search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஓணம் பண்டிகை கொண்டாட்டம்
    X

    திருமங்கலம் அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற ஓணம் பண்டிைக கொண்டாட்டத்தில் மாணவிகள் கேரள பாரம்பரிய உடை அணிந்து நடனமாடிய காட்சி.

    ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

    • அன்னை பாத்திமா கல்லூரியில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    • பேராசிரி–யர்கள், அலுவலர்கள், 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம், திரு–மங் கலம் அருகே ஆலம்பட் டியில் அமைந்துள்ள அன்னை பாத்திமா கலை மற்றும் அறிவியல் கல்லூ–ரியில் ஓட்டல் மேலாண்மை, பி.பி.ஏ., ஏவியேசன், ஆஸ்பி–டல் மேனேஜ்மென்ட், எம்.பி.ஏ. போன்ற பட்ட படிப்பு–களில் கேரள மாநிலம் மற் றும் வடமாநிலத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகிறார்கள்.

    வருகிற 29-ந்தேதி ஓணம் பண்டிகை கொண்டாட இருப்பதை முன்னிட்டு கல் லூரி தாளாளர் எம்.எஸ்.ஷா மற்றும் தலைமைச் செயல் அதிகாரி சகிலா ஷா ஆகியோரின் ஆலோசனை–யின் பேரில் கல்லூரி முதல் வர் டாக்டர் அப்துல் காதிர் தலைமையில் ஓணம் பண் டிகை கல்லூரி வளாகத் தில் சிறப்பாக கொண்டாடப் பட்டது.

    விழாவையொட்டி மாணவ, மாணவிகள் பங் கேற்ற அத்தப்பூ கோலப் போட்டி மற்றும் விளை–யாட்டு போட்டிகள் நடத்தப் பட்டன. பின்னர் கேரள மாணவிகள் பங்கேற்ற திரு–வாதிரகாளி கேரள நடனம் மற்றும் பரத நாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதையடுத்து பேசிய கல்லூரி முதல்வர் டாக்டர் அப்துல் காதிர், பண்டிகை கொண்டாட்டங்கள் பல் வேறு மக்களின் கலாச்சா–ரம் மற்றும் பண்பாட்டை உணரச் செய்யும் என்றும், வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது இந்திய திரு–நாட்டில் ஒவ்வொரு பகுதி–களிலும் வெவ்வேறு வித–மான கொண்டாட்டங்களை மக்கள் கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர் என் றும்,

    கேரள மாநிலத்தில் வசிக் கும் அனைத்து மக்களும் தங்களுடைய மதங்களைக் கடந்து அனைவரும் ஒன்றாக கொண்டாட கூடிய பண்டி–கையாக ஓணம் பண்டிகை அமைந்துள்ளது என்றார்.

    பின்னர் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிக–ளுக்கு பரிசுகள் வழங்கினார். நிர்வாக மேலாண்மை துறை–யைச் சார்ந்த டாக்டர் நடேச பாண்டியன், டாக்டர் நாசர், மனிதவள நிர்வாகி முகமது பாசில் உள்ளிட்டோரும் மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரி–வித்து பேசினர்.

    விளையாட்டுப் போட்டி–களை பேராசிரியர்கள் வினிஷ்மா, பிரசில்லா, ஜெயஸ்ரீ, மேகலா, ஆர்த்தி, முத்துக்குமார், சுபாஷ் ஆகி–யோரும், கலை நிகழ்ச்சிகளை பேராசிரியர்கள் அன்புச் செல்வி, சீமாட்டி, மணிமே–கலை ஆகியோரும் அத்தப்பூ கோலப் போட்டிகளை பேராசிரியர்கள் நளாயினி, சுபஸ்ரீ ஆகியோரும், பேராசி–ரியர்கள் ராஜ்குமார், கார்த் திகா மற்றும் இரண்டாம் ஆண்டு பி.பி.ஏ. மாணவி திவ்யநாயகி ஆகியோர் நிகழ்ச்சிகளையும் ஒருங்கி–ணைப்பும் செய்தனர்.

    ஏவியேசன் துறை தலைவி டாக்டர் கார்த்திகா, பேராசிரியர்கள் சசிகலா மற்றும் ஜிஞ்சு மரியம் இமானுவேல் ஆகியோர் விருந்தினர்களை கவுரவித் தனர். இந்த விழாவில் 150-க்கும் மேற்பட்ட பேராசிரி–யர்கள், அலுவலர்கள், 1100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×