search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கல்லூரி"

    • தற்கொலைக்கு தூண்டியதாக பேராசிரியர் உட்பட 3 பேர் மீது வழக்கு
    • போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை

    திருவட்டார்:

    குலசேகரம் நாகக்கோடு பகுதியில் ஸ்ரீ மூகாம்பிகா மருத்துவ கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் தூத்துக்குடி மாவட்டம் வி.இ. ரோடு பகுதியை சேர்ந்த சிவக்குமார். இவரது மகள் சுகிர்தா (27), முதுநிலை பயிற்சி மயக்கவியல் துறை நிபுணராக 2-ம் ஆண்டு படித்து வந்தார். இங்குள்ள விடுதியில் தங்கி படித்து வந்த சுகிர்தாவின் அறை கதவு நேற்றுமுன்தினம் திறக்கப்படவில்லை.

    இதனால் சக மாணவிகள் தகவல் தெரிவித்ததையடுத்து கதவை உடைத்து பார்த்தபோது சுகிர்தா பிணமாக கிடந்தார். சுகிர்தா ஊசி போட்டு தற்கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இது குறித்து குலசேகரம் போலீசாருக்கும், சுகிர்தாவின் பெற்றோ ருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சுகிர்தாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோ தனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சுகிர்தா எழுதி வைத்திருந்த கடிதம் ஒன்றை போலீசார் கைப்பற்றினார்கள். அந்த கடிதத்தில் பேராசிரியர் பரமசிவம் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், தன்னுடன் படித்த மாணவர் ஹரிஷ் மாணவி ப்ரீத்தி ஆகியோர் மனதளவில் டார்ச்சர் செய்ததாகவும் கூறியிருந்தார். இந்த கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

    இதையடுத்து குலசேகரம் போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக கல்லூரி பேராசிரியர் பரமசிவம் மற்றும் ஹரிஷ், ப்ரீத்தி மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். நாகர்கோவில் ஏ.டி.எஸ்.பி. மதியழகன் நேரில் விசாரணை மேற்கொண்டார். நேற்று காலை தொடங்கிய விசாரணை நேற்று இரவு வரை நீடித்தது. இரவு 9.30 மணி வரை போலீசார் சுகிர்தாவுடன் படித்த சக மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள், விடுதியில் தங்கி இருந்த மாணவிகள் என அனைவரிடமும் தனித்தனியாக விசாரணை மேற்கொண்ட னர். மேலும் சுகிர்தா சம்பவத்தன்று யாருடன் எல்லாம் செல்போனில் பேசியுள்ளார் என்பது குறித்த விவரங்களையும் சேகரித்துள்ளனர். இதற்கிடையில் ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் சுகிர்தாவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட அவரது பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அப்போது அவரது தந்தை சிவக்குமார் மகளின் உடலை பார்த்து கதறி அழுதது கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது. இந்த நிலையில் பரம சிவம், ஹரிஷ், ப்ரீத்தியிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டு உள்ளனர். விசாரணைக்கு பிறகு 3 பேரும் கைது செய்யப்படலாம் என்று தெரிகிறது.

    • பெரியசாமி மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.
    • நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகிலுள்ள சிக்கம்பட்டி கிராமம் புதூர் காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் ஜனனி(17) இவர் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு மகளிர் தனியார் கல்லூரியில் பி. ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். நேற்று முன்தினம் ஓமலூரில் உள்ள ஒரு வங்கிக்கு சென்று வருவதாக கூறியவர், மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் பெரியசாமி குடும்பத்தினர் அக்கம் பக்கம் உறவினர் வீடுகளில் தேடியும் எங்கும் கிடைக்காத நிலையில் தாரமங்கலம் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார்
    • பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.

    வேலாயுதம்பாளையம்,  

    கரூர் எம்.குமாரசாமி பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு அறிமுக வகுப்பு நடைபெற்றது. மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொழில் முனைவோர் ஆய்வுத்துறை தலைவர், வணிகவியல் (முன்னாள் பதிவாளர்), பேராசிரியர் மற்றும் சிஎம்பி தலைவர்சிவகுமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    கல்லூரியின் செயலாளர் கே.ராமகிருஷ்ணன், நிர்வாக இயக்குனர்எஸ்.குப்புசாமி, கல்லூரியின் முதல்வர் பி.எஸ்.முருகன், கல்லூரியின் டீன் (அட்மிஷன்) கே.சுந்தராஜு ஆகியோர் நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர்.

    மேலாண்மை துறைத்தலைவர்கே.ராஜேஷ்குமார் வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினர் சிவக்குமார் பேசும்போது தொழில் முனைவோருக்கு இருக்க வேண்டிய குணங்கள் பற்றியும், தொழிலைத் தொடங்க விமர்சன சிந்தனையின் முக்கியத்துவத்தை பற்றியும் அவர் எடுத்துரைத்தார். கோயம்புத்தூர் வனபிரஸ்தாவைச் சேர்ந்த மாணவர் குழுவினர தலைமைத் திறனை மேம்படுத்துவதற்காக பல்வேறு விளையாட்டுகள் மற்றும் பயிற்சிகளை நடத்தினார்கள்.

