search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா
    X

    மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா

    • ராஜபாளையம் அருகே ஸ்ரீராம் மழலையர் தொடக்கப்பள்ளி ஆண்டு விழா நடந்தது.
    • மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே முறம்பில் உள்ள ஸ்ரீராம் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் பள்ளியின் 34-வது ஆண்டு விழா மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    விழாவில் ராம்கோ சிமெண்ட் துணை மேலாளர் முத்துக்குமார், சத்யா வித்யாலயா பள்ளி குழுமங்களின் தாளாளர் குமரேசன், எல்.ஐ.சி. கமலக்கண்ணன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினர். டாக்டர் பிரியதர்ஷினி முத்துக்குமார் ஆண்டறிக்கை வாசித்தார். ஆசிரியர் கவுசல்யா வரவேற்று பேசினார்.

    விளையாட்டு போட்டியில் ஓட்டப்பந்தயம், பலூன் ஊதுதல் மற்றும் பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. எல். கே.ஜி., யு.கே.ஜி. பயிலும் அரும்பு மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் அனைவரது மனதையும் கவர்ந்தது. முடிவில் சித்ராதேவி நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் ராமராஜ், பெற்றோர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அனைத்து ஆசிரியர்களும் செய்திருந்தனர்.

    Next Story
    ×