search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அன்னை பாத்திமா"

    • அன்னை பாத்திமா கல்லூரியின் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது.
    • பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.

    மதுரை

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதி மேலாண்மை பற்றிய 2 நாள் கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் தலைமை செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் படி நடைபெற்றது.

    கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை தாங்கி நிதி மேலாண்மை என்பது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிமனிதனுக்கும் அவசியம் தேவை. நிதி மேலாண்மை தெளிவு இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.இக்கருத்தரங்கில் பகிரக் கூடிய நிதி பற்றிய அனைத்து தகவல்களையும் மாண வர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு தேர்வுக்கு மட்டுமல்லாமல் தங்களின் வாழ்வின் வெற்றிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

    முதலாம் நாள் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செபி அமைப்பின் நிதி மேலாண்மை கல்விப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் நளினி நிதி சேமிப்பு, நிதி முதலீடு, மற்றும் நிதி பராமரிப்பு போன்றவற்றை பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகள் கேட்ட வினாக்களுக்கு விரிவான பதில் அளித்தார். 2-ம் நாள் அமர்வில் மாணவ மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நிதி மேலாண்மை பற்றிய குழு விவாதம் நடத்தப் பட்டது. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நிர்வாக மேலாண்மை துறை இயக்குனர் பேராசிரியர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், டாக்டர் திருப்பதி, பி.பி.ஏ. துறை தலைவர் கார்த்திகா பேராசிரியர்கள் அழகு லட்சுமி, கார்த்திக் ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்கள் ஜமால், தினேஷ், திவ்யா, பத்மப்பிரியா ஆஃபரின், ரேஷ்மா, மகா, சுவேதா ஆகியோர் செய்தனர். இறுதியில் பேராசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.

    • அன்னை பாத்திமா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • பேராசிரி–யர்கள், அலுவலர்கள், 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திரு–மங் கலம் அருகே ஆலம்பட் டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூ–ரியில் ஓட்டல் மேலாண்மை, பி.பி.ஏ., ஏவியேசன், ஆஸ்பி–டல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. போன்ற பட்ட படிப்பு–களில் கேரள மாநிலம் மற் றும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

    வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாட இருப்பதை முன்னிட்டு கல் லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனை–யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் ஓணம் பண் டிகை கல்லூரி வளாகத் தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

    விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பங் கேற்ற அத்தப்பூ கோலப் போட்டி மற்றும் விளை–யாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. பின்னர் கேரள மாணவிகள் பங்கேற்ற திரு–வாதிரகாளி கேரள நடனம் மற்றும் பரத நாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து பேசிய கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், பண்டிகை கொண்டாட்டங்கள் பல் வேறு மக்களின் கலாச்சா–ரம் மற்றும் பண்பாட்டை உணரச் செய்யும் என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது இந்திய திரு–நாட்டில் ஒவ்வொரு பகுதி–களிலும் வெவ்வேறு வித–மான கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் என் றும்,

    கேரள மாநிலத்தில் வசிக் கும் அனைத்து மக்களும் தங்களுடைய மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றாக கொண்டாட கூடிய பண்டி–கையாக ஓணம் பண்டிகை அமைந்துள்ளது என்றார்.

    பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக–ளுக்கு பரிசுகள் வழங்கினார். நிர்வாக மேலாண்மை துறை–யைச் சார்ந்த டாக்டர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், மனிதவள நிர்வாகி முகமது பாசில் உள்ளிட்டோரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரி–வித்து பேசினர்.

    விளையாட்டுப் போட்டி–களை பேராசிரியர்கள் வினிஷ்மா, பிரசில்லா, ஜெயஸ்ரீ, மேகலா, ஆர்த்தி, முத்துக்குமார், சுபாஷ் ஆகி–யோரும், கலை நிகழ்ச்சிகளை பேராசிரியர்கள் அன்புச் செல்வி, சீமாட்டி, மணிமே–கலை ஆகியோரும் அத்தப்பூ கோலப் போட்டிகளை பேராசிரியர்கள் நளாயினி, சுபஸ்ரீ ஆகியோரும், பேராசி–ரியர்கள் ராஜ்குமார், கார்த் திகா மற்றும் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. மாணவி திவ்யநாயகி ஆகியோர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கி–ணைப்பும் செய்தனர்.

    ஏவியேசன் துறை தலைவி டாக்டர் கார்த்திகா, பேராசிரியர்கள் சசிகலா மற்றும் ஜிஞ்சு மரியம் இமானுவேல் ஆகியோர் விருந்தினர்களை கவுரவித் தனர். இந்த விழாவில் 150-க்கும் மேற்பட்ட பேராசிரி–யர்கள், அலுவலர்கள், 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    • அன்னை பாத்திமா கல்லூரி சார்பில் மரம் நடும் விழா நடந்தது.
    • இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.

    திருமங்கலம்

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் அணி எண் 113 சார்பாக கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் தத்தெடுத்த கிராமங்களுள் ஒன்றான மைக்குடி கிராமத்தில் தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் பொருளாளர் எம்.எஸ்.ஷகீலா ஷா ஆகியோரின் வழிகாட்டுதலுடன் மரம் நடுவிழா நடைபெற்றது.

    இவ்விழாவில் கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் தலைமை தாங்கினார். மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பாண்டி சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டார்.

    மைக்குடி ஊராட்சி ஒன்றிய தலைவர் பாண்டி யம்மாள் மற்றும் மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநி லைப்பள்ளி தலைமை யாசிரியர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட பசுமலை வனச்சரகர் கிரிதரன் மற்றும் வனக்காவலர் உமையவேல் ஆகியோர் 300 மரக்கன்றுகளை வழங்கினர்.

    இவ்விழாவில் கல்லூரி பேராசிரியர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள், மைக்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாட்டை நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனியாண்டி செய்தி ருந்தார்.

    ×