என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மரம் நடும் விழா"
- அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.
திருமங்கலம்
திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் தத்தெடுத்த கிராமங்களுள் ஒன்றான மைக்குடி கிராமத்தில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதலுடன் மரம் நடுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.
மைக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாண்டி யம்மாள் மற்றும் மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி தலைமை யாசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட பசுமலை வனச்சரகர் கிரிதரன் மற்றும் வனக்காவலர் உமையவேல் ஆகியோர் 300 மரக்கன்றுகளை வழங்கினர்.
இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.
- ராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் மரம் நடும் விழா நடந்தது.
- இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
- சிவகாசி
சிவகாசி ராஜரத்தினம் மகளிர் கல்லூரி சார்பில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரம் நடும் விழா பாறைப்பட்டி, சுக்கிரவார்பட்டி கிராமங்களில் நடந்தது. கல்லூரி தலைவர் திலகவதி ரவீந்திரன், செயலர் அருணாஅசோக் ஆகியோர் வழிநடத்தினர். முதல்வர் சுதாபெரியதாய் தலைமை தாங்கினார். சுக்கிரவார்பட்டி பஞ்சாயத்து துணை தலைவர் கண்ணன், பாறைப்பட்டி ஓய்வு பெற்ற ராணுவ வீரர் வெங்கடசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் சோலைசாமி, ராமசாமி, போத்திராஜ் ஆகியோர் மரம் நட்டனர். மாணவி அகிலாண்டேஸ்வரி சுதந்திரம் குறித்து பேசினார். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர் விஜயபிரியா, நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் செய்திருந்தனர்.
- தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு இணைந்து மரம் நடும் விழா நடைபெற்றது.
- நெடுஞ்சாலை ஓரத்தில் விடுபட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக டோல்கேட் முதல் பாளையம் வரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.
தருமபுரி,
சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு இந்திய அரசு பல்வேறு நிகழ்வுகளை நிகழ்த்தி வருகிறது. அதில் 75-வது சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில் நேற்று இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம் மற்றும் கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு இணைந்து மரம் நடும் விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் திட்டத் தலைவர் நரேஷ் (கிருஷ்ணகிரி, தொப்பூர் டோல் ரோடு), தொழில்நுட்ப மேலாளர் திலீப் (இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சேலம்), மற்றும் குழு தலைவர் உப்பம் கன்சல்டன்சி ரவி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் 500 மரங்கள் இலக்காக கொண்டு தொப்பூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் விடுபட்ட இடத்தில் மரக்கன்றுகள் நட முடிவெடுக்கப்பட்டு முதல் கட்டமாக டோல்கேட் முதல் பாளையம் வரை 50-க்கும் மேற்பட்ட மரங்கள் நடப்பட்டது.
இதில் பாளையம் டோல் பிளாசா ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
- நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
- பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்று களை நட்டு வைத்தனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி மற்றும் ரோட்டரி சங்கம் சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி தலைவர் சேரன், துணைத் தலை வர் அன்பழகன், செயல் அலுவலர் பாலசுப்பி ரமணியன், துப்புரவு ஆய்வாளர் லோகநாதன், மேற்பார்வையாளர் காளியப்பன், குடிநீர் திட்ட பணியாளர் முத்து, ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவர் கருணாகரன் பன்னீர்செல்வம், செயலா
ளர் ராமலிங்கம், பொருளா ளர் தனபால், என்ஜினீயர் சுரேந்திரன், பி.கே.ராஜா ஆகியோர் கலந்துகொண்டு பேரூராட்சி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட மரக்கன்று களை நட்டு வைத்தனர்.
- தேசிய பசுமை உலக மண்வள நாளை முன்னிட்டு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மரம் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது.
- விழாவில் மா, கொய்யா, சப்போட்டா உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
உடன்குடி:
தேசிய பசுமை உலக மண்வள நாளை முன்னிட்டு உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளியில் மரம் கன்றுகள் வழங்கும் விழா நடந்தது. பள்ளியின் தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமை தாங்கினார்.
சமூக சேவகரும் தனியார் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளருமான கலில் ரகுமான் மற்றும் ராஜா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு மண் வளம் பாதுகாக்க வேண்டும் என்பதை பற்றி கூறியும் மரக்கன்றுகளை வழங்கி அதனை நடவும் செய்தார்கள். மேலும் உலக மண் வள நாளை முன்னிட்டு திருமுருகன் மெட்ரிக் பள்ளி தாளாளர் மற்றும் முதல்வர் சுதா மோகன் அரசு பள்ளி மாணவர்களோடு கொண்டாட எண்ணி 100 மரக்கன்றுகளை உடன்குடி அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கினார்.
மேலும் நலிவடைந்த மாணவர்களுக்கு எழுது பொருட்களை சமூக சேவகர் ராஜா வழங்கினார். மா, கொய்யா, சப்போட்டா, நெல்லி, மாதுளம், வெற்றிலை, பிச்சி உள்ளிட்ட பல வகையான மரக்கன்றுகள் வழங்கினர். விழாவில் ஆனந்தா, பாலகணேசன், ஜெய்நாத், தனியார்அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாணவர்களுக்கு இனிப்பு வழங்கினர். ஆசிரியர் மகாலிங்கம் நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை தலைமையாசிரியர் பிரின்ஸ் தலைமையில் ஆசிரியர்கள் செல்வி, யமுனா, பராசக்தி, வெர்ஜின், பிருந்தா, முத்து செல்வி மற்றும் பள்ளியின் தேசிய பசுமை படை மாணவர்கள் செய்திருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்