search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அருள் ஆனந்தர் கல்லூரியில் ரத்ததானம்-உறுப்புதான முகாம்
    X

    ரத்ததான முகாம் நடந்தபோது எடுத்த படம். 

    அருள் ஆனந்தர் கல்லூரியில் ரத்ததானம்-உறுப்புதான முகாம்

    • அருள் ஆனந்தர் கல்லூரியில் ரத்ததானம்-உறுப்புதான முகாம் நடந்தது.
    • ரத்ததான சேவைக்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்டம் கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியின் ரத்ததான சேவை இயக்கத்தின் பொன் விழாவை (1973- 2023) முன்னிட்டு 50 ஆண்டு கால ரத்ததான சேவையை நினைவுகூறும் வகையில், மெகா ரத்ததானம் மற்றும் உடல் உறுப்பு தான முகாம் கல்லூரியில் நடைபெற்றது.

    நிகழ்வில், கல்லூரி முதல்வர் அன்பரசு வர வேற்றார். சுகாதார பணிகள் துணை இயக்குநர் குமர குருபரன், சுகாதார பணிகள் இணை இயக்குநர் செல்வ ராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    சிறப்பு விருந்தினராக ஜெர்ரி ரொசாரியோ கலந்து கொண்டு ரத்ததானத்தின் முக்கியத்துவம் உடல் உறுப்பு தானம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினார். ரத்ததானம் செய்த கல்லூரி மாண வர்கள், கிராம மக்கள், பேராசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர் களுக்கு பாராட்டு தெரி விக்கப்பட்டது. என்.எஸ். எஸ். திட்ட ஒருங்கி ணைப்பாளர் நல்லதம்பி நன்றி கூறினார்.

    அருள் ஆனந்தர் கல்லூரியின் இளைஞர் மேம்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெற்ற இந்த முகாமில் 151 யூனிட் ரத்தம் வழங்கப்பட்டது. ஜெரி ரொசாரியோவால் தொடங்கி வைக்கப்பட்ட இந்த இயக்கம், ரத்ததான சேவைக்காக மூன்று விருதுகளைப் பெற்றுள்ளது.

    ஓராண்டில் (1973ம் வருடம்) அதிக எண்ணிக்கை யில் ரத்ததானம் செய்த மைக்கான சுழற்கோப்பை மற்றும் கேடயத்தை வென்றது. அப்போதைய தமிழக முதல்வராக இருந்த டாக்டர் மு.கருணாநிதி தன்னார்வக் கொடையாளர் விழாவில் கல்லூரிக்கு கோப்பை வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    முன்னதாக ரத்த தானச் சேவையை வலியுறுத்தும் விதமாக கல்லூரி மாணவ ர்கள் பங்கேற்ற விழி ப்புணர்வு மாரத்தான் போட்டியை செல்லம்பட்டி யில் மாவட்ட ஊராட்சி துணை தலைவர் முத்து ராமன் தொடங்கி வைத்தார்.

    விழாவில் கல்லூரி அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோணிசாமி, மதுரை தோப்பூர் முதன்மை மருத்துவ அலுவலர் காந்திமதி நாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர். 335 மாணவர்களும், 15 பணியாளர்களும் ரத்ததா னம் செய்தனர். 300 யூனிட் ரத்தம் சேகரிக்கப்பட்டது.

    Next Story
    ×