search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி
    X

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களை படத்தில் காணலாம்.

    கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி

    • அன்னை பாத்திமா கல்லூரியில் கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி நடந்தது.
    • நிகழ்ச்சியில் கல்லூரி பேரா–சிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்.எஸ்.எஸ். சார்பில் மாநில என்.எஸ்.எஸ். திட்ட இயக் குநர் செந்தில்குமார் மற்றும் மதுரை காமராஜர் பல்க–லைக்கழக என்எஸ்எஸ் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி வழிகாட்டுதலோடு மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்கழகமும் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி–யும் இணைந்து நடத்திய கலாச்சார பரிமாற்ற நிகழ்ச்சி கல்லூஞ நடைபெற் றது.

    அன்னை பாத்திமா கல்வி குழுமத்தின் தலைவர் எம்.எஸ். ஷா,பொருளாளர் சகிலா ஷா ஆகியார் வாழ்த்துக்களுடன் நிகழ்ச்சி தொடங்கியது.

    என்.எஸ்.எஸ். திட்ட அலுவலர் முனியாண்டி வரவேற்றார் கல்லூரி முதல்வர் அப்துல் காதர் தலைமை தாங்கி பேசுகை–யில் பயணங்கள் மூலமாக கலாச்சாரங்கள் ஒரு நாட்டை விட்டு மற்றொரு நாட்டிற்கு பரவி உள்ளது. கலாச்சாரம் மட்டுமின்றி வேளாண்மை தொழிலிலும் பரவலாக்கப்படுகிறது. சீனப் பயணி யுவான் சுவாங் தனது பயணத்தை அடிப்ப–டையாக கொண்டு கலாச் சார நூல்கள் பல எழுதி–யுள்ளார் என்று கூறினார்.

    மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக்க–ழக பேராசிரியர் மனோன் மணி தேவி பேசுகையில், கல்லூரி மாணவர்கள் பய–ணங்கள் மூலமாக வாழ்வி–யலை கற்றுக் கொள்வதோடு எந்த சூழ்நிலையிலும் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என்று பேசினார்.

    மலேசியா சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்கலைக் கழக மாணவர் தலைவர் வெண்ணிலவன் பரந்தாமன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி மாணவ, மாணவி–கள் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிக்கான ஏற்பாடு–களை உணவு மேலாண்மை துறை பேராசிரியர் விக் னேஸ்வர சீமாட்டி செய்தி–ருந்தார். மலேசிய சுல்தான் இட்ரிஸ் கல்வி பல்க–லைக்க–ழக மாணவர்களும் தங்கள் கலைத்திறன்களை வெளிப்படுத்தும் வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி–னர். முடிவில் தமிழ்த்துறை உதவி பேராசிரியர் ராமுத் தாய் நன்றி கூறினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேரா–சிரியர்கள் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    விழா ஏற்பாடுகளை கல் லூரி தமிழ்த்துறை தலைவர் மற்றும் என்எஸ்எஸ் திட்ட அலுவலர் முனியாண்டி மற்றும் தமிழ் துறை பேராசி–ரியர்கள் செய்திருந்த–னர்.

    Next Story
    ×