search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தங்கப்பதக்கம்"

    • கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.
    • பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    சென்னை:

    6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டி (18 வயதுக்குட்பட்டோர்) சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கியுள்ள இந்த விளையாட்டு திருவிழாவில் தமிழ்நாடு தொடர்ந்து பதக்கவேட்டையில் முத்திரை பதித்து வருகிறது.

    நேற்று நடந்த கைப்பந்து போட்டியில் ஆண்கள் பிரிவில் தமிழக அணி 25-20, 25-23, 22-25, 25-15 என்ற செட் கணக்கில் அரியானாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கியது. கேலோ இந்தியா விளையாட்டு வரலாற்றில் கைப்பந்தில் தமிழ்நாடு தங்கப்பதக்கம் வெல்வது இது 4-வது முறையாகும்.

    இதன் பெண்கள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்காளம் 23-25, 25-22, 25-13, 25-23 என்ற செட் கணக்கில் ராஜஸ்தானை வீழ்த்தி மகுடம் சூடியது. 3-வது இடத்திற்கான ஆட்டத்தில் தமிழக அணி 25-21, 25-15, 25-6 என்ற நேர் செட்டில் குஜராத்தை துவம்சம் செய்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றியது.

    சைக்கிள் பந்தயத்தில்( 80 கிலோ மீட்டர்) தமிழக வீரர் கிஷோர் 2 மணி 04 நிமிடம் 02.980 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். மற்றொரு தமிழக வீரர் நிதினுக்கு வெண்கலம் கிடைத்தது.

    நீச்சலில் பெண்களுக்கான 100 மீட்டர் பேக்ஸ்டிரோக் பந்தயத்தில் தமிழக வீராங்கனை தீக்சா சிவக்குமார் 1 நிமிடம் 07.91 வினாடிகளில் முதலாவதாக வந்து தங்கப்பதக்கத்துக்கு முத்தமிட்டார். இதே போல் நிதிக் (வெள்ளி), ஸ்ரீநிதி (வெண்கலம்) ஆகியோரும் நீச்சலில் தமிழகத்திற்கு பதக்கம் தேடித்தந்தனர். பளுதூக்குதலில் 89 கிலோ பிரிவில் தமிழகத்தின் தீர்ஷன் வெண்கலம் வென்றார்.

    பதக்கப்பட்டியலில் டாப்-2 இடங்களில் மராட்டியமும் (37 தங்கம் உள்பட 109 பதக்கம்), தமிழ்நாடும் (29 தங்கம் உள்பட 77 பதக்கம்) மாற்றமின்றி நீடிக்கின்றன.

    • இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன.
    • முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    சென்னை:

    கேலோ இந்தியா விளையாட்டில் கைப்பந்து போட்டிகள் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது.

    இதன் ஆண்கள் பிரிவில் தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று நடந்த அரைஇறுதியில் தமிழக அணி 18-25, 25-22, 23-25, 25-23, 15-11 என்ற கணக்கில் ஆந்திராவை வீழ்த்தியது. மற்றொரு அரை இறுதியில் அரியானா 25-22, 25-17, 25-18 என்ற நேர்செட் கணக்கில் உத்தரபிரதேசத்தை தோற்கடித்தது.

    இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் தமிழ்நாடு-அரியானா அணிகள் மோதுகின்றன. அரியானாவை வீழ்த்தி தமிழக அணி தங்கப் பதக்கம் வெல்லுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. அரியானா அணியும் வலுவாக இருக்கிறது. இதனால் இறுதிப் போட்டி மிகவும் விறு விறுப்புடன் இருக்கும்.

    முன்னதாக மாலை 3 மணிக்கு நடைபெறும் பெண்கள் இறுதிப் போட்டியில் மேற்கு வங்காளம்-ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன.

    அரைஇறுதி ஆட்டங்களில் மேற்குவங்காளம் 25-11, 30-28, 25-19 என்ற கணக்கில் குஜராத்தையும், ராஜஸ்தான் 13-25, 25-20, 25-20 என்ற கணக்கில் தமிழகத்தையும் தோற்கடித்தன.

    • போட்டியில் 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
    • 74 கிலோ எடை பிரிவில் சுதர்சன் தங்கப்பதக்கம் வென்றார்.

