search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எம்.கே.ஆர். அய்யநாடார் ஜெயலட்சுமி அம்மாள் பள்ளி ஆண்டு விழா
    X

    எம்.கே.ஆர். அய்யநாடார் ஜெயலட்சுமி அம்மாள் பள்ளி ஆண்டு விழா

    • எம்.கே.ஆர். அய்யநாடார் ஜெயலட்சுமி அம்மாள் பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

    மதுரை

    பாரத பெருந்தலைவர் காமராஜர் அறநிலையம் எம்.கே.ஆர்.அய்ய நாடார் ஜெயலட்சுமி அம்மாள் ஆங்கில பள்ளியின்

    23-வது ஆண்டு விழா நடந்தது. பள்ளிதலைவர்ஜெமினிஎஸ்.பால்பாண்டியன் தலைமை தாங்கினார். செயலாளர் கே.பி.எம்.எம்.காசிமணி வரவேற்றார். விழாவிற்கு வந்த வாழ்த்து செய்திகளை துணைத்தலைவர் எம். எஸ்.சோமசுந்தரம் வாசித்தார்.

    பொருளாளர் டி.பாலசுப்பிரமணியன் சிறப்பு விருந்தினர்களை கவுரவித்தார். மதுரை நாடார் உறவின்முறை பொதுச்செயலாளர் எஸ்.கே.மோகன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் மதுரை மண்டல மேலாளர் ஆர்.கவுதமன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    விழாவில் பள்ளி புரவலர் ஜெயலட்சுமி அம்மாள், தமிழ்நாடு மெர்க் கன்டைல் வங்கியின் சிந்தாமணி கிளை மேலாளர் ஆர்.கண்ணன், ஜெயராஜ் நாடார் மேல்நிலைப்பள்ளி தலைவர் பி.தர்மராஜ், இணைசெயலாளர் சி.பாஸ்கரன், விடுதிக்குழு செயலாளர் பா.குமார், ஜெயராஜ் அன்ன பாக்கியம் மெட்ரிக்குலேசன் பள்ளி செயலாளர் கே.ஆனந்த் மற்றும் ஆட்சி அவை உறுப்பினர்கள், பெற் றோர்கள் கலந்து கொண்டனர்.

    பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. முதல்வர் எச்.ஆயிஷா நன்றி கூறினார்.

    Next Story
    ×