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த இயக்கம், ரத்ததான சேவைக்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

    ஓராண்டில் (1973ம் வருடம்) அதிக எண்ணிக்கை யில் ரத்ததானம் செய்த மைக்கான சுழற்கோப்பை மற்றும் கேடயத்தை வென்றது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த டாக்டர் மு.கருணாநிதி தன்னார்வக் கொடையாளர் விழாவில் கல்லூரிக்கு கோப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக ரத்த தானச் சேவையை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவ ர்கள் பங்கேற்ற விழி ப்புணர்வு மாரத்தான் போட்டியை செல்லம்பட்டி யில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்து ராமன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி, மதுரை தோப்பூர் முதன்மை மருத்துவ அலுவலர் காந்திமதி நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 335 மாணவர்களும், 15 பணியாளர்களும் ரத்ததா னம் செய்தனர். 300 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

    • தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடந்தது.
    • முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் குந்தவை நாச்சியாா் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் முதுகலைத் தமிழாய்வுத் துறை சாா்பில் தமிழ் இலக்கியங்களில் புதிய தேடல்கள் என்ற தலைப்பில் ஒரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் நடைபெற்றது.

    கல்லூரி முதல்வா் ஜான்பீட்டா் தலைமை வகித்தாா். இலங்கை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் சண்முகலிங்கன், புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு நிறுவன முன்னாள் இயக்குநா் பக்தவத்சலபாரதி ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

    தோ்வு நெறியாளா் மலா்விழி, உதவிப் பேராசிரியா் தமிழ்ச்செல்வி, முனைவா் சம்பகலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழ்த் துறைத் தலைவா் வைஜெயந்தி மாலா வரவேற்றாா். முடிவில் முனைவா் கரிகாலன் நன்றி கூறினாா்.

    • முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.
    • விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

    சேலம்:

    சேலம் அருகே உள்ள ஓமலூர் முத்துநாயக்கன்பட்டி பகுதியை சேர்ந்தவர் செல்வம் (47) இவர் சேலம் அரசு டவுன் பஸ்சில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார்.

    நேற்று சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தேக்கம்பட்டி செல்லும் அரசு டவுன் பஸ்சை ஓட்டுனராக செல்வம் தேக்கம்பட்டிக்கு ஓட்டி சென்றார்.

    பின்னர் மீண்டும் சேலம் பஸ் நிலையம் வருவதற்காக தேக்கம்பட்டி பஸ் நிறுத்தம் அருகே பஸ்சை திருப்பிக் கொண்டிருந்தார்.

    தேக்கம்பட்டி அருகே உள்ள காட்டுவளவு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த விஜயராகவன் (51) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தவர், அரசு பஸ் டிரைவர் செல்வத்திடம் தகராறில் ஈடுபட்டு தாக்கியுள்ளார்.

    இந்த திடீர் தாக்குதால் காயம் அடைந்த செல்வம் ஓமலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    இது குறித்த புகாரின் பேரில் கருப்பூர் போலீசார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் மற்றும் தாக்குதல் போன்ற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த விஜயராகவனை இன்று காலை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

    கைது செய்யப்பட்ட விஜயராகவன் சேலத்தில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பஸ் டிரைவராக பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார்.

    சுவாமிமலை:

    விவேகானந்தா கலாம் பவுண்டேஷன், கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து "எனது மண், எனது தேசம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியல் நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார். மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குனர் காமராஜர், கல்லூரி முதல்வர் யூஜின் அமலா, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி ஆகியோர் முன்னிலை வகித்தார்.விழாவை விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் ஒருங்கிணைத்தார். இதில் கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ, திருச்சி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தேவி பத்மநாபன், ரவீந்திரன், ஜெயகணேஷ், கும்பகோணம் ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பா ளர் துரை.கார்த்திகேயன், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    • அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற முகமது சதக் கல்லூரி மாணவரை இயக்குநர்-ஆசிரியர்கள் பாராட்டினர்.
    • தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

    கீழக்கரை

    அண்ணா பல்கலைக்கழக அளவில் கடல் சார் பொறியி யல் கல்லூரி மாணவர்க ளுக்கு இடையே நடைபெற்ற தேர்வில் தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சோன்ரபிரபு முதலாவதாக தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்றார்.