    ஆலங்குளம்:

    தமிழ்நாடு பவர் லிப்டிங் கழகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய மாநில அளவிலான வலு தூக்கும் போட்டி கோவையில் நடந்தது. இதில் தமிழ்நாடு முழுவதும் இருந்து 500-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். இதில் ஆலங்குளத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சுதர்சன் என்ற கல்லூரி மாணவன் 74 கிலோ எடை பிரிவில் கலந்து கொண்டு 125 கிலோ தூக்கி முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றார். எளிமையான குடும்பத்தை சேர்ந்த இந்த மாணவன் ஆலங்குளம் அருகே உள்ள நல்லூர் சி.எஸ்.ஐ. ஜெயராஜ் அன்னபாக்கியம் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு முடித்துள்ளார்.

    மேலும் தற்போது ஆலங்குளம் தினசரி காய்கனி சந்தை மார்க்கெட்டில் இரவு நேரத்தில் வேலை பார்த்து கொண்டு வீரவநல்லூர் தனியார் கல்லூரியில் உடற்கல்வி ஆசிரியர் படிப்பு படித்து வருகிறார். இவர் கொரோனா காலகட்டத்தில் இருந்து கடந்த 2 ஆண்டு காலமாக தினசரி காய்கனி சந்தையில் வேலை செய்து கொண்டு பயிற்சி பெற்று குறுகிய காலகட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை ஆலங்குளம் காய்கனி சந்தை மார்க்கெட் உரிமையாளர்கள் சங்கம் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • அண்ணா பல்கலைக்கழக தேர்வில் தங்கப்பதக்கம் பெற்ற முகமது சதக் கல்லூரி மாணவரை இயக்குநர்-ஆசிரியர்கள் பாராட்டினர்.
    • தங்க நாணயத்தை பரிசாக வழங்கினார்.

    கீழக்கரை

    அண்ணா பல்கலைக்கழக அளவில் கடல் சார் பொறியி யல் கல்லூரி மாணவர்க ளுக்கு இடையே நடைபெற்ற தேர்வில் தமிழக அளவில் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகமது சதக் பொறியியல் கல்லூரி மாணவர் சோன்ரபிரபு முதலாவதாக தேர்ச்சி பெற்று அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்றார்.

    அண்ணா பல்கலை கழகம் அளவில் முதல் இடத்தை பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவர் சோன்ர பிரபுவுக்கு கல்லூரி நிர்வாக இயக்குனர் பி.ஆர்.எல்.ஹாமிது இப்ராஹிம் மாணவரை பாராட்டி தங்க நாணயம் பரிசு வழங்கினார்.

    மேலும் அவர் கூறுகை யில், அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர். எங்கள் கல்லூரியில் கடல்சார் பொறியியல் துறையில் பயின்று சாதனை புரிந்து தற்போது பெரிய கப்பல் நிறுவனத்தில் பணி யில் சேர்ந்து வீட்டிற்கும், நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார். இவர் மற்ற மாணவர்களுக்கு ஒரு உதார ணமாக திகழ்கிறார். அவரை அழைத்து பாராட்டுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது, என்றார்.

    மாணவரின் தாயார் மாரியம்மாள், முகம்மது சதக் என்ஜினீயரிங் கல்லூரி சி.இ.ஒ. விஜயகுமார், கல்லூரி முதல்வர் செந்தில் குமார், கல்லூரி கடல்சார் பொறியியல் துறை தலைவர் பேராசிரியர் தங்கவேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

    சாதனை மாணவர் சோன்ரபிரபு கூறும்போது, நான் அண்ணா பல்கலை கழகம் அளவில் தங்கப் பதக்கம் பெறுவதற்கு உறு துணையாக இருந்த முகம்மது சதக் பொறியியல் கல்லூரி நிர்வாக இயக்குனர், சி.இ.ஓ.., கல்லூரி முதல்வர், துறை தலைவர், பேராசிரி யர்கள், என் பெற்றோர் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.

    • சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 1,300 பேர் கலந்து கொண்டனர்.
    • தனித்திறன் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்னார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் தாலுகா, தேத்தாக்குடி தெற்க்கை சேர்ந்த அழகேசன்- மலர்விழி தம்பதியரின் மகன் அகிலரசு. (வயது 12). இவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    கடந்த வாரம் மலேசியா நாட்டின் ஈபோவில் நடைபெற்ற 19-வது அனைத்து உலக கராத்தே போட்டியில் 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் அகிலரசு கலந்து கொண்டு தங்கப்பதக்கமும், தனித்திறன் போட்டியில் வெள்ளி பதக்கமும் பெற்றுள்ளார்.

