search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ராணி மங்கம்மாள் பெயரில் கல்லூரி அமைக்க கோரிக்கை
    X

    ராணி மங்கம்மாள் பெயரில் கல்லூரி அமைக்க கோரிக்கை

    • ராணி மங்கம்மாள் பெயரில் கல்லூரி அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டது.
    • ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே டி. புதுப்பட்டியில் தெலுங்கர் மன்றம் பெருந்திரள் கூட்டம் நடைபெற்றது. தெலுங்கர் மன்ற தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். தமிழ்நாடு வெலம நாயுடு சங்க தலைவர் ஜெயராமன், மகாஜன சங்க மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தனர். தெலுங்கர் மன்ற பொதுச் செயலாளர் பார்த்தசாரதி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக விருதுநகர் முன்னாள் சேர்மன் சுப்புராஜ் மற்றும் கிளானிஸ் மருத்துவமனை இயக்குநர் மது புருஷோத்தமன் கலந்து கொண்டு பேசினார்.

    டி.கல்லுப்பட்டி பேரூராட்சி கவுன்சிலர் மகுடாபதி நன்றி உரையாற்றினார். கூட்டத்தில் ராணி மங்கம்மாள் பெயரில் கல்லுப்பட்டியில் பெண்கள் கலைக் கல்லூரி நிறுவ வேண்டும். கோடைகால அரண்மனையில் ராணி மங்கம்மாள் சிலை வைக்க வேண்டும். கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். ஓமந்தூரார் பெயரில் கலைக்கல்லூரி அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    Next Story
    ×