search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிலரங்கம்"

    • தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது.
    • அனைவரையும் ஈர்க்கக்கூடியது தமிழ்மொழி என கலெக்டர் பேசினார்.

    சிவகங்கை

    சிவகங்கை மன்னர் துரை சிங்கம் அரசு கலைக்கல்லூ ரியில் தமிழ் வளர்ச்சித்துறை யின் மூலம் ஆட்சிமொழி பயிலரங்கம் மற்றும் கருத்த ரங்கம் நிகழ்ச்சி 2 நாட்கள் நடைபெற்றது. இதில் கலெக்டர் ஆஷா அஜித் தலைமை தாங்கி பேசியதா வது:-

    நமது தாய் மொழியான தமிழ் மொழிக்கு தனிச்சிறப்பு உள்ளது. உலக மொழிகளில் எளிமையாக கற்றுக் கொள்ளும் வகையிலும், சிறப்பு வாய்ந்த மொழி யாகவும் தமிழ் மொழி திகழ்கிறது. தமிழ் மொழிக ளிலுள்ள வார்த்தைகளின் அர்த்தங்களை எளிதில் உணர்ந்து, அனைவரையும் ஈர்க்கக்கூடிய வகையிலும் ரசிக்கத்தக்க வகையிலும் உள்ளது. பல்வேறு காலச்சூழ் நிலையில் மாற்று மொழிக ளின் பயன்பாடுகள் அத்தி யாவசியம் அதிகரித்து வந்தாலும், தாய்மொழி பயன்பாட்டை தவிர்க்கக்கூடாது.

    தாய்நாட்டில் முழுமையாக பேச்சு முதல் கோப்புகள் பராமரிப்பு வரை தமிழ் மொழியை பின்பற்றி பாதுகாப்பதுடன், வருங்காலச் சந்ததியினருக்கு நீங்கள் ஒரு முன்மாதிரியாக திகழ்ந்திட வேண்டும். இதனை கருத்தில் கொண்டு அரசின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது

    தாய்மொழியை காப்பதும் அதன் மூலம் அலுவலக செயல்பாடுகளை செயல்படுத்துவதும் என ஒவ்வொன்றையும் முழுமையாக பின்பற்றி அனைவரும் தமிழ்மொழியை பாதுகாத்திட வேண்டும்

    இவ்வாறு அவர் பேசினார்.

    தொடர்ந்து ஜவகர்லால் நேரு பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவில் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி-கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு கலெக்டர் ஆஷா அஜித் பரிசுகள் வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் நாகராசன், மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முதல்வர் துரையரசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சண்முக சுந்தரம், தொழிலாளர் உதவி ஆணையர் கோட்டீஸ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பெரம்பலூரில் உயர்கல்வி வழிகாட்டல் பயிலரங்கம் நடைபெற்றது
    • பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    பெரம்பலூர்,

    பெரம்பலூர் பள்ளி கல்விதுறை சார்பில் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் உயர்கல்வி வழிகாட்டல் குறித்து ஒருநாள் பயிலரங்கம் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

    பயிலரங்கிற்கு ரோவர் கல்வி நிறுவனங்களின் மேலாண் தலைவர் வரதராஜன் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவித் திட்ட அலுவலர் ஜெய்சங்கர் ( இடைநிலை), உதவித் திட்ட அலுவலர் ரமேஷ் (தொடக்கநிலை) ஆகியோர் முன்னிலை வகித்து தொடங்கி வைத்தனர். மாதிரிப் பள்ளிகள் மண்டல ஒருங்கிணைப்பாளர் ராசபாண்டியன் சிறப்புரையாற்றினார். கனகராஜ், கார்த்திக், அனன்சியா ஆகியோர் கருத்தாளராக கலந்துகொண்டு ஜே.இ.இ, நீட், கிளாட் போன்ற நுழைவுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், பங்கேற்றல் மற்றும் உயர் கல்வி குறித்த பல்வேறு கருத்துக்களை எடுத்துரைத்தனர்.

    இதில் ரோவர் பள்ளி தலைமையாசிரியர் செல்வராஜ், வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி, உயர்கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மகாதேவன், உள்ளடங்கிய கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிதாசன், ஆசிரியர் பயிற்றுநர் கீர்த்தனா மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 12-ம் வகுப்பு பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார்.
    • ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.