    போட்டியில் இந்தியா, இந்தோனேசியா, சிங்கப்பூர், சீனா, மலேசியா உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து 1,300 பேர் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், தங்கம் வென்ற தமிழக மாணவர் அகிலரசுக்கு மலேசிய நாட்டு மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் சிவகுமார் வரதராஜுலு பரிசு வழங்கி பாராட்டினார். மேலும், தங்கம் வென்று தமிழகம் வந்த மாணவன் அகிலரசுவை ஊராட்சி தலைவர் வனஜா சண்முகம், ஊராட்சி உறுப்பினர்கள், பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் பாராட்டினர்.

    • இந்தியா சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது
    • நட்சத்திர மல்லர் கம்ப விளையாட்டு வீரர் ஹேமசந்திரன் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    விழுப்புரம்:

    இந்தியா சார்பில் அஸ்ஸாம் மாநிலத்தில் 2-வது சர்வதேச மல்லர் கம்ப போட்டி கடந்த 9-ந்தேதி தொடங்கி 11-ந் தேதி வரை நடைபெற்றது. இந்த சர்வதேச மல்லர்கம்ப விளையாட்டு போட்டியில் தமிழகத்திலிருந்து விழுப்புரம் பெரிய காலணி பகுதியை சேர்ந்த நட்சத்திர மல்லர்கம்ப விளையாட்டு வீரர் ஹேமசந்திரன் சர்வதேச மல்லர்கம்பம் தனிநபர் மற்றும் குழு இரு விளையாட்டு பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளார்.

    மேலும் தங்க பதக்கம் வென்ற ஹேமச்சந்திரன் கடந்த 2 ஆண்டில் மட்டும் 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் தங்கப் பதக்கமும், பல்கலைக்க ழகங்களுக்கு இடையிலான போட்டியில் தங்கப் பதக்கமும், கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள்.
    • படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    குஜராத்:

    ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கபட்டன. அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு கல்வி உரிமை மறுக்கப்பட்டது. இதனால் மாணவிகள் கல்வி கற்க முடியாமல் வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர்.

    தலிபான்களின் இந்த கட்டுப்பாடுகளில் இருந்து மீண்ட ஆப்கானிஸ்தான் மாணவி ஒருவர் இந்தியாவில் எம்.ஏ. பட்டப்படிப்பில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அந்த மாணவியின் பெயர் ரஷியா முராடி. இவர் குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ (பொது நிர்வாகம்) படித்தார். இதில் அவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்று சாதித்து உள்ளார். குஜராத் மாநிலம் சூரத்தில் நேற்று நடந்த பட்டமளிப்பு விழாவில் அவருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது. இதனால் ரஷியா முராடி மகிழ்ச்சியுடன் உள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது

    கடந்த ஆண்டு நான் எம்.ஏ முடித்தேன். தற்போது பி.எச்.டி படித்து வருகிறேன். எனக்கு தங்கப்பதக்கம் கிடைத்தது ரொம்பவே மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஆனால் இந்த சந்தோஷத்தை எனது பெற்றோருடன் கொண்டாட முடியவில்லையே? என்ற ஏக்கம் இருக்கிறது. ஆப்கானிஸ்தானில் இருக்கும் பெற்றோர்களை பார்த்து 3 ஆண்டுகள் ஆகிவிட்டது. இதுபற்றி நான் அவர்களிடம் தெரிவித்தேன். அவர்கள் சந்தோஷப்பட்டனர். நான் ஆப்கானிஸ்தான் பெண்களின் ஒரு பிரதிநிதியாகவே கருதுகிறேன். தலிபான் அரசுக்கு நான் ஒன்றை சொல்லிக்கொள்கிறேன். அனைத்து துறையிலும் பெண்கள் சாதிப்பார்கள். இதனை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். எனக்கு படிக்கும் வாய்ப்பை கொடுத்ததற்கும், சாதனை படைக்க ஊக்குவித்ததற்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். ஆப்கானிஸ்தானை சேர்ந்த 14 ஆயிரம் மாணவ-மாணவிகள் இந்தியாவில் படித்து வருகிறார்கள். படிப்பு முடிந்ததும் மீண்டும் சொந்த நாட்டுக்கு சென்று வேலை பார்க்க வேண்டும் என்பது தான் எனது கனவு.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
    • பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாராட்டினார்.

