search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எனது மண், எனது தேசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி
    X

    கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் மரக்கன்றுகள் நட்டார்.

    எனது மண், எனது தேசம் விழிப்புணர்வு நிகழ்ச்சி

    • தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.
    • நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார்.

    சுவாமிமலை:

    விவேகானந்தா கலாம் பவுண்டேஷன், கும்பகோணம் இதயா மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்டம் ஆகியவை இணைந்து "எனது மண், எனது தேசம்" விழிப்புணர்வு நிகழ்ச்சி கும்பகோணத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) ஸ்ரீகாந்த் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு வைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியல் நேரு யுவகேந்திரா துணை இயக்குநர் திருநீலகண்டன் தலைமை தாங்கினார். மத்திய மக்கள் தொடர்பக சென்னை மண்டல இயக்குனர் காமராஜர், கல்லூரி முதல்வர் யூஜின் அமலா, கும்பகோணம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆனந்தராஜ், பூங்குழலி ஆகியோர் முன்னிலை வகித்தார்.விழாவை விவேகானந்தா கலாம் பவுண்டேசன் தலைவர் கணேசன் ஒருங்கிணைத்தார். இதில் கும்பகோணம் ரெட்கிராஸ் துணை தலைவர் ரோசரியோ, திருச்சி மக்கள் தொடர்பு அலுவலர்கள் தேவி பத்மநாபன், ரவீந்திரன், ஜெயகணேஷ், கும்பகோணம் ஒன்றிய வட்டார ஒருங்கிணைப்பா ளர் துரை.கார்த்திகேயன், கல்லூரியின் நாட்டு நலப்பணி திட்ட அலுவலர்கள் மற்றும் என்.எஸ்.எஸ்., ஒய்.ஆர்.சி. மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×