என் மலர்
உள்ளூர் செய்திகள்

கணிதம் குறித்த விரிவுரை நிகழ்ச்சி
- ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் கணிதம் குறித்த விரிவுரை நிகழ்ச்சி நடந்தது.
- மாணவிகள் பங்கேற்றனர்.
சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரியின் முதுகலை மற்றும் கணித ஆராய்ச்சி துறை, விருதுநகர் மாவட்ட கல்லூரிகளின் கணித ஆசிரியர்களின் கூட்டமைப்பு இணைந்து 'நிஜஉலகில் கணிதம்'என்ற தலைப்பில் விரிவுரை நிகழ்ச்சியினை நடத்தியது.
கல்லூரி முதல்வர் சுதா பெரியதாய் தலைமை தாங்கினார். எஸ்.எப்.ஆர். கல்லூரி கணித துறை தலைவர் பெத்தனாட்சி செல்வம் வரவேற்றார். இணை பேராசிரியை மாலினிதேவி அறிமுக உரையாற்றினார்.
திருவாரூர் மத்திய பல்கலைக்கழக உதவிபேராசிரியர் சந்திர சேகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கணித பயன்பாடு, முக்கியத்துவம் குறித்து பேசினார். உதவி பேராசிரியர் முத்துமாரி நன்றி கூறினார்.
இதில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
Next Story






