search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஆண்டுவிழா"

    • காரைக்குடியில் நடந்த அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவுக்கு செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
    • நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் கலந்து கொண்டனர்.

    காரைக்குடி

    அ.தி.மு.க.வின் 52-ம் தொடக்க விழாவை முன் னிட்டு காரைக்குடியில் அ.தி.மு.க.வினர் சிவகங்கை மாவட்ட கழக செயலாளர் செந்தில்நாதன் எம்.எல்.ஏ. தலைமையில் எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணி வித்து, மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றுக் கொண் டனர்.

    இதில் காரைக்குடி நகர செயலாளர் மெய்யப்பன், முன்னாள் எம்.எல்.ஏ. கற்ப கம் இளங்கோ, தேவ கோட்டை நகர்மன்ற தலை வர் சுந்தரலிங்கம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற துணை தலைவர் வெங்களூர் வீரப் பன், அம்மா பேரவை ஊர வயல் ராமு, மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி இணை செயலாளர் சத்குரு தேவன், கோவிலூர் சுப்பிர மணியன், மாவட்ட மகளி ரணி துணை தலைவி சோபியா பிளாரன்ஸ்,

    நகர இளைஞரணி செய லாளர் இயல் தாகூர், மகளிரணி நகர செயலாளர் சுலோச்சனா, நகர தலைவி ஆனந்தி, நகர்மன்ற உறுப்பி னர்கள் பிரகாஷ், குருபாலு, அமுதா சண்முகம், ராதா, கனகவள்ளி, வட்ட கழக செயலாளர்கள் இலைக் கடை சரவணன், மகேஷ், பக்கீர் முகம்மது உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள், மகளிரணியினர் திரளாக கலந்து கொண்டனர்.

    • காளையார்கோவில் புனித மைக்கேல் கல்லூரி 25-வது ஆண்டு விழா வருகிற 29ந்தேதி நடக்கிறது.
    • கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலில் புனித மைக்கேல் பொறியியல் கல்லூரி உள்ளது. இதன் நிறுவனர் என்ஜினீயர் மைக்கேல் ஆவார். இந்த கல்லூரியின் 25-வது ஆண்டு வெள்ளி விழா வருகிற 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 10 மணி அளவில்கல்லூரி வளாகத்தில் நடைபெறு கிறது.

    இந்த கல்லூரி வெள்ளி விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன், வணிகவரி மற்றும் பத்திர பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்று கிறார்கள்.

    நிகழ்ச்சியில் கலெக்டர் ஆஷா அஜித் , ராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி. துரை, சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப் பாளர் பி .கே. அரவிந்த், தொழிலதிபர் எஸ்.மார்ட்டின், மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடு களை கல்லூரியின் தலை வர் எம். ஸ்டாலின் ஆரோக்கியராஜ், ஒருங்கி ணைப்பாளர் பிரிட்ஜெட் நிர்மலா, கல்லூரி முதல்வர் கற்பகம் மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது.
    • பொன்னியின் செல்வன் நாவலை 35 நிமிடங்களில் நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டி அசத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் புண்ணியவதி சாலையில் அமைந்துள்ள கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் ஆண்டு விழா நடைபெற்றது. கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் பள்ளி செயலாளர் நிவேதிகா வரவேற்று பேசினார். சிறப்பு விருந்தினர்களாக திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் கே. செல்வராஜ், திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார், திருப்பூர் மாநகராட்சி 47-வது வார்டு உறுப்பினர் ஜெயசுதா பூபதி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

    அதைத்தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளுடன் கராத்தே, பிரமிட் உள்ளிட்ட சாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

    மேலும் கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் நாவலை 35 நிமிடங்களில் சுவை குறையாத அளவில் நாடகமாக மாணவர்கள் நடித்துக்காட்டி அசத்தினர்.விழாவின் ஒரு நிகழ்வாக கிட்ஸ் கிளப் முதுநிலைப்பள்ளியின் சென்ற கல்வி ஆண்டிற்கான சாதனைகள் காட்சிப்படுத்தப்பட்டன.

    விழாவில் கிட்ஸ் கிளப் பள்ளியின் தலைவர் மோகன் கே.கார்த்திக், பள்ளியின் இயக்குநர் கே.ரமேஷ், நிர்வாக இயக்குநர் ஐஸ்வர்யா நிக்கில், பள்ளியின் முதல்வர் தீபாவதி மற்றும் அனைத்து ஆசிரியர்களும் கலந்துகொண்டு மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்ததோடு அவர்களை பாராட்டினர்.

    • சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இரா.சுரேஷ்குமார் விழாவில் கலந்து கொண்டு சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார்.
    • தலா 3 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் கொடுக்கப்படுகிறது.

    சென்னை:

    பிரபல எழுத்தாளரும், கவிஞருமான ஏர்வாடி எஸ்.ராதாகிருஷ்ணன் நடத்தி வரும் கவிதை உறவு அமைப்பு ஆண்டுதோறும் சிறந்த நூல்கள் எழுதிய எழுத்தாளர்களை தேர்வு செய்து பரிசுகள் வழங்கி வருகிறது.

    கவிதைகள், மனித நேயம், வாழ்வியல், சிறுகதை, நாவல், இலக்கிய கட்டுரைகள், பொது கட்டுரைகள், குழந்தை இலக்கியம், கல்வி, இளைஞர் நலம், ஆளுமை மேம்பாடு, ஆன்மீகம், மத நல்லிணக்கம் உள்பட 10 தலைப்புகளில் சிறந்த புத்தகங்களை தேர்வு செய்து இந்த பரிசு வழங்கப்படுகிறது. இந்த பிரிவுகளில் தலா 3 எழுத்தாளர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் கொடுக்கப்படுகிறது.

    இந்த ஆண்டு 51-வது ஆண்டாக கவிதை உறவு அமைப்பின் ஆண்டுவிழா வருகிற 18-ந்தேதி (வியாழக் கிழமை) தி.நகர் வாணி மகாலில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. விழாவுக்கு தமிழியக்க தலைவர் கோ.விஸ்வநாதன் தலைமை தாங்குகிறார்.

    சென்னை ஐகோர்ட்டு நீதிபதி இரா.சுரேஷ்குமார் விழாவில் கலந்து கொண்டு சிறந்த நூல்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தி பேசுகிறார். முன்னதாக விழா மலரை தொழில் அதிபர் நல்லிகுப்புசாமி வெளியிட தொழில் அதிபர் வி.ஜி.சந்தோசம் பெற்றுக் கொள்கிறார்.

    'யாவரும் கேளிர்' என்ற நூலை டாக்டர் ஜெயராஜ மூர்த்தி வெளியிட எவர்வின் பள்ளிகள் நிறுவன தலைவர் புருஷோத்தமன் பெற்றுக் கொள்கிறார். வண்ணமில்லாமல் என்ன வானவில் என்ற நூலை தமிழ் வளர்ச்சி துறை இயக்குனர் அருள் வெளியிட சாந்தகுமாரி சிவகடாட்சம் பெற்றுக் கொள்கிறார்.

    விழாவில் சிறந்த நூல்கள் எழுதிய 29 எழுத் தாளர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது. ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி இரா.பூரணலிங்கம், புலவர் த.ராமலிங்கம், சோம.வள்ளியப்பன், ரேவதி, தாமரை செந்தூர் பாண்டியன் ஆகியோர் இந்த ஆண்டு பரிசுகள் பெறுபவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

    ஆரூர் தமிழ்நாடன், எஸ்.விஜயகிருஷ்ணன், சு.மதியழகன், தங்கம் மூர்த்தி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகிறார்கள். கவிஞர் ஏர்வாடி ராதா கிருஷ்ணன் ஏற்புரை வழங்குகிறார். இறுதியில் வானதி ராமநாதன் நன்றியுரை கூறுகிறார்.

    • ம.தி.மு.க. 30-வது ஆண்டு தொடக்க விழா நடந்தது.
    • பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ம.தி.மு.க. ஒன்றியம் சார்பில் கட்சியின் 30-வது ஆண்டு தொடக்க நடந்தது. பஸ் நிலையம் முன்பு பொங்கல் வைத்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

