அன்னை பாத்திமா கல்லூரியின் நிதி மேலாண்மை கருத்தரங்கம்

அன்னை பாத்திமா கல்லூரியின் நிதி மேலாண்மை கருத்தரங்கம் நடந்தது. பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது.
அன்னை பாத்திமா கல்லூரியின் நிதி மேலாண்மை கருத்தரங்கம்
Published on

மதுரை

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள ஆலம்பட்டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நிதி மேலாண்மை பற்றிய 2 நாள் கருத்தரங்கம் கல்லூரி தாளாளர் எம். எஸ். ஷா மற்றும் தலைமை செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனையின் படி நடைபெற்றது.

கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமை தாங்கி நிதி மேலாண்மை என்பது பெரு நிறுவனங்களுக்கு மட்டுமல்ல ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனிமனிதனுக்கும் அவசியம் தேவை. நிதி மேலாண்மை தெளிவு இருந்தால் நிச்சயமாக வெற்றி பெறலாம்.இக்கருத்தரங்கில் பகிரக் கூடிய நிதி பற்றிய அனைத்து தகவல்களையும் மாண வர்கள் தங்களுடைய பட்டப்படிப்பு தேர்வுக்கு மட்டுமல்லாமல் தங்களின் வாழ்வின் வெற்றிக்காகவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

முதலாம் நாள் அமர்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட செபி அமைப்பின் நிதி மேலாண்மை கல்விப் பிரிவின் ஆலோசகர் டாக்டர் நளினி நிதி சேமிப்பு, நிதி முதலீடு, மற்றும் நிதி பராமரிப்பு போன்றவற்றை பற்றி மிக விரிவாக எடுத்துக் கூறினார். பின்னர் மாணவ மாணவிகள் கேட்ட வினாக்களுக்கு விரிவான பதில் அளித்தார். 2-ம் நாள் அமர்வில் மாணவ மாணவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு நிதி மேலாண்மை பற்றிய குழு விவாதம் நடத்தப் பட்டது. இவ்விவாதத்தில் கலந்து கொண்ட மாணவ மாணவிகள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்து உற்சாகமாக கலந்து கொண்டனர். பின்னர் வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. கருத்தரங்கில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் சான்றிதழ்களை கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் வழங்கினார். நிகழ்ச்சி ஏற்பாட்டினை நிர்வாக மேலாண்மை துறை இயக்குனர் பேராசிரியர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், டாக்டர் திருப்பதி, பி.பி.ஏ. துறை தலைவர் கார்த்திகா பேராசிரியர்கள் அழகு லட்சுமி, கார்த்திக் ஆகியோரின் மேற்பார்வையில் மாணவர்கள் ஜமால், தினேஷ், திவ்யா, பத்மப்பிரியா ஆஃபரின், ரேஷ்மா, மகா, சுவேதா ஆகியோர் செய்தனர். இறுதியில் பேராசிரியர் திருப்பதி நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com