search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Frontline Millennium School"

    • வானில் தோன்றிய நட்சத்திரங்களின் தொகுதிகளையும்,கோள்களையும் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.
    • வெற்றிகரமாகப் பயணித்தனர் என்பதையும் அறிந்து கொண்டனர்.

    திருப்பூர் :

    பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவர்களுக்கு வானியல் நோக்கும் நிகழ்ச்சி (ஸ்கை வாட்ச்) நிகழ்ச்சி நடைபெற்றது. இரவு 7 மணி முதல் தொலை நோக்கியின் வாயிலாக வானில் தோன்றிய நட்சத்திரங்களின் தொகுதிகளையும்,கோள்களையும் கண்டு வியந்து மகிழ்ந்தனர்.

    பழங்கால மக்கள் இரவு நேரப்பயணங்களின் போது நட்சத்திரங்களின் துணையுடன் தான் வெற்றிகரமாகப் பயணித்தனர் என்பதையும் அறிந்துகொண்டனர்.

    வானியல் ஆய்வாளர் உமாசங்கர் இந்நிகழ்ச்சிக்கு வருகை தந்து வானியல் தொடர்பான கருத்துகளை மாணவர்களுக்குத் தெளிவாக விளக்கினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் சிவசாமி, பள்ளி செயலாளர் சிவகாமி, பள்ளி முதல்வர் லாவண்யா மற்றும் ஆசி–ரி–யர்–களும் கலந்துகொண்டனர்.

    • டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது.
    • பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் பாராட்டினார்.

    திருப்பூர் :

    மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டியில், பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளி மாணவர்கள் அசத்தினர்.

    தமிழக மேற்கு மண்டல அளவிலான டேக்வாண்டோ போட்டி திருப்பூர் மாவட்ட உள்விளையாட்டு அரங்கில் நடந்தது. இப்போட்டியில், பிரன்ட்லைன் பள்ளி மாணவ ர்கள் பங்கேற்று தங்கம், வெண்கல பதக்கங்களை வென்றிருந்தனர். குழு பிரிவில், மாணவர் சந்திரேஷ் தங்கமும், ஒற்றையர் பிரிவில், ரிஸ்வான்ட் வெண்கலம் வென்றனர். போட்டியில் வெற்றி பெற்று, பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவர்களை பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பைக்கான தடகளப்போட்டி திருப்பூர் அனுப்பர்பாளையம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில் திருப்பூர் மாவட்ட பள்ளிகளை சார்ந்த 1000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளி 12ம் வகுப்பு மாணவர் சண்முகம்உயரம் தாண்டுதல் போட்டியில் முதல் பரிசும், 10ம் வகுப்பு மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல் போட்டியில் இரண்டாம் பரிசும், 10ம் வகுப்பு மாணவி பவித்ர லட்சுமி உயரம் தாண்டுதல் போட்டியில் மூன்றாம்பரிசும் பெற்று மாநில முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு தகுதி பெற்றனர்.

    தேசிய அளவிலான தடகள போட்டியில் ப்ரண்ட்லைன்மிலேனியம் பள்ளி மாணவர் ஜோ ஜெப்ரி உயரம் தாண்டுதல்போட்டியில் 1.78மீ தாண்டி தேசிய அளவில் நான்காமிடம் பெற்றார். போட்டிகளில் வெற்றி பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளையும் அதற்கு உறுதுணையாக இருந்த விளையாட்டுஆசிரியர்கள் நந்தகுமார் மற்றும் ராஜலட்சுமி ஆகியோரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி,இயக்குநர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி சக்திநந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.
    • மழை நடனம், சாகசப் பூங்கா உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்தது.

    திருப்பூர் :

    திருப்பூர் பிரன்ட்லைன் மிலேனியம் பள்ளியில், குழந்தைகளின் திறமைகளை வெளிக் கொணரும் வகையில், 'சிசுஉத்சவ்' நிகழ்ச்சி 8வது ஆண்டாக கொண்டாடப்பட்டது.

    இதில், மாவட்டத்தை சேர்ந்த, 700க்கு மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்றனர். பாட்டு, நடனம், சமையல், கதை சொல்லுதல், கணிதத் திறமைகளை வெளிக் கொணரும் வகையிலான போட்டி, யோகா, வாசித்தல், அறிவை சோதித்தல், விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

    விழாவின் ஒரு பகுதியாக, மழை நடனம், சாகசப் பூங்கா, மேஜிக், உருவப்படம் வரைதல் உள்ளிட்ட பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் நடந்தது.

    போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, பள்ளி இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி சக்திநந்தன், பிரன்ட்லைன் குழு பள்ளிகளின் முதல்வர்கள் பதக்கம் மற்றும் கோப்பைகளை வழங்கினர்."

    • துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.
    • திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது.

    திருப்பூர்:

    திருப்பூர் பிரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. விழாவில் மழலைச் செல்வங்கள் தங்களது இனிமையானக் குரலில் பாடல் பாடியும், நடனம் மற்றும் நாடகம் வாயிலாக இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை நம் கண் முன்னே கொண்டு வந்தனர். மேலும் கிறிஸ்துமஸ் ஏன் கொண்டாடுகிறோம் என்பது பற்றியும் இயற்கை, உயிரினங்கள் மற்றும் மனிதர்களை இறைவன் எவ்வாறு உருவாக்கினார் என்பது பற்றியும் தத்ரூபமாக நடித்துக் காண்பித்து அனைவரது பாராட்டையும் பெற்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைத்து மழலைச் செல்வங்களையும் பள்ளியின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன், துணை செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் பள்ளியின் முதல்வர் லாவண்யா ஆகியோர் பாராட்டினர்.

    • ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது.
    • உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ப்ரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில்தான் உத்சவ் (ஜாய் ஆப் கிவ்விங்) வார விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர். பாலசுப்பிரமணியன் மற்றும் பரசுராமன் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவ- மாணவிகள் முதியோர் இல்லங்களுக்கு உதவிடும் வகையில், ரூ.2.15 லட்சம் நிதி திரட்டி தானம் வழங்கினர்.

    தங்களது இந்த செயலால் முதியோர்கள் எவ்வாறு பயனடைவார்கள் என்பதை அறிந்துகொண்டனர். மேலும், உரிய நேரத்தில் உதவிதேவைப்படுகி றவர்களுக்கு உதவி செய்வோம் என உறுதி எடுத்துக்கொண்டனர். மாணவர்கள் திரட்டிய நிதி 600 முதியோர் இல்லங்களை பராமரித்து வரும் ஹெல்ப் ஏஜ் இந்தியா முதியோர் இல்லங்களின் பிரதி நிதி ரேச்சல் சாம்சனிடம் வழங்கப்பட்டது. நிதி வழங்கும் நிகழ்ச்சி பள்ளியில் 2007ம் ஆண்டு முதல் தொடங்கி

    நடந்து வருகிறது. பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குனர் சக்தி நந்தன், துணைச்செயலாளர் வைஷ்ணவி நந்தன் மற்றும் முதல்வர் லாவண்யா ஆகியோர் நிதி வழங்கிய மாணவ, மாணவிகளை பாராட்டினர்.

    • நேர்மையாக வாக்களிப்பது முறையினை மாணவர்கள் அறிந்து கொண்டனர்.
    • குழுக்களின் தலைவர் மற்றும் துணை தலைவர்கள் பதவியேற்றனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் ப்ரண்ட்லைன் மிலேனியம் பள்ளியில் மாணவர் பேரவை தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் மாணவர்கள் அனைவரும் கணினி வாயிலாக தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். இதன் மூலம் தங்களுடைய வாக்கின் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் எவ்வாறு நேர்மையாக வாக்களிப்பது என்ற முறையினையும் மாணவர்கள் அறிந்து கொண்டனர்.

    தேர்தலில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதவியேற்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக பள்ளி தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி, இயக்குனர் சக்திநந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    மாணவ பேரவையின் மாணவ தலைவராக 12-ம்வகுப்பு மாணவர் பிரதோஷ் மற்றும் மாணவ தலைவியாக 12-ம்வகுப்பு மாணவி அருந்ததி ஆகியோர் பதவியேற்றனர்.

    நிகழ்ச்சியில் ஹெர்குலிஸ், ஒரையன், லைரா, பெகாசிஸ் ஆகிய குழுக்களின் தலைவர் மற்றும்துணை தலைவர்கள் பதவியேற்றனர். மேலும் பிரஸ் கிளப், கல்ச்சுரல் கிளப், மேட் சயின்ஸ் கிளப், மேஜிக்கல் மேக்ஸ், டெக்னோ கிளப், நேச்சர் கிளப் ஆகிய கிளப்களுக்கு தலைவர் மற்றும் துணை தலைவர்களும் பதவியேற்றனர். நிகழ்ச்சியில் மொத்தமாக 27 மாணவ, மாணவிகள் பதவியேற்று கொண்டனர். பதவியேற்ற மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    விழாவில் பள்ளி முதல்வர் லாவண்யா, துணை முதல்வர்,தலைமையாசிரியை, ஒருங்கிணைப்பாளர், ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து ெகாண்டனர். பள்ளியின் இயக்குனர் - செயலாளர் பேசுகையில் , தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவரும் தங்களுக்கு வழங்கப்பட்ட பொறுப்புகளை உணர்ந்து பொறுப்புடன் செயல்பட்டு மற்ற மாணவர்களுக்கு முன்னுதாரணமாக திகழுமாறு அறிவுரை வழங்கினார்.  

    • தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • பொதுபிரிவு, சிறப்புப்பிரிவு மற்றும் சேம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளில் யோகாசன போட்டி நடைபெற்றது

    திருப்பூர்

    திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மற்றும் யோகா கலாசார சங்கம் ஆகியவை சார்பில், மாநில அளவிலான யோகாசன போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்களாக பிரண்ட்லைன் பள்ளிகளின் தாளாளர் சிவசாமி, மண்டல யோகா டிரஸ்ட் தாளாளர் பாலகிருஷ்ணன், இண்டர்நேஷனல் யூத் யோகா சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியானது பொதுபிரிவு, சிறப்புப்பிரிவு மற்றும் சேம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. சேம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி நேகா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரோஹித் ஆகியோர் வெற்றி பெற்று, அந்தமானில் நடைபெறும் உலக அளவிலான யோகாசன போட்டிக்குத் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரண்ட்லைன் பள்ளிகளின் தாளாளர் சிவசாமி பரிசுகளையும், சுழல் கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். இதேபோல், பிரண்ட் 1 லைன் குழுமப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்தனர். அவர்களுக்கும் பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில், பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா, யோகா ஆசிரியர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×