    கருங்கல்:

    கருங்கல் அருகே உள்ள சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை மாணவ, மாணவிகளின் ஆளுமைத்திறன்களை வளர்த்திடும் பொருட்டு ஐக்யூஎசி சார்பாக ஆளுமைத்திறன் வளர் பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆரோக்கியசாமி, வளாக வழிகாட்டி அஜின் ஜோஸ், துணை முதல்வர் சிவனேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    பயிலரங்கில் சிறப்பு விருந்தினராக நாஞ்சில் கல்வி குழுமங்களின் நிறுவனர் ஜோஸ் ராபின்சன் கலந்துகொண்டார். இயல்பிலேயே இருக்கும் தங்கள் திறமைகளை மாணவர்கள் எவ்வாறு அடையாளம் கண்டு கொள்வது, கண்டு கொண்ட திறமைகளை எவ்வாறு வளர்த்துக்கொள்வது, தங்கள் திறன்களை வளர்த்து கொள்ளும் முறைகள், பயிற்சி, தேடல் குறித்தும், மாறி வரும் சமூகத்தில் வேலை வாய்ப்பிற்கு அத்திறன்கள் எவ்வாறு பயன்படும் என்பது குறித்தும், பயிற்சி அளித்தார். இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி ஐக்யூஎசி அங்கத்தினர் செய்திருந்தனர்.

    • மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது
    • மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம்

    நாகர்கோவில் : கருங்கல் சூசைபுரம் புனித அல்போன்சா கலை மற்றும் அறிவியல் கல்லுரியின் வணிகவியல் துறை சார்பில் வணிகவியல் மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடைபெற்றது. இளையோர் திறன் மேம்பாட்டு என்ற தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்கில் கல்லூரி தாளாளர் மற்றும் செயலர் ஆன்றனி ஜோஸ் தலைமை உரையாற்றினார்.

    கல்லூரி முதல்வர் மைக்கேல் ஆேராக்கியசாமி வாழத்துரை வழங்கினார். துைண முதல்வர் சிவனேசன் சிறப்பு விருந்தினராக அறிமுகம் செய்து வைத்தார். இதில் சிறப்பு விருந்தினராக சென்னை லயோலா கல்லூரி வணிக வியல் துறை பேராசிரியர் மதன்குமார் கலந்து கொண்டு மாணவர்கள் தங்கள் திறமைகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்து விளக்கி பேசி, பயிற்சி குறிப்பேடுகளை வழங்கி பயிற்சி அளித்தார். இதில் வணிகவியல் துறை மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை வணிகவியல் துறை பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒருங்கிணைந்து நடத்தினர்.

    • கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.
    • குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் மாணவர் குறைதீர் மன்றம் மற்றும் கேலிவதை தடுப்பு குழு சார்பில் பெண்மொழி படைப்புத்திறன் பயிலரங்கம் நடந்தது.

    கல்லுாரி முதல்வர் ஜான்பீட்டர் தலைமை வகித்து பேசும்போது, பெண்களுடைய உணர்வு களை அவர்கள் பதிவு செய்யும் போதுதான் ஒரு படைப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்றார்.

    எழுத்தாளர் சசிகுமார், கவிஞர் ஜெயந்தி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.

    குறும்பட இயக்குனர் செந்தில்ராம் கதையை குறும்படம் ஆக்குவது குறித்து பேசினார்.

    மாணவி யோகப்பிரியா, உதவி பேராசிரியை தங்கமதி, விடுதி காப்பாளர் மெகருனி சாபேகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ஒருங்கிணைப்பாளர் இந்திரா காந்தி, இணை ஒருங்கிணைப்பாளர் சுஜித்ரா மற்றும் குழுவினர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
    • இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார்.

    மதுரை

    மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, மதுரை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை சுய நிதிப் பிரிவில் "ஆய்வு வடிவமைப்பு" என்னும் தலைப்பில் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம்" நடந்தது. அமெரிக்கன் கல்லூரி இணைப் பேரா சிரியர் டாக்டர். சாமுவேல் அன்புச் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டு 3-ம் ஆண்டு இளங்கலை மற்றும் முது கலை மாணவர்களுக்கு ஒரு குறிப்பிட்ட முறையை பயன்படுத்தி எப்படி ஆராய்ச்சி நடத்துவது என்பது பற்றிய நுண்ணறிவு குறித்து விளக்கினார். மேலும் ஆராய்ச்சி எவ்வாறு நடத்தப்பட வேண்டும் என்பதற்கான வடிவ மைப்பு, அறிக்கை எழுதுதல், நூல் பட்டியல் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். கல்லூரித் தலைவர் ராஜகோபால், செயலாளர் விஜயராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் டாக்டர்.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குனர் பிரபு ஆகியோர் வாழ்த்தினர். மாணவர் கார்த்திக் வரவேற்றார். மாணவர் சம்யுக்தா நன்றி கூறினார்.

    இதற்கான ஏற்பாடுகளை வணிகவியல் கணினி பயன்பாட்டுத் துறை தலைவர் செய்திருந்தார். உதவிப் பேராசிரியர்கள் ராஜாமணி, பாரதி, தினேஷ் குமார் ஆகியோர் விழாவினை ஒருங்கிணைத்தனர்.