    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே யுள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்ப ணித்திட்டம், யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகா மிற்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி தாளாளர் செல் லதுரை அப்துல்லா, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப் துல்லா ஆகியோர் ரத்த தானம் வழங்கிய கொடையா ளர்களை பாராட்டினர்.

    இதில் விலங்கியல் துறை தலைவர் தயாளன், உதவி பேராசிரியர் முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் ஜன்னத்து யாஸ்மின், மருத் துவ அலுவலர் நிலோபர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபெருமாள், சுகாதார ஆய் வாளர்கள் இளங்கோ–வன், நம்பிக்கை மைய ஆலோசகர் பாலமுருகன், நடமாடும் மருத்துவ குழுவினர் ராமநா–தபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழு வினர் கலந்துகொண்டனர்.

    இதில் 44 மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச் சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வள்ளிநாய கம், ராஜமகேந்திரன், சேக் அயாஸ் அகமது மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்கள், ஒருங்கி ணைப்பாளர்கள் ஒருங்கி ணைத்து நடத்தினர். இதற் கான ஏற்பாடுகளை கல் லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    • காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரி 25-வது ஆண்டு விழா வருகிற 29ந்தேதி நடக்கிறது.
    • கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி உள்ளது. இதன் நிறுவனர் என்ஜினீயர் மைக்கேல் ஆவார். இந்த கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில்கல்லூரி வளாகத்தில் நடைபெறு கிறது.

    இந்த கல்லூரி வெள்ளி விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் , ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பி .கே. அரவிந்த், தொழிலதிபர் எஸ்.மார்ட்டின், மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரியின் தலை வர் எம். ஸ்டாலின் ஆரோக்கியராஜ், ஒருங்கி ணைப்பாளர் பிரிட்ஜெட் நிர்மலா, கல்லூரி முதல்வர் கற்பகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • சாலையில் விபத்து நடந்தால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது
    • அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும்

    குளச்சல் :

    தலக்குளம் புதுவிளை பி.எஸ்.மூளை நரம்பியல் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குளச்சல் போக்குவரத்து போலீசார் சார்பில் கல்லூரி கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து குளச்சல் போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் வில்லியம் பென்ஜமின் கலந்துகொண்டு சாலைகளில் விபத்துக்களை எப்படி தடுப்பது, சாலையில் விபத்து நடந்தால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும் என்றும் சாலை ஓரங்களில் வைத்திருக்கும் பதாகைகளில் இருக்கும் வரைபடங்கள், சாலையின் மீது போடப்பட்டிருக்கும்.

    மஞ்சள், வெள்ளை கோடுகள் குறித்தும் காணொலி காட்சி மூலம் விளக்கி பேசினார். இதில் டாக்டர்கள் ஆறுமுகம், சரோஜினி, சுனிதா, ஜூலியா, சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், சிதம்பரதாணு, சுரேஷ்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் அமுது, துணை முதல்வர் ஜோஸ்மின், முருகன், பழனியாண்டி, திலீப் மற்றும் ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • காளீஸ்வரி கல்லூரியில் வணிகவியல் துறை புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்ச்சி நடந்தது.
    • புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    சிவகாசி

    திண்டுக்கல்லில் சிவகாசி காளீஸ்வரி கல்லூரி இளங்கலை வணிகவியல் துறை மற்றும் திண்டுக்கல் பார்வதி கல்லூரி வணிகவி யல் துறையுடன் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெப்பமிடும் நிகழ்ச்சி நடந்தது.

    பார்வதி கல்லூரி முதல்வர் சுகுமார் தலைமை தாங்கினார். காளீஸ்வரி கல்லூரி முதல்வர் பாலமுரு கன், வணிகவியல் துறை தலைவர் குருசாமி, திண்டுக்கல் கல்லூரி முதல்வர் சுகுமார், வணிகவியல் துறை தலைவர் வனிதா ராணி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.

    இதற்கான ஏற்பாடுகளை காளீஸ்வரி கல்லூரி பேராசிரியர் பாபு பிராங்க ளின் செய்திருந்தார்.

    • கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.
    • குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மாணவர் குறைதீர் மன்றம் மற்றும் கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.

    கல்லுாரி முதல்வர் ஜான்பீட்டர் தலைமை வகித்து பேசும்போது, பெண்களுடைய உணர்வு களை அவர்கள் பதிவு செய்யும் போதுதான் ஒரு படைப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்றார்.

    எழுத்தாளர் சசிகுமார், கவிஞர் ஜெயந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.