    தெற்கு ஒன்றிய செயலாளர் கதிர்வேல் தலைமை தாங்கினார். வடக்கு ஒன்றிய செயலாளர் நாகபாண்டி, பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட பிரதிநிதிகள் பொன்ராஜ், திம்மநாதபுரம் வெயில்முத்து, மாயக் கண்ணன், நகரச் செயலாளர்முத்துப்பாண்டி, ஒன்றிய துணைச் செயலாளர்கள் புதுக்குளம் போஸ், வழிவிட்டான், தேனிச்சாமி, சாந்தி நாகராஜ், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர்கள் முருகன், பெருமாள், கிருஷ்ணன், கிளைச் செயலாளர்கள் சின்ன முனியாண்டி மோகன் குமார், ராமமூர்த்தி ஜெகன், அய்யரப்பன், கிளாமரம் கிருஷ்ணன், சேதுராஜபுரம் மாரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அறந்தாங்கி நகராட்சி பள்ளியில் ஆண்டுவிழா நடைபெற்றது
    • இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    அறந்தாங்கி:

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சி தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியர் ரேணுகா ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர்மன்றத் தலைவர் ஆனந்த் தலைமை வகித்து விழாவை தொடங்கி வைத்தார். இதில் மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சிகள், திருக்குறள் ஒப்புவித்தல், பழமொழி, கவிதை வாசித்தல் போன்ற நிகழ்வுகள் நடைபெற்றது.

    இறுதியில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் நகர்மன்றத் துணை தலைவர் முத்து, வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், அன்பழகன், நிஸார், வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) ஸ்ரீதேவி, நகர்மன்ற உறுப்பினர்கள் விஸ்வமூர்த்தி, மங்கையர்கரசி, அசாருதீன், இடைநிலை ஆசிரியர் நிர்மல்சகில்தா உள்ளிட்ட ஆசிரியர்கள் அலுவலர்கள், மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர்.


    • சோழவந்தானில் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • கலைநிகழ்ச்சிகள் நடந்தது.

    சோழவந்தான

    சோழவந்தான்-வாடிப்பட்டி ரோட்டில் உள்ள எம்.வி.எம். கலைவாணி மெட்ரிக் பள்ளியின் ஆண்டு விழா தாளாளர் டாக்டர். மருதுபாண்டியன் தலைமையில் நடந்தது. எம்.வி.எம் குழும சேர்மன் மணி முத்தையா முன்னிலை வகித்தார்.

    பள்ளி நிர்வாகி எம்.வி. எம்.வள்ளிமயில் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். மாவட்ட நீதிபதி ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முதல்வர் செல்வம் வரவேற்றார். ஆண்டு விழாவையொட்டி நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    கலை நிகழ்ச்சிகள், கராத்தே, சிலம்பம், யோகா நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    • ராஜபாளையம் அருகே ஸ்ரீராம் மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே முறம்பில் உள்ள ஸ்ரீராம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளியின் 34-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் ராம்கோ சிமெண்ட் துணை மேலாளர் முத்துக்குமார், சத்யா வித்யாலயா பள்ளி குழுமங்களின் தாளாளர் குமரேசன், எல்.ஐ.சி. கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். டாக்டர் பிரியதர்ஷினி முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் கவுசல்யா வரவேற்று பேசினார்.

    விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல் மற்றும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. எல். கே.ஜி., யு.கே.ஜி. பயிலும் அரும்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரது மனதையும் கவர்ந்தது. முடிவில் சித்ராதேவி நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராமராஜ், பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    • விழாவிற்கு கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கினார்.
    • நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    வள்ளியூர்:

    வள்ளியூர் மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதலாம் ஆண்டுவிழா நடைபெற்றது. ரஞ்சிதம் வரவேற்று பேசினர். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் ஓராண்டு கால கல்லூரி பணிகளை அறிக்கையாக சமர்ப்பித்தார். கல்லூரியின் நிறுவனத் தலைவர் டி.டி.என்.லாரன்ஸ் தலைமை தாங்கி பேசுகையில், தனது கனவு கல்லூரியான மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உருவாகிய நினைவலைகளை பகிர்ந்து கொண்டார். கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் முன்னிலை வகித்தார். ஆண்டுவிழா நிகழ்ச்சியை வடிவமைத்த முதல்வர், பேராசிரியர்கள், அலுவலக பணியாளர்கள் மற்றும் மாணவிகளையும் பாராட்டினார் .

    விழாவில் நேரு நர்சிங் கல்லூரியின் முதல்வர் மார்கரெட் ரஞ்சிதம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

    அவர் தனது சிறப்புரையில், மாணவிகள் எதையும் மற்றவர்களைப் பார்த்து செய்யாமல் ஒரு தனித்துவமான படைப்பாற்றல் சிந்தனையுடன் இக்கல்லூரி மாணவிகளை போல செயல்பட வேண்டும் என்றார்.