    • கல்லூரிச் செயலரும், சமூக பணித்துறைத் தலைவரு மான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார்.
    • நல்வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.

    தருமபுரி,  

    தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில் சமூக பணித்துறை சார்பில் சமூகப்பணி மேற்கொள்ப வர்களுக்கான சி.பி.ஆர். முதலுதவித்திறன் மேம்பாடு குறித்த பயிலரங்கம் நடை பெற்றது.  இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூக பணித்துறைத் தலைவரு மான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். முதல் வர் ஆஞ்ச லோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

    இப்பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக சமூக பணித்துறை உதவி பேராசிரியை ஜெமி பிளஸ்சி கலந்து கொண்டு, இருதய சிகிச்சை நோயாளி களுக்கு அவசர காலத்தில் வழங்கப்படும் சி.பி.ஆர். முதலுதவி பயிற்சி மற்றும் நல்வாழ்விற்குத் தேவையான அடிப்படை வாழ்வியல் முறைகள் போன்றவற்றை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.

    இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொரு ளாளர் அந்தோணி பாப்பு ராஜ், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் சமூகப்பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஜோனிபால் கிருபாகரன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

    சமூகப்பணி மேற்கொள் ளும் அனைவருக்கும், அவசர காலத்தில் நோயாளிகளுக்கு வழங்கப் படும் முதலுதவி மற்றும் அடிப்படை நல்வாழ்வு முறைகள் போன்றவற்றை உணர்த்தும் விதமாக அமைந்த இந்நிகழ்வுக் கான ஏற்பாடுகளை துறை பேரா சிரியர்கள் செய்திருந்தனர்.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
    • இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதிப் பிரிவு) வணிகவியல், கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் "தொழில்முனைவோருக்கான வணிக வாய்ப்புகள்" என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது. பாத்திமா கல்லூரி முதுகலை வணிக மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியை சுகன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான வணிக வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் தொழில் முனைவோருக்கான தகுதிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். செயலாளர் விஜயராகவன் பேசினார். முதல்வர் ராமசுப்பையா, வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவி சுஜிதா பாலா வரவேற்றார். துறைத் தலைவி நாகசுவாதி விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவிப் பேராசிரியைகள் மஞ்சுளா மற்றும் பாபி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவி ஷானு நன்றி கூறினார்.

    • புதுக்கோட்டை மௌண்ட் சீயோன் கல்லூரியில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப பயிலரங்கம் தொடங்கியது
    • 5 நாட்கள் பயிலரங்கம் நடைபெறுகிறது

    புதுக்கோட்டை,

    புதுக்கோட்டை மெளண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை மற்றும் ஐசிடிஏசிடி அகாடமி இணைந்து நடத்தும் 5 நாட்கள் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பப் பயிலரங்கம் நடைபெற்றது.கல்லூரி இயக்குனர்ஜெய்சன்கீர்த்தி ஜெயபரதன் வழிகாட்டுதலின் படிதுவங்கிய இப்பயிலரங்க துவக்க விழாவில், கல்லூரி முதல்வர்பாலமுருகன் தலைமையேற்று பயிலரங்கை துவக்கி வைத்தார். கணினி அறிவியல் துறை தலைவர்இளவரசி வரவேற்புரை நிகழ்த்தினார்.ஐசிடிஏசிடி அகாடமியின் முதன்மை தொழில் நுட்பபயிற்றுனர் ராகவேந்திரசாமி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்வில் கல்லூரி டீன் ராபின்சன் மற்றும் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.இப்பயிலரங்கில் மைக்ரோசாப்ட் அஸுர்-ஏஐ-ன் பயன்பாடு குறித்து முழுமையாக விளக்கப்பட உள்ளது. மேலும்ஐசிடிஏசிடி அகாடமியின் திருச்சி மண்டல ஒருங்கிணைப்பாளர் .காளிராஜ் உதவிப் பேராசிரியர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் உதவிப் பேராசிரியர் சசிகலா நன்றியுரை கூறினார்.

    • குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மண்டல பயிலரங்கம் நாளை நடக்கிறது.
    • காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

    மதுரை

    மதுரை தொழிலாளர் துறை இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    குழந்தை மற்றும் வளரிளம் பருவ தொழிலாளர்கள் (தடுத்தல் மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1986-ன் கீழ் குழந்தை தொழிலாளர் முறையினை அகற்றுவதற்கான மாநில செயல் திட்டத்தினை செயல் படுத்துதல் தொடர்பாக ஒருநாள் பயிலரங்கம் நாளை 30-ந்தேதி மதுரை தங்கம் கிராண்ட் ஓட்டலில் நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் தலைமை வகிக்கிறார். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பயி லரங்கம் நடைபெறும். இந்தப் பயிலரங்கத்தில் மதுரை மற்றும் திருநெல் வேலி மண்டலத்தில் உள்ள அனைத்து தொழிலாளர் உதவி ஆணையர்கள் (அம லாக்கம்) மற்றும் மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள பிறதுறைகளான தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி இயக்குனரகம், ஊரக மேம்பாடு, காவல் துறை, சமூகநலத்துறை, கல்வித்துறை, வருவாய் துறை, சமூக பாதுகாப்பு துறை, என்.ஜி.ஓ.க்கள் மற்றும் இதர அமைப்புகளை சார்ந்த அலுவலர்களும் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ராஜரத்தினம் கல்லூரியில் பயிலரங்கம் நடந்தது.
    • மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.

    சிவகாசி

    சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையினர், ''பதின்ம வயதினருக்கான இடர்பாடுகளும் தீர்வுகளும்'' என்ற தலைப்பில் பயிலரங்கத்தை நடத்தினர். கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணா அசோக் ஆகியோர் நிகழ்வின் புரவலர்களாக வழி நடத்தினர். முதல்வர் பழனீசுவரி தலைமை தாங்கினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி வரவேற்றார்.

    தமிழ்த்துறைப்பேராசிரியர் கவிதா, முதல் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை ஐகோர்ட்டு வக்கீல் முனியம்மாளை அறிமுகப்படுத்தினார். அவர் ''மகளிருக்கான சட்டங்கள்'' என்ற தலைப்பில் பேசினார்.

    தமிழ்த்துறைப்பே ராசிரியர் பத்மபிரியா, 2-ம் அமர்விற்கான சிறப்பு விருந்தினர் மதுரை காமராஜர் பல்கலைக்கழக தொலைதூர கல்வி இயக்குநரக வணிக மேலாண்மைத்துறை உதவிப்பேராசிரியர் இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். அவர் ''உள்ளங்கையில் வாழ்க்கை'' என்ற தலைப்பில் பேசினார். 3-ம் அமர்வில் சிவகாசி, ஹனுமந்தா அக்குபஞ்சர் மற்றும் இயற்கை மருத்துவர் பைரவனை தமிழ்த்துறைப்பேராசிரியர் தனலட்சுமி அறிமுகப்ப டுத்தினார்.

    அவர் "உடல்நலமும் மனநலமும்'' என்ற தலைப்பில் பேசினார். தமிழ்த்துறைத் தலைவர் பொன்னி நன்றி கூறினார். இதில் முதுகலை மற்றும் தமிழாய்வுத் துறையைச் சேர்ந்த 17 பேராசிரியர்கள், அனைத்துத்துறையைச் சேர்ந்த மாணவிகள் 184 பேர் கலந்து கொண்டு பயனடைத்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் ஆசிரியர் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
    • இந்த பயிலரங்கில் 140 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் உள்தர உத்தரவாத அமைப்பின் சார்பில் சிறந்த கற்பித்த லுக்கான பயிலரங்கம் நடந்தது. முதல்வர் பாலமுருகன் தலைமையு தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார்.

    ஈரோடு கொங்கு பொறியியல் கல்லூரியின் மேலாண்மை துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். அவர் பேசுகையில், "மாணவர்களுக்கு பிடித்த வகையில் கற்பிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மாணவர்களுக்கு நனவு மனம், நனவிலி மனம் ஆகிய 2 வகையான மனநிலை உள்ளது. எதிர்மறையாக பேசக்கூடிய வார்த்தைகள் அவர்களது நனவிலி மனதில் பதிவாகி சிந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே மாணவர்களிடம் பேசும் போது நேர்மறையான வார்த்தைகளை பேச வேண்டும். வகுப்பில் சுற்றுச்சூழல் சார்ந்த நடப்பியல் நிகழ்வு களை சான்று காட்டி கற்பிக்க வேண்டும். பாடத்தைத் திணிக்காமல் அவர்களாகவே விரும்பிப் படிக்கும் அளவுக்கு கற்பிக்க வேண்டும். கற்பித்தல் ஒரு கலை ஆகும். வாழ்க்கை முழுவதும் கற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்றார்.

    உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கி ணைப்பாளரும், கணினி அறிவியல் துறைத் தலை வருமான பிரியா வரவேற்றார்.

    உயிரித்தொழில் நுட்ப வியல் மற்றும் தாவரவியல் துறைகளின் தலைவர் சுஜாதா நன்றி கூறினார். இந்த பயிலரங்கில் 140 பேராசிரியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

    ×