    திருப்பூர் :

    மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

    தமிழக மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், பிரன்ட்லைன் பள்ளி மாணவ ர்கள் பங்கேற்று தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றிருந்தனர். குழு பிரிவில், மாணவர் சந்திரேஷ் தங்கமும், ஒற்றையர் பிரிவில், ரிஸ்வான்ட் வெண்கலம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • கைபந்தாட்ட போட்டியில் சீர்காழி பள்ளி மாணவர்கள் தங்கப்பதக்கத்தை வென்றனர்.
    • ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    சீர்காழி:

    தமிழக அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் கன்னியாகுமாரி மாவட்டம், நாகர்கோவிலில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    கடற்கரை கைப்பந்து போட்டியில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர். இந்த போட்டியில் மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி விவேகானந்தா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மாணவ, மாணவிகள் மயிலாடுதுறை மாவட்டம் சார்பில் கலந்து கொண்டனர்.

    19 வயது பிரிவில் ஆண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கோகுலன், அரிஷ் குமார், ஆகியோர் மாநில அளவில் முதலிடம் பிடித்தனர்.

    இதேபோல் 17 வயது பெண்களுக்கான கடற்கரை கைபந்தாட்ட போட்டியில் கலந்து கொண்ட பாவனா, பிரியதர்ஷினி இருவரும் மாநில அளவில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றனர்.

    இதை தொடர்ந்து சொந்த ஊர் திரும்பிய மாணவ,மாணவிகளுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி இயக்குனர்கள் பிரவின் வசந்த்ஜபேஷ், அனுஷாமேரி, பள்ளி முதல்வர் ஜோஸ்வாபிரபாகரசிங், துணை முதல்வர் சரோஜா, குட்சமாரிட்டன் பப்ளிக் பள்ளி முதல்வர் அபிரகாம் மற்றும் பெற்றோர்கள் ெரயில் நிலையத்தில் மாணவர்களுக்கு மாலை அணிவித்து, பொன்னாடை போர்த்தி உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    தொடர்ந்து திறந்த வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகளின் வழியாக மாணவ, மாணவிகளை கோப்பைகளுடன் ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து சென்றனர்.

    பள்ளியில் அனைத்து மாணவ, மாணவகளும் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளை கைத்தட்டி உற்சாக வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சியின் போது பரஞ்ஜோதி ஜூவல்லரி பழனியப்பன், ஆங்கில ஆசிரியர் ரெங்கநாதன் உடனிருந்தனர்.

    • தேர்வில் அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கி டி.எஸ்.பி. பிரித்தி பேசினார்.
    • நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 78-வது ஆண்டு விழா நடந்தது.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ெரயில்வே பீடர் ரோட்டில் உள்ள கிருஷ்ணம ராஜபாளையம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட நாடார்மேல்நிலைபள்ளி கலையரங்கத்தில் நாடார் தொடக்கப்பள்ளி, நாடார் மேல்நிலைப்பள்ளி, நாடார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளின் 78-வது ஆண்டு விழா நடந்தது.

    நாடார் தொடக்கப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளின் செயலர் விஜயராஜன், மெட்ரிக் மேல்நிலைபள்ளி செயலர் ஆத்தியப்பன் வரவேற்று பேசினார். உறவின்முறைத் தலைவர் ஆதவன் தலைமை தாங்கி பேசினார். சிறப்பு விருந்தினர்கள் பள்ளி வளாகத்தில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    உறவின்முறை செயலர் வெற்றிசெல்வன், பொரு ளாளர் பெரியசாமி, தர்மகர்த்தா மதிபாலன், உதவி தலைவர் வடமலையான், காரியதரிசி நாகரத்தினம், இணைத்தலைவர் மதிப்பிர காசம் முன்னிலை வகித்தனர்.

    விருதுநகர் முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, சிவகாசி மாவட்ட கல்வி அலுவலர் ராஜா, ராஜபாளையம் வட்டார கல்வி அலுவலர் முத்து ராமலிங்கம், ராஜபாளையம் டி.எஸ்.பி. பிரித்தி, ஸ்ரீவில்லிபுத்தூர் உதவி வன பாதுகாவலர் வேல்மணி நிர்மலா, ராஜபாளையம் வன சரக அலுவலர் சக்திபிரசாத் கதிர்காமன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 5, 10, 12 ஆகிய வகுப்புகளில் அரசுப் பொதுத்தேர்வில் பாடவாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ- மாணவியர்களை பாராட்டி தங்கப்பதக்கம் வழங்கி சிறப்புரையாற்றினார்கள்.