    மாணவி யோகப்பிரியா, உதவி பேராசிரியை தங்கமதி, விடுதி காப்பாளர் மெகருனி சாபேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர் இந்திரா காந்தி, இணை ஒருங்கிணைப்பாளர் சுஜித்ரா மற்றும் குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி முன்னால் மாணவர்கள் தொழில் முனைவோராகியுள்ளனர்
    • பல்கலைக்கழக வேந்தரிடம் வாழ்த்து

    பெரம்பலூர்:

    தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் விமானவியல் துறையின் முன்னாள் மாணவர்களான (2013 - 2017) திருச்சியைச் சேர்ந்த நித்தீஷ் புஷ்பராஜ், கடலூரைச் சேர்ந்த மணிமாறன் கணேசன், தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட வேல்முருகன் செல்வராஜ் ஆகியோர் ஆஸ்திரேலியாவில் வெற்றிகரமான தொழில்முனைவோராக மாறினர்.

    பின்னர் அவர்கள் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் சீனிவாசனை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

    இந்த மாணவர்கள் ஆஸ்திரேலியாவில் TAV சிஸ்டம்ஸ் என்ற மின்சாரத்தினால் இயங்கும் இரு சக்கர மிதிவண்டி தயாரிப்பு நிறுவனத்தை ஆஸ்திரேலியாவின் ஃபிளிண்டர்ஸ்

    பல்கலைக்கழகத்தின் உதவியுடன் கடந்த 2020 ஆம் ஆண்டு நிறுவி வெற்றிகரமாக நடத்தி

    வருகின்றனர். மேலும் சென்னையில் அதன் கிளையையும் தொடங்கி உள்ளனர்.

    கிளை நிறுவனம் சென்னையில் தொடங்கி சுமார் 100க்கும் மேற்பட்டோருக்கு

    வேலைவாய்ப்பினை வழங்கி வருகிறது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் மின்சார

    மிதிவண்டிகள் ஆஸ்திரேலியாவிற்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இது குறித்து முன்னாள் மாணவர் நித்தீஷ் பேசியதாவது, நாங்கள் இந்த அளவிற்கு வாழ்வில்

    முன்னேற்றம் அடைய மிகவும் உறுதுணையாக இருந்ததது இந்த தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் போது பெற்ற அறிவும், அனுபவமும், பேராசியர்களின் ஊக்கமும் மற்றும் பல்கலைக்கழக வேந்தரின் உந்து சக்தியாலும் தான் எங்களால் வெற்றிபெற முடிந்தது.

    இந்த பாராட்டு நிகழ்ச்சியில் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியின் முதல்வர் இளங்கோவன், தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வேல்முருகன், கல்வி முதன்மையர் அன்பரசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் கணிதம் குறித்த விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவிகள் பங்கேற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் கணித ஆராய்ச்சி துறை, விருதுநகர் மாவட்ட கல்லூரிகளின் கணித ஆசிரியர்களின் கூட்டமைப்பு இணைந்து 'நிஜஉலகில் கணிதம்'என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்ச்சியினை நடத்தியது.

    கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை தாங்கினார். எஸ்.எப்.ஆர். கல்லூரி கணித துறை தலைவர் பெத்தனாட்சி செல்வம் வரவேற்றார். இணை பேராசிரியை மாலினிதேவி அறிமுக உரையாற்றினார்.

    திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவிபேராசிரியர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணித பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் முத்துமாரி நன்றி கூறினார்.

    இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

    • கல்லூரி மாணவி வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.
    • போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    ராஜபாளையம் திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் புலியூர் சித்தன். இவரது 17 வயது மகள் கிருஷ்ணன் கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத் தன்று அவரை மர்ம நபர் ஒருவர் செல்போனில் அழைத்தார். அவரது தந்தைக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக ஊருக்கு வருமாறும் அவர் கூறியுள்ளார்.

    அதனை நம்பிய மாணவி உடனடியாக ஊருக்கு புறப்பட்டார். கல்லூரிக்கு வெளியே வந்து பஸ் ஏறுவதற்காக காட்டன் மார்க்கெட் பகுதிக்கு வந்தார். அப்போது மர்ம நபர்கள் அவரை வழிமறித்து வலுக்கட்டாயமாக கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீஸ் நிலை யத்தில் சித்தன் புகார் செய்தார். அதில், ராஜ பாளையம் தாட்கோ காலனியை சேர்ந்த முத்துப் பாண்டி மகளை கடத்தி யிருக்கலாம் என சந்தே கிப்பதாக அவர் கூறியுள் ளார். போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார்.
    • முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

    மன்னார்குடி:

    மன்னார்குடியில் உள்ள பான் செக்கர்ஸ் கல்லூரியில் கல்லூரி மாணவிகள் மற்றும் பெண்களுக்கான ஐ.ஏ.எஸ் அகாடமி மையம் திறப்பு விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு சென்னை அடைக்கல அன்னை சபையின் தலைவர் மரியபிலோமி தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலு, நகராட்சி தலைவர் மன்னை சோழராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா கலந்து கொண்டு புதிய ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தை தொடங்கி வைத்தார்.

    இதில் தி.மு.க. மாநில செயற்குழு உறுப்பினர் ஞானசேகரன், நகர செயலாளர் வீரா கணேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக கல்லூரி முதல்வர் விக்டோரியா அனைவரையும் வரவேற்றார். முடிவில் ஆசிரியர் அரவாளி நன்றி கூறினார்.

    ×