என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை குந்தவை நாச்சியார் அரசு கல்லூரியில் பொருட்காட்சி
- 40-க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.
- இந்த பொருட்காட்சியானது 2 நாட்கள் நடைபெற உள்ளது.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கலை கல்லூரியில் மகளிர் சுய உதவி குழுக்களால் உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை காட்சிப்படு த்தவும், விற்பனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டது.
இந்த பொருட்காட்சியை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப்ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.
இதில் 40க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கப்பட்டது.
தொடர்ந்து 2-வது ஆண்டுகளாக இந்த பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்த பொருட்காட்சி ஆனது 2 நாட்கள் நடைபெற உள்ளது.
கடந்த வருடம் ரூ. 2.5 லட்சம் அளவில் விற்பனை செய்யப்பட்டது.
மேலும் தற்போது அதனை தாண்டி விற்பனை ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியை கல்லூரி முதல்வர் ஜான் பீட்டர் மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி மாவட்ட வளங்கள் மற்றும் விற்பனை சங்க மேலாளர் செந்தில்குமார் உதவி திட்ட அலுவலர் செல்வராஜ், நிதியாளர் ராஜாராமன், தாசில்தார் சக்திவேல், கல்லூரியின் துணைத் தலைவர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவிகள் பங்கேற்றனர்.
கல்லூரியின் தொழில் முனைவோர் மேம்பாட்டு மைய ஒருங்கிணைப்பாளர் மற்றும் வணிகவியல் துறை தலைவர் முத்தமிழ் திருமகள் நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்