search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தலக்குளம் பி.எஸ்.சி. நர்சிங் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்
    X

    தலக்குளம் பி.எஸ்.சி. நர்சிங் கல்லூரியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

    • சாலையில் விபத்து நடந்தால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது
    • அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும்

    குளச்சல் :

    தலக்குளம் புதுவிளை பி.எஸ்.மூளை நரம்பியல் மருத்துவமனை மற்றும் நர்சிங் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு குளச்சல் போக்குவரத்து போலீசார் சார்பில் கல்லூரி கூட்ட அரங்கில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து குளச்சல் போக்குவரத்து போலீஸ் ஆய்வாளர் வில்லியம் பென்ஜமின் கலந்துகொண்டு சாலைகளில் விபத்துக்களை எப்படி தடுப்பது, சாலையில் விபத்து நடந்தால் உயிர்களை எப்படி காப்பாற்றுவது, அனைவரும் கண்டிப்பாக தலைகவசம் அணியவேண்டும் என்றும் சாலை ஓரங்களில் வைத்திருக்கும் பதாகைகளில் இருக்கும் வரைபடங்கள், சாலையின் மீது போடப்பட்டிருக்கும்.

    மஞ்சள், வெள்ளை கோடுகள் குறித்தும் காணொலி காட்சி மூலம் விளக்கி பேசினார். இதில் டாக்டர்கள் ஆறுமுகம், சரோஜினி, சுனிதா, ஜூலியா, சப்-இன்ஸ்பெக்டர் குருநாதன், சிதம்பரதாணு, சுரேஷ்குமார் மற்றும் கல்லூரி முதல்வர் அமுது, துணை முதல்வர் ஜோஸ்மின், முருகன், பழனியாண்டி, திலீப் மற்றும் ஆசிரியர்கள், மருத்துவமனை ஊழியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×