search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்
    X

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம்

    • ராமநாதபுரம் செய்யது அம்மாள் கல்லூரி சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.
    • கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் அருகே யுள்ள செய்யது அம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நாட்டு நலப்ப ணித்திட்டம், யூத் ரெட் கிராஸ் மற்றும் செஞ்சுருள் சங்கம் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது. முகா மிற்கு கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    கல்லூரி தாளாளர் செல் லதுரை அப்துல்லா, ராமநாதபுரம் செய்யது அம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தாளாளர் ராஜாத்தி அப் துல்லா ஆகியோர் ரத்த தானம் வழங்கிய கொடையா ளர்களை பாராட்டினர்.

    இதில் விலங்கியல் துறை தலைவர் தயாளன், உதவி பேராசிரியர் முருகானந்தம், வட்டார மருத்துவ அலுவலர் ஜன்னத்து யாஸ்மின், மருத் துவ அலுவலர் நிலோபர் நிஷா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் வீரபெருமாள், சுகாதார ஆய் வாளர்கள் இளங்கோ–வன், நம்பிக்கை மைய ஆலோசகர் பாலமுருகன், நடமாடும் மருத்துவ குழுவினர் ராமநா–தபுரம் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழு வினர் கலந்துகொண்டனர்.

    இதில் 44 மாணவர்கள் கலந்துகொண்டு ரத்த தானம் வழங்கினர். நிகழ்ச் சியை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் வள்ளிநாய கம், ராஜமகேந்திரன், சேக் அயாஸ் அகமது மற்றும் செஞ்சுருள் சங்க திட்ட அலுவலர்கள், ஒருங்கி ணைப்பாளர்கள் ஒருங்கி ணைத்து நடத்தினர். இதற் கான ஏற்பாடுகளை கல் லூரி நிர்வாக அலுவலர் சாகுல் ஹமீது, மேற்பார்வை யாளர் சபியுல்லா ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×