search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புனித மைக்கேல் கல்லூரி 25-வது ஆண்டு விழா
    X

    புனித மைக்கேல் கல்லூரி 25-வது ஆண்டு விழா

    • காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரி 25-வது ஆண்டு விழா வருகிற 29ந்தேதி நடக்கிறது.
    • கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி உள்ளது. இதன் நிறுவனர் என்ஜினீயர் மைக்கேல் ஆவார். இந்த கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில்கல்லூரி வளாகத்தில் நடைபெறு கிறது.

    இந்த கல்லூரி வெள்ளி விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் , ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பி .கே. அரவிந்த், தொழிலதிபர் எஸ்.மார்ட்டின், மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரியின் தலை வர் எம். ஸ்டாலின் ஆரோக்கியராஜ், ஒருங்கி ணைப்பாளர் பிரிட்ஜெட் நிர்மலா, கல்லூரி முதல்வர் கற்பகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    Next Story
    ×