    அண்ணா பல்கலை கழகம் அளவில் முதல் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர் சோன்ர பிரபுவுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் பி.ஆர்.எல்.ஹாமிது இப்ராஹிம் மாணவரை பாராட்டி தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

    மேலும் அவர் கூறுகை யில், அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். எங்கள் கல்லூரியில் கடல்சார் பொறியியல் துறையில் பயின்று சாதனை புரிந்து தற்போது பெரிய கப்பல் நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு உதார ணமாக திகழ்கிறார். அவரை அழைத்து பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

    மாணவரின் தாயார் மாரியம்மாள், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி சி.இ.ஒ. விஜயகுமார், கல்லூரி முதல்வர் செந்தில் குமார், கல்லூரி கடல்சார் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சாதனை மாணவர் சோன்ரபிரபு கூறும்போது, நான் அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெறுவதற்கு உறு துணையாக இருந்த முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர், சி.இ.ஓ.., கல்லூரி முதல்வர், துறை தலைவர், பேராசிரி யர்கள், என் பெற்றோர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி பேரா–சிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் மாநில என்.எஸ்.எஸ். திட்ட இயக் குநர் செந்தில்குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்க–லைக்கழக என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி வழிகாட்டுதலோடு மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகமும் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி–யும் இணைந்து நடத்திய கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி கல்லூஞ நடைபெற் றது.

    அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் தலைவர் எம்.எஸ். ஷா,பொருளாளர் சகிலா ஷா ஆகியார் வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முனியாண்டி வரவேற்றார் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கி பேசுகை–யில் பயணங்கள் மூலமாக கலாச்சாரங்கள் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு பரவி உள்ளது. கலாச்சாரம் மட்டுமின்றி வேளாண்மை தொழிலிலும் பரவலாக்கப்படுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் தனது பயணத்தை அடிப்ப–டையாக கொண்டு கலாச் சார நூல்கள் பல எழுதி–யுள்ளார் என்று கூறினார்.

    மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்க–ழக பேராசிரியர் மனோன் மணி தேவி பேசுகையில், கல்லூரி மாணவர்கள் பய–ணங்கள் மூலமாக வாழ்வி–யலை கற்றுக் கொள்வதோடு எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழக மாணவர் தலைவர் வெண்ணிலவன் பரந்தாமன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி மாணவ, மாணவி–கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை உணவு மேலாண்மை துறை பேராசிரியர் விக் னேஸ்வர சீமாட்டி செய்தி–ருந்தார். மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்க–லைக்க–ழக மாணவர்களும் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி–னர். முடிவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ராமுத் தாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேரா–சிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை கல் லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முனியாண்டி மற்றும் தமிழ் துறை பேராசி–ரியர்கள் செய்திருந்த–னர்.

    • 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.
    • இந்த பொருட்காட்சியானது 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படு த்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டது.

    இந்த பொருட்காட்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

    இதில் 40க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.

    தொடர்ந்து 2-வது ஆண்டுகளாக இந்த பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.

    இந்த பொருட்காட்சி ஆனது 2 நாட்கள் நடைபெற உள்ளது.

    கடந்த வருடம் ரூ. 2.5 லட்சம் அளவில் விற்பனை செய்யப்பட்டது.

    மேலும் தற்போது அதனை தாண்டி விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி மாவட்ட வளங்கள் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், நிதியாளர் ராஜாராமன், தாசில்தார் சக்திவேல், கல்லூரியின் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.

    கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் முத்தமிழ் திருமகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
    • சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பாறைப்பட்டி, சுக்கிரவார்பட்டி கிராமங்களில் நடந்தது. கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணாஅசோக் ஆகியோர் வழிநடத்தினர். முதல்வர் சுதாபெரியதாய் தலைமை தாங்கினார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், பாறைப்பட்டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

    ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சோலைசாமி, ராமசாமி, போத்திராஜ் ஆகியோர் மரம் நட்டனர். மாணவி அகிலாண்டேஸ்வரி சுதந்திரம் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.

