search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் மாநில அளவிலான யோகாசன போட்டி -  500 மேற்பட்ட மாணவ- மாணவிகளின் பங்கேற்பு
    X

    வெற்றி பெற்ற மாணவிக்கு பள்ளியின் தாளாளர் சிவசாமி கோப்பையை வழங்கிய காட்சி.

    பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளியில் மாநில அளவிலான யோகாசன போட்டி - 500 மேற்பட்ட மாணவ- மாணவிகளின் பங்கேற்பு

    • தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
    • பொதுபிரிவு, சிறப்புப்பிரிவு மற்றும் சேம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளில் யோகாசன போட்டி நடைபெற்றது

    திருப்பூர்

    திருப்பூர் பிரண்ட்லைன் மில்லேனியம் பள்ளி மற்றும் யோகா கலாசார சங்கம் ஆகியவை சார்பில், மாநில அளவிலான யோகாசன போட்டி பள்ளி வளாகத்தில் நடந்தது. இப்போட்டியில் தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    சிறப்பு விருந்தினர்களாக பிரண்ட்லைன் பள்ளிகளின் தாளாளர் சிவசாமி, மண்டல யோகா டிரஸ்ட் தாளாளர் பாலகிருஷ்ணன், இண்டர்நேஷனல் யூத் யோகா சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியானது பொதுபிரிவு, சிறப்புப்பிரிவு மற்றும் சேம்பியன்ஷிப் என மூன்று பிரிவுகளில் நடைபெற்றது. சேம்பியன்ஷிப் போட்டியில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த மாணவி நேகா, திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரோஹித் ஆகியோர் வெற்றி பெற்று, அந்தமானில் நடைபெறும் உலக அளவிலான யோகாசன போட்டிக்குத் தகுதி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பிரண்ட்லைன் பள்ளிகளின் தாளாளர் சிவசாமி பரிசுகளையும், சுழல் கோப்பைகளையும் வழங்கி பாராட்டினார். இதேபோல், பிரண்ட் 1 லைன் குழுமப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளும் பல்வேறு சுற்றுகளில் வெற்றி பெற்று சாதனை புரிந்தனர். அவர்களுக்கும் பாராட்டி, பரிசு வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிகளில், பள்ளியின் தாளாளர் சிவசாமி, செயலாளர் சிவகாமி, இயக்குநர் சக்திநந்தன், துணைச் செயலாளர் வைஷ்ணவி, பள்ளி முதல்வர் லாவண்யா, யோகா ஆசிரியர் நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×