    பின்னர் விழா மேடையில் சிறப்பு விருந்தினர்களுக்கும் தங்க பதக்கம் மற்றும் சிறப்புப் பரிசுகள் வழங்கிய நன்கொடை யாளர்களுக்கும், உறவின்முறை நிர்வாகி களுக்கும், நிர்வாக குழு உறுப்பினர்களுக்கும் உறவின்முறை சார்பில் பொன்னாடை அணி விக்கப்பட்டது.

    நாடார் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், ெதாடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பூங்கொடி, மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் சுமதி ஆண்டறிக்கையினை சமர்ப்பித்தனர். மாணவ- மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

    விழா நிகழ்ச்சிகளை தமிழாசிரியர்கள் லதா, பிச்சாண்டி,சொர்ணலதா கருப்பசாமி தொகுத்து வழங்கினர். விழாவிற்கான ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியர்கள் கணேசன், நவநீதகிருஷ்ணன், பேச்சி யம்மாள் செய்திருந்தார்கள்.

    முடிவில் நாடார் மேல்நிலைபள்ளி உதவி தலைமை ஆசிரியர் கண்ணன் நன்றி கூறினார்.

    • காமன்வெல்த் செஸ் போட்டியில் மதுரை மாணவி தங்கப்பதக்கம் வென்றார்.
    • சர்வதேச அளவிலான செஸ் போட்டி களில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை.

    மதுரை

    சர்வதேச காமன்வெல்த் யூத் செஸ் போட்டி இலங்கையில் நடந்தது. இதில் மதுரை டி.எஸ்.பி. நகரைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவி கனிஷ்கா (வயது 14) இந்தியா சார்பில் கலந்து கொண்டார்.

    அவர் 16 வயதுக்குட்பட்ட பெண்கள் பிரிவுக்கான செஸ் போட்டி யில் சிறப்பாக விளையாடி தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். பதக்கம் வென்ற கனிஷ்கா கூறுகையில், "செஸ் விளையாட்டில் கடந்த 6 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறேன்.

    மாநில அளவில் தொடங்கி, தேசிய அளவில் முன்னேறி, இன்றைக்கு சர்வதேச அளவில் சாதனை படைத்தது மகிழ்ச்சி தருகிறது. இந்தோனேசியாவில் நடந்த ஆசிய அளவிலான செஸ் போட்டியில் வெள்ளி பதக்கமும், ருமேனியாவில் நடந்த சர்வதேச போட்டியில் 6-வது இடமும் கிடைத்தது.

    இந்த போட்டிகள் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வெல்ல உதவியாக இருந்தது. சர்வதேச அளவிலான செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டராக வேண்டும் என்பது தான் என் ஒரே ஆசை. இதற்காக தினமும் 10-12 மணி நேரம் வரை கடினமாக பயிற்சி எடுத்து வருகிறேன்" என்றார்.

    கனிஷ்காவுக்கு, தர்ஷனி செஸ் அகாடமி பயிற்சியாளர் ராஜதர்ஷினி மற்றும் நிர்வாகிகள் அழகு செந்தில்வேல், மணிமாறன் ஆகியோர் பொன்னாடை அணிவித்து இனிப்புகள் வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.

    • போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் அவரவரின் தனித் திறமையை வெளிப்படுத்தினர்.
    • போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிசெயலாளர் சிவகாமி பதக்கங்கள் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் தாராபுரம் சாலை பெருந்தொழுவு ரோட்டில் அமைந்துள்ள பிரண்ட்லைன் நியூஜென் இன்டர்நேஷனல் பள்ளியில் மாணவர்களுக்கான தடகளப்போட்டிகள் 3 நாட்கள் நடைப்பெற்றன. இந்நாட்களில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், தடைகளைத் தாண்டி ஓடுதல், தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் போன்ற பல போட்டிகள் நடைபெற்றன.

    இப்போட்டிகளில் ஒவ்வொரு மாணவரும் அவரவரின் தனித் திறமையை வெளிப்படுத்தினர். இப்போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளிசெயலாளர் சிவகாமி பதக்கங்கள் வழங்கினார்.

    மேலும் இவர்களை பள்ளித்தாளாளர் சிவசாமி, இயக்குனர் சக்தி நந்தன் மற்றும் துணை இயக்குனர் வைஷணவி நந்தன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    இறுதியாக, அனைத்து போட்டிகளிலும் கலந்து கொண்டு முதல் இடம் பெற்ற அக்வா அணிக்கும், 2-ம் இடம் பிடித்த ஏரிஸ் அணிக்கும் பள்ளித்தலைமை ஆசிரியை சியாமளா தேவி கோப்பைகள் வழங்கி பாராட்டினார்.

    ×