    பின்னர் கல்லூரியின் இணையதளத்தை (www.mascedu.org) நிறுவனத் தலைவர் லாரன்ஸ் மாணவி களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார்.

    தமிழ்த்துறை உதவி பேராசிரியர் யா. லலிதா எழுதிய "கைக்கு எட்டும் தூரத்தில் மருத்துவம்" என்னும் நூலை கல்லூரி தாளாளர் ஹெலன் லாரன்ஸ் வெளியிட ,கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பெற்றுக் கொண்டார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    நிகழ்ச்சியில் பேராசிரியர்கள், அலுவலகப் பணியார்கள் மற்றும் மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் நடராஜன் தலைமை தாங்கினார்.
    • ஆடிட்டர் மணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பேசினார்.

    ஓசூர்,  

    ஓசூர்- டி.வி.எஸ் சாலையில், கொத்தூரில் அகஸ்தியா வித்யா மந்திர் சி.பி.எஸ்.இ பள்ளியில் ஆண்டுவிழா, நடைபெற்றது.

    விழாவிற்கு, பள்ளியின் தாளாளர் நடராஜன் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் உத்திரியம்மாள், ஆண்டறிக்கை வாசித்தார்.

    விழாவில், ஓசூர் அதியமான் பொறியியல் கல்லூரி முதல்வர் ரங்கநாத், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    மேலும், ஆடிட்டர் மணி முதன்மை விருந்தினராக கலந்து கொண்டு விழாவில் பேசினார்.

    இதில், ,துணைத் தாளாளர் சிவானந்தா, பள்ளி செயற்குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியம் மற்றும் ஓசூர் மகரிஷி வித்யா மந்திர் பள்ளியின் செயலா ளர்களான லோகநாதன், வெங்கடரமணா குருகுலம் பள்ளித் தாளாளர், பள்ளி முதல்வர் மற்றும் பல துறையினைச் சேர்ந்த சிறப்பு அழைப்பாளர்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர்கள், பள்ளி ஆசிரியர்கள் , அலுவலகப் பணியாளர்களும் இந்த விழாவில் கலந்து கொண்டனர். மேலும் விழாவையொட்டி, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    • சாயல்குடி அருகே மெட்ரிக் பள்ளி ஆண்டுவிழா நடந்தது.
    • விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள மலட்டாறு விலக்கு ரோடு பகுதியில் உள்ள வி.வி.எஸ்.எம்.நேஷனல் அகாடமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 13-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளியின் நிறுவனரும், முன்னாள் அமைச்சருமான சத்தியமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் வேலுச்சாமி, சாயல்குடி முன்னாள் பேரூராட்சி தலைவர் முகம்மது ஜின்னா முன்னிலை வகித்தனர். தாளாளர் சந்திரா சத்தியமூர்த்தி வரவேற்றார். முதல்வர் அங்காள ஈஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். கே.ஜி. முதல் பிளஸ்-2 வரை அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ-மாணவிகள் ஒவ்வொரு வகுப்பிலும் 3 பேருக்கு சிறப்பு பரிசுகளை சாயல்குடி ஜமீன்தார் சிவஞானபாண்டியன் வழங்கினார். மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஆசிரியர்கள் பாலமுருகன், சத்தியதேவி ஆகியோர் ஒருங்கிணைத்தனர். விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள் பங்கேற்றனர்.

    • எம்.கே.ஆர். அய்யநாடார் ஜெயலட்சுமி அம்மாள் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை

    பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் எம்.கே.ஆர்.அய்ய நாடார் ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கில பள்ளியின்

    23-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளிதலைவர்ஜெமினிஎஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். விழாவிற்கு வந்த வாழ்த்து செய்திகளை துணைத்தலைவர் எம். எஸ்.சோமசுந்தரம் வாசித்தார்.

    பொருளாளர் டி.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் ஆர்.கவுதமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில் பள்ளி புரவலர் ஜெயலட்சுமி அம்மாள், தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கியின் சிந்தாமணி கிளை மேலாளர் ஆர்.கண்ணன், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், இணைசெயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் கே.ஆனந்த் மற்றும் ஆட்சி அவை உறுப்பினர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் எச்.ஆயிஷா நன்றி கூறினார்.

    ×