    • கல்லூரி கருத்தரங்கு நடந்தது.
    • பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஜாகிர்உசேன் கல்லூரியில் வணிகவியல் (கணிப்பொறி பயன்பாடு) துறை சார்பில் "டிஜிட்டல் உலகில் தொழில்முனைவோர்களுக்கான புதுமை திட்டங்கள்" என்னும் தலைப்பில் சர்வதேச கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ்கான் தலைமை தாங்கினார். துறைத்தலைவர் நாசர் வரவேற்றார். முதல் அமர்வில் நைஜீரியா, ஆப்பிரிக்கா பல்கலைக்கழகம், மேலாண்மை அறிவியல் துறை, இணைப்பேராசிரியர் ராஜன் துரைராஜ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். பேராசிரியர் வெங்கடேசன் பங்கேற்றார். பேராசிரியர் அருள் சேவியர் விக்டர் நன்றி கூறினார்.

    2-வது அமர்வில் பேராசிரியர் அரபாத் அலி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக உஸ்பெகிஸ்தான், தொழில் நுட்பத்துறை இணைப்பேராசிரியர் சுபைர் அலி கலந்துகொண்டார். முடிவில் பேராசிரியர் அரபாத் ஹசன் நன்றி கூறினார். நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினராக காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழகம், நிறுவன மேலாண்மை துறை, மூத்த பேராசிரியர், வேதிராஜன் கலந்துகொண்டு பேசினார். பேராசிரியை நாகஜோதி நன்றி கூறினார். 

    • கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    கீழக்கரை

    கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மேலாண்மை துறை சார்பில் தொழில் முனைவோர் மேம்பாடு எனும் தலைப்பில் சிறப்பு கருத்தரங்கம் நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ராஜ சேகர் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகத்தின் கள ஒருங்கிணைப்பாளர் அருமை ரூபன் கலந்து கொண்டார். மேலாண்மை துறை தலைவர் அஜ்மல்கான் வரவேற்றார். முடிவில் பேராசிரியர் ரியாஸ் கான் நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை மேலாண்மை துறை பேராசிரியர்கள், மாணவர்கள் செய்திருந்தனர்.

    • சிவகாசி ராஜரத்தினம் கல்லூரியில் தாய்ப்பால் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
    • உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் உலக தாய்ப்பால் வார விழா, ஊட்டச்சத்து மற்றும் உணவு கட்டுப்பாட்டுத்துறை தலைவர் ஜான்சிராணி வரவேற்றார்.

    விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை தாங்கி பேசினார். பெரியத் தாய், கல்லூரி முதல்வர் சுதா, டாக்டர்கள் யசோதா மணி, முருகேசலட்சுமணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பத்மாவதி தலைமையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது.

    தாய்ப்பால் ஊட்டு தல் விழிப்புணர்வு தொடர் பாக பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. உதவி பேராசிரியர் மெர்லின் ராணி நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சிக் கான ஏற்பாடுகளை உதவி பேரா சிரியர்கள் மகா லட்சுமி மற்றும் கவுசல்யா ஆகியோர் செய்திருந்தனர்.

    • ராணி மங்கம்மாள் பெயரில் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. புதுப்பட்டியில் தெலுங்கர் மன்றம் பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. தெலுங்கர் மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வெலம நாயுடு சங்க தலைவர் ஜெயராமன், மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தெலுங்கர் மன்ற பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் முன்னாள் சேர்மன் சுப்புராஜ் மற்றும் கிளானிஸ் மருத்துவமனை இயக்குநர் மது புருஷோத்தமன் கலந்து கொண்டு பேசினார்.

    டி.கல்லுப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் மகுடாபதி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் ராணி மங்கம்மாள் பெயரில் கல்லுப்பட்டியில் பெண்கள் கலைக் கல்லூரி நிறுவ வேண்டும். கோடைகால அரண்மனையில் ராணி மங்கம்மாள் சிலை வைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    ×